காத்திருந்து கலங்கும் விஜயா.. வீடு தேடி வரும் வில்லங்கம்… ‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!
விஜயாவின் கடைசி மருமகளான ஸ்ருதியின் அம்மா சிறப்பு விருந்தினராக வந்து விஜயாவின் நடன பள்ளியை தொடங்கி வைக்கிறார். பின்னர் விஜயாவிடம் ‘’இந்த வயசுலயும் சாதிக்கணும்னு நினைக்கிறீங்க பாருங்க… நீங்க ரொம்ப கிரேட்’’ என பாராட்டுகிறார். ‘’நீங்க பரதம் ஆடி இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை’’ என்று சொல்ல விஜயா ‘’வாங்க குரு வணக்கத்தோடு ஆரம்பிச்சு ஆடி காட்டுறேன்’’ என்று சொல்லி காலில் சலங்கையை கட்டி குரு வணக்கம் செய்ய ரவியும் மனோஜும் ஓடி ஓடி வீடியோ எடுக்கின்றனர்.
அதன் பிறகு எல்லோரும் கிளம்பிச் செல்ல விஜயா இந்த மாசத்துக்குள்ள 100 பேர் சேர்ந்தால் போதும் என்று கனவு காண்கிறார். அதன் பிறகு அட்மிஷனுக்கு யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்க காலிங் பெல் அடிக்க சோபாவில் உட்கார்ந்து இருந்த விஜயா கெத்தாக உட்கார்ந்து ‘’இப்ப போய் கதவை திற’’ என்று பார்வதியிடம் சொல்கிறார்.
பிறகு பார்வதி கதவை திறக்க தண்ணி கேன் போட வந்திருப்பதாக ஒருவன் சொல்ல விஜயா கடுப்பாகிறார். பிறகு அவன் ‘’பாக்கி நிறைய இருக்கு’’ என்று பணம் கேட்க ‘’சேர்த்து வாங்கிக்க பா... நாளையில் இருந்து மூணு, நாலு கேன் போட வேண்டி இருக்கும். அதைவிட அதிகமா கூட தேவைப்படும்… நான் சொல்றேன்… நீ கொண்டு வந்து போடு’’ என்று சொல்கிறார்.
அதன் பிறகு மீண்டும் காலில் பெல் அடிக்க விஜயா திரும்பவும் ஆவலோடு எதிர்பார்க்க மளிகை சாமான் கொண்டு வந்திருப்பதாக ஒருவர் வந்து நிற்கிறார். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் காலிங் பெல் அடிக்க பார்வதி வெளியே போய் யார் என்று கேட்டு வெளியே வர ‘’பரதநாட்டியம் கிளாஸ் எடுக்கறீங்களா போர்டு எல்லாம் வச்சிருக்கீங்க’’ என்கிற குரல் கேட்டதும் விஜயா சந்தோஷப்பட்டு வெளியே ஓடி ‘’ஆமா… ஆமா… நான் தான் பரத நாட்டிய டீச்சர்… வாங்க’’ என்று உள்ளே அழைத்துச் செல்கிறார்.
‘’நிறைய ஏசி இருக்கு, லைட் எல்லாம் நிறைய இருக்கு கரண்ட் பில் நிறைய வரும் போலயே’’ என்று வந்த பெண் கேட்க ‘’ஆமா டான்ஸ் ஆட வரவங்க சௌகரியமா இருக்கணும்ல’’ என்று விஜயா அளந்து விடுகிறார். ‘’உங்க பொண்ணை எப்போ சேர்க்க போறீங்க?’’ என்று விஜயா கேட்க, அந்தப்பெண்ணோ ‘’எனக்கு பொண்ணே கிடையாது. பையன் மட்டும் தான்’’ என்று சொல்ல ‘’ஓ உங்க பையனை பரதநாட்டியம் கிளாஸ்ல சேர்க்கப் போறீங்களா’’ என்று விஜயா கேட்கிறார். ‘’நான் எதுக்கு சேர்க்கணும்’’ என்று அவர் சொல்ல விஜயா ‘’அப்போ எதுக்கு இதெல்லாம் விசாரிச்சீங்க?’’ என்று கேட்க ‘’நான் ஈபில இருந்து வரேன். இனிமே இது கமர்ஷியல் ஏரியா... நீங்க இப்போ கட்டுறதை விட மூணு மடங்கு அதிகமா கரன்ட் பில் கட்டணும். இதை ஃபில் பண்ணி ஈபில கொண்டு வந்து கொடுங்க’’ என்று ஃபார்மை கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறார்.
