Siragadikka Aasai : மீனாவால் தொக்காக மாட்டும் மனோஜ்... விஜயாவின் வார்த்தையால் ஆவேசமான அண்ணாமலை!
விஜயா மீனா மீதே கவரிங் நகைக்குறித்து பழிபோட, மீனாவும் முத்துவும் எப்படி ஒரிஜினல் நகையைக் கண்டிபிடிப்பது எனப் பிளான் போடுகிறார்கள்.
மனோஜின் மீது சந்தேகம் இருப்பதால் ஸ்ருதி உதவியுடன் அவனைப் பிடிக்க முத்துவும், மீனாவும் வழி கண்டுபிடிக்கிறார்கள்.
ஸ்ருதி மனோஜுக்கு நகைக்கடையில் இருந்து போன் செய்துவதுபோல பேசுகிறாள். மனோஜ் மாட்டுவானா?
நாடகமாடும் விஜயா!
விஜயா ''கொடுக்கும் போதே நகையை மாத்தி தான் கொடுத்திருப்பாங்க... நான் கொண்டு போய் வச்சத திருப்பி அப்படியே கொண்டு வந்து கொடுத்துட்டேன்'' என்று சொல்கிறாள். ''நகை மீனா வீட்ல தான் மாறி இருக்கணும்'' என்று விஜயா சொல்ல மீனா ''தேவையில்லாம எங்க மேல பழி போடாதீங்க'' என்று சொல்ல ''நீதானே அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வர'' என்று சொல்கிறாள். ''நாங்க ஒரு ரூபாயா இருந்தாலும் உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கிறவங்க'' என்று மீனா சொல்ல ''உனக்கே தெரியாம நகை மாறி இருக்கலாம்ல... உங்க வீட்ல தான் ஒரு திருடன் இருக்கானே... உன் தம்பி அவன் மாத்தி இருக்கலாம்ல'' என்று சொல்கிறாள். மீனா ''எங்க வீட்ல யாரும் அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க'' என்று திரும்பவும் சொல்கிறாள்.
மடக்கிய அண்ணாமலை!
விஜயா இப்படி அபாண்டமாக பேசுவதை பார்த்த அண்ணாமலை ''சும்மா தேவையில்லாம மத்தவங்க மேல பழி போட்டுட்டு இருக்காத... இதெல்லாம் என் அம்மா போட்ட நகை... அது எப்படி கவரிங் நகையா மாறுச்சு'' என்று மடக்கி கேள்வி கேட்க ''அப்படி கேளுப்பா'' என்று சொல்கிறான் முத்து.
மாமியார் மீது பழி போட்ட விஜயா!
உடனே விஜயா ''அவங்க போட்டதும் கவரிங் நகையோ என்னவோ'' என்று சொல்ல அண்ணாமலை ஆவேசம் அடைகிறார். ''வாய் இருக்குன்னு கண்டத பேசாத... எங்க அம்மா ஊருக்கே அள்ளி அள்ளி கொடுக்கிறவங்க... அவங்க கவரிங் நகை போட்டு ஏமாத்துறாங்களா'' என்று கேள்வி கேட்க விஜயா ''நான் அப்படி சொல்லலங்க, அவங்க ஊர்ல தான் நகை செஞ்சிட்டு வருவாங்க... செஞ்சி கொடுத்தவங்க கவரிங் நகையை மாற்றிக் கொடுத்திருக்கலாம்ல... அதான் சொல்றேன்'' என்று சொல்கிறாள்.
ரவி - ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி!
ரவியும் ஸ்ருதியும் ''அது எப்படி மீனா வீட்டு நகையும் கவரிங்கா மாறி... பாட்டி கொடுத்த நகையும் கவரிங்கா மாறியிருக்கும்... லாஜிக் இடிக்குதே... நம்ம வீட்ல தான் ஏதோ மாறி இருக்கு'' என்று ரவி சொன்னதும் ''அப்போ நான் தான் மாத்தினேன்''னு சொல்றீங்களா என்று விஜயா கோபப்படுகிறாள்.
ரோகிணியின் கேள்வியும் மீனாவின் கோபமும்!
ரோகிணி ''உங்க வீட்டுல கூட மாறி இருக்கலாம்ல மீனா... ஒருவேளை நீங்களே வித்துட்டு முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்தீங்களா'' என்று கேட்க மீனா ''எதுவும் தெரியாம பேசாதீங்க ரோகிணி'' என்று கோபப்படுகிறாள். முத்து ''இந்த திருட்டு வேலை பண்றதெல்லாம் மீனா கிடையாது... இங்க ஒருத்தன் இருக்கான்'' என்று சொல்ல மனோஜ் ''உங்க பிரச்சனையில் என்னை ஏண்டா இழுக்குற'' என்று கோபப்பட ரோகிணி ''அவர் இப்போ லட்ச கணக்குல லாபம் பாக்கறாரு... அவர் இப்படி சீப்பான வேலையெல்லாம் செய்ய மாட்டார்'' என்று சொல்கிறாள்.
போலீசில் கம்ப்ளெய்ன்ட்!
