சிறகடிக்க ஆசை : கவரிங் நகையால் கலவரமான முத்து... மீனா வாங்கிய சத்தியம்… மாட்டப்போகும் மனோஜ்!
முத்துவும், மீனாவும் நகைக்கடையில் கவரிங் நகை என்கிற உண்மை தெரிந்து அவமானத்துடனும், அசிங்கத்துடனும் வெளியேறுகிறார்கள்.
பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் நகை விஷயத்தை இப்போதைக்கு வீட்டில் சொல்லக்கூடாது என முத்துவிடம் சத்தியம் வாங்குகிறாள் மீனா.
கிரிஷ்ஷிடம் செல்லம் என ரோகிணி ரகசியமாக போனில் பேச மனோஜ் யார் அந்த செல்லம் எனக் கேட்கிறான்.
நகைக் கடையில் அவமானப்பட்ட முத்து, மீனா!
முத்து மீனா கொண்டு வந்தது கவரிங் நகை என்பதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்க முத்து அந்த நகைகள் ‘’எப்படியும் மூணு லட்சம் போகுமா’’ என்று கேட்க கடைக்காரர் ‘’எழுந்திருயா’’ என்று திட்டுகிறார். ‘’கவரிங் நகையை கொண்டு வந்துட்டு தங்க நகை வேணுமா?’’ என்று கேட்க ‘கவரிங் நகையா’ என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ‘’இது மாதிரி எத்தனை கடைக்கு போய் ஏமாத்தி இருக்கீங்க’’ என்று கேட்க முத்து ‘’மரியாதையா பேசு’’ என சட்டையை பிடிக்க ‘’உங்களுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு’’ என்று கடைக்காரர் கோபப்பட்டு போலீசுக்கு போன் பண்ண சொல்கிறார்.
கெஞ்சிய மீனா!
மீனா ‘’அதெல்லாம் வேண்டாம்… இந்த நகை எப்படி கவரிங் நகையா மாறுச்சுனு எங்களுக்கே தெரியாது. கொடுக்கிற நகைய நீங்க பரிசோதனை பண்ணி பார்ப்பீங்கனு எங்களுக்கு தெரியாதா? அப்படி இருக்கும்போது கவரிங் நகையை எப்படி கொண்டுவந்து நகை வாங்க வருவோம்’’ என்று மீனா கேள்வி கேட்க ‘’என்னம்மா கதை விட்டுட்டு இருக்க’’ என்று கடைக்காரர்கள் கோபப்படுகின்றனர்.
ஓனரால் முடிவுக்கு வந்த பிரச்சனை!
முத்து மீனாவை பிடித்துக் கொடுக்க போலீசை வரச் சொல்லி போன் பண்ணப்போக கடையின் ஓனர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார். மீனாவை பார்த்ததும் ‘’மீனா என்னம்மா ஆச்சு’’ என்று கேட்க மீனா நடந்த விஷயத்தை சொல்ல ‘’என்னமா மீனா இதெல்லாம்? நீ அப்படி பண்ண மாட்டியே… எங்கேயோ தப்பு நடந்திருக்கு’’ என்று சொல்லி இருவரையும் விட சொல்கிறார்.
கோபப்பட்ட முத்து, மீனா வாங்கிய சத்தியம்!
வெளியே வந்த முத்து கோபமாக போனை எடுக்க, மீனா ‘’யாருக்கு போன் பண்ண போறீங்க’’ என்று கேட்க ‘’அப்பாவுக்கு விஷயத்தை சொல்ல வேண்டாமா’’ என்கிறான். மீனா ‘’என்ன நடந்துச்சுன்னு தெரியாம அதுக்குள்ள சொல்ல வேண்டாம்’’ என்று தடுத்து நிறுத்தி கூட்டிச் செல்ல முத்து கோபமாக கார் ஓட்டி வருகிறான். பிறகு ஒரு இடத்தில் காரை நிறுத்தி ‘’நீ இறங்கி வீட்டுக்குப் போ… அந்த மனோஜ் தான் ஏதாச்சு பண்ணி இருப்பான்... நான் போய் ரெண்டு அடி போட்டா உண்மை தெரிஞ்சிடும்’’ என்று சொல்கிறான்.
