கோபியை மிரட்டும் ராதிகா… ராதிகாவைத் தூண்டிவிடும் கமலா! ‘பாக்கியலட்சுமி’ எபிசோட் ஹைலைட்ஸ்!
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’யின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
எபிசோட் சுருக்கம்!
கீழே விழுந்து கருக்கலைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ராதிகா, கோபியிடம் ‘’இனி நான் இங்க இருக்கமாட்டேன்… அம்மாவோட ஊருக்குப்போறேன்’’எனச்சொல்கிறாள்.
ராதிகாவின் அம்மா கமலா, ராதிகாவின் கருக்கலைந்ததற்கே காரணம் ஈஸ்வரிதான் என கோபியிடம் குற்றம் சாட்டுகிறாள். போலீஸில் புகார் கொடுப்பேன் என அதிர்ச்சி கொடுக்கிறாள்.
உடைந்துபோய் இருக்கும் ஈஸ்வரியைத் தேடிவரும் பாக்கியாவிடம், ‘’ஈஸ்வரி எந்தப்பிரச்சனையும் இல்லை’’ எனப்பொய் சொல்லி அனுப்புகிறார்.
ஈஸ்வரி இருந்தால் நான் வீட்டுக்குவரமாட்டேன் என்கிற ராதிகாவின் மிரட்டலுக்கு கோபி என்ன சொல்லப்போகிறான்?!
காட்சி - 1 - உடைந்துபோன ஈஸ்வரி
ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வரும் ஈஸ்வரி அப்படியே உடைந்து போய் சோஃபாவில் உட்கார்ந்து ராதிகா, ராதிகாவின் அம்மா கமலா, மகன் கோபி என மூவரும் பேசிய விஷயங்களை நினைத்து கண்ணீர் விட்டபடி இருக்கிறார்.
காட்சி -2 - கோபியை கடுப்பேற்றும் கமலா!
கோபி ராதிகாவிடம் ‘’ராதிகா உடம்பு எப்படி இருக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா’’ என்று கேட்டுவிட்டு ராதிகாவின் மகள் மயூவுடன் கிளம்ப, கமலா மயூவின் கையைப் பிடித்து நிறுத்துகிறார். ‘’எங்க போற மயூ… உனக்கு ஏதாவது வேணும்னா பாட்டி கிட்ட கேளு.. நான் வாங்கி தரமாட்டேனா ‘’என்று சொல்கிறார். ‘’ஏன் அத்தை என் பொண்ணு என் கூட வரக்கூடாதா?’’ என்று கேட்க ‘’உங்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு மாப்ள… இதுல உங்கள பத்தி எதுக்கு யோசிக்கணும்… என் பொண்ணையும் பேத்தியையும் நான் பார்த்துக்கிறேன் அவங்களுக்கு தேவையானத நான் வாங்கி கொடுத்துகிறேன்’’ என்று சொல்லிவிட்டு மயூவை அழைத்துச்செல்கிறாள்.
காட்சி - 3 - கோபியின் ஆறுதலும், அழுகையும்!
கோபி ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்ல ராதிகா ‘’உங்க அம்மா நம்ப குழந்தையை கொன்னுட்டாங்க… குழந்தையே இல்லாம போயிடுச்சு.. என்னால முடியல கோபி’’ என்று உடைந்து அழுகிறாள். ராதிகா அழுவதை பார்த்து கோபியும் கண்ணீர் விட்டு ‘’எனக்கு இந்த குழந்தை மேல ஆயிரம் ஆசை இருந்துச்சு.. பிறக்கப்போறது பையனா பொண்ணான்னு அவ்வளவு கனவு இருந்துச்சு தெரியுமா… எனக்கும் கஷ்டமாதான் இருக்கு’’ என்று ஆறுதல் சொல்கிறான்.
ரெண்டு வாரம் ஆபிஸுக்கு லீவ் போட்டு நல்லா ரெஸ்ட் எடு… அதுக்கு அப்புறமா வொர்க் எல்லாம் பாத்துக்கலாம்’’ என்று சொல்ல ‘’நீங்க சொல்லலைனாலும் நான் லீவு போடத்தான் போறேன்… ரெஸ்ட் எடுக்கத்தான் போறேன்... ஆனா... இங்க இல்ல ஊர்ல.
கோபியிடம் ராதிகா
காட்சி - 4 : மாமியாரைத் தேடிவரும் பாக்கியா!
அடுத்தநாள் காலை விடிய பாக்கியா ராதிகா வீட்டுக்கு வந்து கதவைத் தட்ட கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே வந்து பார்க்க, ஈஸ்வரி சோஃபாவில் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ‘’அத்தை நீங்க நல்லா இருக்கீங்களா… நைட்டுல இருந்து தனியாதான் இருக்கீங்களா?’’ என்று கேட்க ‘’இல்ல கோபி இருந்தான் இப்பதான் கிளம்பி போனான்’’ என்று பொய் சொல்கிறார் ஈஸ்வரி. ‘’நைட்டு சாப்பிட்டீங்களா… காபி குடிச்சீங்களா?’’ என்று கேட்க ‘’காபி இன்னும் குடிக்கல நான் போட்டு குடிச்சிக்கிறேன்… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ போ’’ என்று பாக்கியாவை அனுப்பி வைக்கிறாள். பாக்கியா கிளம்பி சென்றதும் ஈஸ்வரி கண்ணீர் விட்டு அழுகிறார்.