ஸ்ருதி ''போலீசில் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துடலாம்'' என்று சொல்ல விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ் ''போலீசா அதெல்லாம் எதுக்கு'' என்று பதற ''அப்பதானே உண்மை தெரியும்'' என்று சொல்ல ''நம்ம வீட்டு கௌரவம்தான் போகும்'' என்று சொன்னதும் அண்ணாமலை ''அதெல்லாம் வேண்டாம்'' என்று சொல்கிறார்.
முத்து போட்ட சபதம்!
''போலீஸ்லாம் வேண்டாம்... இந்த நகை எப்படி கவரிங் நகையா மாறுச்சுனு நானே கண்டு பிடிக்கிறேன்'' என்று முத்து சொல்ல விஜயாவும் மனோஜூம் கொஞ்சம் நிம்மதி அடைகின்றனர். ''ஒரு வழியா மீனாவோட தம்பி மேல பழியை போட்டு தப்பிச்சுட்டோம்... சும்மா சொல்லக்கூடாது நீ சூப்பரா சமாளிச்சமா'' என்று மனோஜ் ரூமுக்குள் விஜயாவிடம் பேச விஜயா, ''முத்து நான் சொன்னதை எல்லாம் நம்பி இருக்க மாட்டான்... அவன் போலீஸ் மாதிரி இன்வஸ்ட்டிகேஷன் பண்ணுவான்.. அவங்க உண்மைய கண்டுபிடிக்கிறதுக்குள்ள நாம நகைய மாத்தி வச்சாகணும்.. சீக்கிரமா பணத்த ரெடி பண்ற வழிய பாரு'' என்று கோபப்படுகிறாள்.
முத்துவுக்கு வந்த யோசனை, மீனா சொன்ன பிளான்!
மீனா, விஜயா சொன்ன வார்த்தைகளால் கடுப்பாக இருக்க முத்து ''மனோஜை போட்டு அடிச்சு விசாரிச்சா உண்மை தெரிஞ்சிடும்'' என்று சொல்ல மீனா ''அப்படியெல்லாம் எதுவும் பண்ணாதீங்க... அப்புறம் ரோகிணி பிரச்சனை பண்ணுவாங்க... வீட்டை விட்டு போறேன்னு சொல்லுவாங்க'' என்று சொல்கிறாள். ''மனோஜ் வாயால தான் உண்மையை வர வைக்கணும்'' என்று யோசிக்கும் முத்துவுக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றுகிறது. ''இதை கடையிலிருந்து பேசுற மாதிரி பேசி உண்மைய வர வைக்கலாம்'' என்று சொல்ல மீனாவுக்கு ஸ்ருதியை வைத்து பேச வைக்கலாம் என்று ஐடியா தோன்றுகிறது.
மனோஜை மடக்க கூட்டு சேர்ந்த மீனா, ஸ்ருதி!
ரவியின் ரெஸ்டாரன்ட்டில் முத்து, மீனா, ஸ்ருதி ஆகியோர் ஒன்று சேர்ந்து மனோஜுக்கு போன் போட்டு வேறொரு குரலில் நகை வாங்கியது பற்றி அனுபவம் கேட்பது போல பேசி உண்மையை வர வைக்க திட்டமிடுகின்றனர். கடையில் மனோஜ் தூக்க கலகத்தில் இருக்க ரோகிணி அவனைத் தட்டி எழுப்ப ''என்னை விட்டுடுங்க... என் பொருளை கொடுத்துடுங்க... என் 4 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துடுங்க... நகையை குடுத்துடுங்க'' என்று உளற ரோகிணி ''என்ன நகை? என்ன நாலு லட்சம்னு உளறிட்டு இருக்கீங்க'' என்று கேள்வி கேட்க மனோஜ் ''வீட்ல நடந்த பிரச்சனை எல்லாம் யோசிச்சிட்டு இருந்தேன்'' என்று சொல்லி சமாளிக்கிறான்.
மனோஜ், ரோகிணிக்கு வந்த ஃபோன் கால்!
ரோகிணி மனோஜிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு க்ரிஷ் போன் செய்ய போனை அட்டென்ட் செய்த ரோகினி தன்னை மறந்து ''சொல்லுடா செல்லம்'' என்று சொல்லி மாட்டிக்கொள்ள மனோஜ் ''யார்'' என்று கேட்டதும் ''ஃபிரெண்ட்'' என்று சொல்லி நைசாக நழுவி தனியாக சென்று பேசுகிறாள்.
அடுத்ததாக மனோஜுக்கு போன் கால் வர ஸ்ருதி குரலை மாற்றி நகைக்கடையில் இருந்து பேசுவதாக சொல்லி பேச்சு கொடுக்க மனோஜ் ''நான் எந்த நகையையும் வாங்கலையே'' என்று சொல்கிறான். ''நீங்கதான் ரெண்டு வளையல் ஒரு செயின் ஒரு தாலி வாங்கிட்டு போனீங்க... உங்களுக்கு 20% ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் இருக்கு'' என்று சொல்லி பேசி பிறகு நகை வாங்கிய அனுபவத்தை பற்றி கேட்க மனோஜ் திருதிருவென முழிக்கிறான்.
மாட்டிக்கப்போறாரு ஒருத்தரு... அவரை காப்பாத்தப் போறவரு செத்தாரு!