‘’ஏற்கெனவே நான் கரன்ட் பில் அதிகமாகத்தான் கட்டுறேன்’’ என்று பார்வதி புலம்ப விஜயா, ‘’விடு பார்வதி பசங்க வந்து சேர்ந்தா நிறைய சம்பாதிக்கலாம். நான் கரன்ட் பில் கட்டிடுறேன்’’ என்று சொல்கிறார். பிறகு விஜயா ஃபார்ம் ஃபில்லப் செய்து கொண்டிருக்க மீண்டும் ஒருவர் காலிங் பெல் அடிக்க இப்ப யாரு எதைக் கேட்டு வந்திருக்காங்கன்னு தெரியலையே என்று பார்வதி வெளியே செல்ல மகளுடன் வந்த ஒருவர் ‘’இங்க பரதநாட்டியம் கிளாஸ் நடக்குதா’’ என்று கேட்க ‘’பார்வதி அப்படியெல்லாம் எதுவும் நடக்கல’’ என்று சொல்கிறார். பேனர் எல்லாம் வச்சிருக்கீங்க என்று கேட்க ‘’அதெல்லாம் யாரோ மாத்தி வச்சிருக்காங்க’’ என்று சொல்ல அவர் தன்னுடைய மகளிடம் ‘’இங்கே கிளாஸ் நடக்கலையாமா… நாம வேற எங்கயாச்சும் போய் பார்க்கலாம்’’ என்று கிளம்ப விஜயா வெளியே ஓடிவந்து ‘’சார் சார்… நான்தான் பரதநாட்டிய டீச்சர்’’ என்று பேச ‘’நீங்க கிளாஸ் நடக்குதுன்னு சொல்றீங்க… இவங்க நடக்கலன்னு சொல்றாங்க ஒரே குழப்புறீங்களே.. நாங்க வேற நல்ல கிளாஸா பார்த்துக்கிறோம்’’ என்று கிளம்பிச் செல்ல விஜயா பார்வதியிடம் கோபப்படுகிறார்.
வீட்டுக்கு வந்த விஜயா சாப்பிடாமல் கூட ஒரே வருத்தமாக உட்கார்ந்து இருக்க அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க ‘’ஒருத்தர் கூட பரதநாட்டிய கிளாஸ்ல வந்து சேரல… நான் நினைச்சது எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது’’ என்று புலம்புகிறாள். அண்ணாமலை ‘’முதல்ல நீ ஒரு அஞ்சு பேரை சேத்துட்டு அதுக்கு அப்புறமா கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சு இருக்கணும்’’ என்று சொல்கிறார்.
பிறகு முத்து வந்து ‘’என்ன நாட்டிய சிகாமணி முகம் ஒரே வருத்தமா இருக்கு’’ என்று கேட்க அண்ணாமலை ‘’அவ கிளாஸ்ல யாருமே சேரலையாம்’’ என்று சொல்கிறார். விஜயாவோ ‘’இந்த ஊர்ல இருக்கவங்களுக்கு கலையோட அருமை தெரியல’’ என்று சொல்லி ‘’யாருமே நல்லா இருக்க மாட்டாங்க’’ என்று சாபம் விடுகிறாள். அண்ணாமலை ‘’உன் கிளாஸ்ல சேரலனா யாரும் நல்லா இருக்க மாட்டாங்களா?’’ என்று கோபப்படுகிறார். ‘’எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. நீதானே எண்ணெய் ஊத்தி திரி போட்ட அதான் விளங்காம போயிடுச்சு’’ என்று மீனாவை திட்டிவிட்டு செல்கிறாள் விஜயா.
பிறகு முத்து ‘’அவங்க திட்டினது எல்லாம் பெருசா எடுத்துக்காதே’’ என்று ஆறுதல் சொல்ல ‘’அது ஒன்னும் புதுசில்லையே… ஆனா அத்தை பாவம். ஒரு நாள் கட்டுன பூ விக்கலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்… அத்தைக்கும் அப்படித்தானே இருக்கும்’’ என்று மீனா வருத்தப்பட முத்து ‘’அவங்க கவலையை போக்க ஒரே ஒரு வழி தான் இருக்கு’’ என்று சொல்கிறான்.
மறுநாள் காலையில் விஜயா பார்வதி வீட்டில் யாராவது கிளாசில் சேர வருவார்களா என காத்திருக்க காலிங் பெல் அடிக்க பார்வதியும் விஜயாவும் நாம எதுவும் பேச வேண்டாம் வந்தவங்க பேசுறது வச்சி நாம பேசிக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர். கதவைத் திறந்து பார்க்க முத்து, மீனா கையில் தாம்பூல தட்டுடன் நிற்பதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
முத்து - மீனாவின் தாம்பூல தட்டும், விஜயாவின் அதிர்ச்சியுமாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.