காட்சி - 5 ராதிகாவைத் தூண்டிவிடும் கமலா!
ஹாஸ்பிடலில் கோபி பில்லை கட்டிவிட்டு ராதிகாவிடம் ‘’காரிலேயே போலாமா.. இல்ல ஆம்புலன்ஸ் ஏதாவது ஏற்பாடு பண்ணவா?’’ என்று கேட்கிறான். கமலா ‘’அவ என்ன நடக்க முடியாமையா இருக்கா… கார் போதும்’’ என்று சொல்கிறார். கோபி ‘’ரெண்டு வாரம் ஆபிஸுக்கு லீவ் போட்டு நல்லா ரெஸ்ட் எடு… அதுக்கு அப்புறமா வொர்க் எல்லாம் பாத்துக்கலாம்’’ என்று சொல்ல ‘’நீங்க சொல்லலைனாலும் நான் லீவு போடத்தான் போறேன்… ரெஸ்ட் எடுக்கத்தான் போறேன்’’ என்று சொல்கிறாள். கோபி மொக்கை வாங்கியதை மென்று முழுங்கியபடி ‘’குட்’’ என்று சொல்ல, ராதிகா கோபியிடம் ‘’ஆனா நான் இருக்கப்போறது இங்க இல்ல… என் அம்மாவோட ஊருக்கு போகப்போறேன்’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
கோபி கடுப்பானவன் ‘’என்னது இது திடீர்னு… உடம்பு சரியில்லாத டைம்ல ட்ராவல் எல்லாம் பண்ண கூடாது… நீ எங்கேயும் போக வேண்டாம்’’ என்று சொல்ல ‘’ட்ராவல் கூட ஒரு நாள் பயம்தான்… ஆனா, உங்க அம்மாகூட இருக்கிறது என்னைக்கும் பயம்... என் பொண்ணு என் கூடவே வரட்டும் நான் பார்த்துக்கிறேன்’’ என்று சொல்கிறார் கமலா. ‘’இல்ல ராதிகா நான் உன்னை அனுப்ப மாட்டேன்’’ என்று கோபி சொல்ல என்னால இங்க இருக்க முடியாது என்று ராதிகா உறுதியாகச் சொல்கிறாள். கோபி திரும்பத் திரும்ப கெஞ்சி கேட்க கமலா ‘’நீங்க இவ்வளவு சொல்றதுனால ராதிகா இங்கேயே இருக்கட்டும்’’ என்று சொல்கிறார். கோபி ‘’ரொம்ப தேங்க்ஸ் அத்தை’’ என்று சொல்ல ‘’இருங்க மாப்ள… நான் இன்னும் சொல்லியே முடிக்கல… என் பொண்ணு உங்ககூட இருக்கணும்னா உங்க அம்மா அந்த வீட்ல இருக்க கூடாது’’ என அதிர்ச்சி கொடுக்கிறார். கோபி ‘’அது எப்படி… அவங்க எங்க போவாங்க?’’ என்று கேள்வி கேட்க ‘’அதான் அவங்க மருமகளோட அவ்வளவு பெரிய வீடு இருக்குல்ல… அங்க போகட்டும்’’ என்று சொல்கிறார்.
கோபியை மிரட்டும் கமலா!
‘’அவங்க என்ன நம்பி வந்திருக்காங்க… எப்படி அவங்கள போக சொல்ல முடியும்?’’ என்று கோபி கேட்க ‘’அப்போ நாங்க போறோம்’’ என்று ராதிகா கோபப்பட்டு சொல்கிறாள். ‘’மயூ படிப்பு என்ன ஆகிறது?’’ என்று கோபி கேட்க ‘’மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துப்பேன்… அதோட எங்களைப்பத்தி நீங்க யோசிக்கவேணாம்… எல்லாமே முடிஞ்சிடுச்சு'’ என்று ஷாக் கொடுக்கிறாள்.
‘’உங்க அம்மா இருக்க வீட்டுல என்னால இனி இருக்க முடியாது’’ என்று ராதிகா சொல்ல ‘’நான் அம்மாகிட்ட பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் கொடுக்கிறேன்’’ என்று கோபி சொல்ல ‘’அந்த முடிவு நான் சொன்ன முடிவா இருக்குமா?’’ என ராதிகா கேள்வி கேட்கிறாள். மேலும் கமலா ‘’உங்கம்மா அந்த வீட்லதான் இருப்பாங்கனா நான் போலீஸ்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுப்பேன். அதுக்கப்புறம் அவங்க இங்கே இருக்கணுமா அங்க இருக்கணுமா என்ற பேச்சுக்கே இடம் இல்லாமப் போகும்'’ என கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறாள்.
கோபி என்ன முடிவெடுக்கப்போகிறான் என்கிற கேள்வியோடு இன்றைய எபிசோட் முடிவடைந்திருக்கிறது.