மீனா ‘’பாட்டி ஊருக்கு வரப் போறாங்க… அவங்களோட பிறந்தநாளை சந்தோஷமா கொண்டாடணும்… அதுவரைக்கும் இந்த விஷயத்தை பற்றி யார் கிட்டயும் எதுவும் கேட்க வேண்டாம். கேட்க மாட்டேனு சத்தியம் பண்ணுங்க’’ என்று சொல்ல முத்து ‘’நான் சத்தியம் பண்ண மாட்டேன்’’ என்று சொல்ல மீனா ‘’கையை எடுத்து தலையில் வைத்து சத்தியம் பண்ணுங்க’’ என்று சொல்ல முத்து வேறு வழியின்றி சத்தியம் செய்கிறான்.
பயங்கர சந்தோஷத்தில் அண்ணாமலை!
அம்மாவின் எண்பதாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அண்ணாமலை பயங்கர சந்தோஷத்தோடு இருக்கிறார். ரவி ஸ்ருதியை கூப்பிட்டு உட்கார வைத்து பலூன் டெக்கரேட் செய்யும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மனோஜையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்ல அவன் எனக்கு வேலை இருக்கு. என்னால இதெல்லாம் செய்ய முடியாது என்று ரூமுக்கு செல்ல ரோகிணியை கூப்பிட்டு செய்ய சொல்ல ரோகிணியும் வந்து அலங்கார வேலையில் ஈடுபடுகிறாள்.
அண்ணாமலையை பார்த்து ஆஃப் ஆன முத்து!
மீனாவின் மீது சத்தியம் செய்தாலும் கோபம் அடங்காத முத்து ஆவேசமாக இறங்கி வீட்டுக்கு உள்ளே வர அண்ணாமலை அலங்கார ஏற்பாடுகளை செய்து கொண்டு இருப்பதை பார்த்து ஆஃப் ஆகிறான். ‘’’பாத்தீங்களா… மாமா எவ்வளவு சந்தோஷமா இருக்காரு… இந்த நேரத்துல எதுவும் கேட்க வேண்டாம்’’ என்று மீனா சொல்ல முத்துவும் அமைதியாகி விடுகிறான்.
விஜயாவின் கேள்வி, முத்துவின் முறைப்பு!
‘’இவ்வளவு நேரமா எங்க ஊரு சுத்த போனீங்க? வீட்ல எல்லா வேலையும் அப்படியே இருக்கு சமைக்க வேண்டாமா’’ என்று விஜயா மீனாவிடம் சத்தம் போட ‘’சமைக்கணும்னா போய் சமைங்க’’ என்று முத்து கோபமாக பேச மீனா சமாதானம் செய்கிறாள். பிறகு அலங்கார வேலையில் ஈடுபடும் முத்து மனோஜை பார்த்த படி பயங்கர பிரஷருடன் பலூனை ஊத அது வெடித்து சிதறுகிறது. ரூமுக்கு வந்த மனோஜ் ரோகிணி வந்ததும் முத்து ‘’உன்கிட்ட ஏதாவது கேட்டானா’’ என்று கேட்க ரோகிணி ‘’நீ ஏன் டென்ஷனா இருக்க? எதுக்கு முத்து பத்தி கேட்டுட்டு இருக்க’’ என்று என்று கேட்க ‘’நான் போய் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்’’ என்று சமாளித்து உள்ளே செல்கிறான்.
செல்லத்தால் சிக்கிய ரோகிணி!
மனோஜ் பாத்ரூமுக்குள் சென்றதும் ரோகிணிக்கு அம்மாவிடம் இருந்து போன் கால் வர போனை எடுத்து ‘’சொல்லுமா… எதுக்கு போன் பண்ற’’ என்று கேட்க கிருஷ் ‘’நான்தான் பேசுறேன்… நான் மேக்சில் இப்போ 92 மார்க் எடுத்திருக்கேன்… அதுக்கு நீ தான் காரணம். அம்மா இல்லன்னு நினைச்சு ஸ்கூல் போகவே பிடிக்காது… ஆனா இப்போ நீ தான் அம்மானு தெரிஞ்சதும் நான் நல்லா படிக்கிறேன்’’ என்று பேச ‘’சூப்பர்டா செல்லம்’’ என்று ரோகிணி பேசிக்கொண்டிருக்க மனோஜ் வர போனை கட் செய்து விடுகிறாள்.
யார் அந்த செல்லம்? மனோஜ் கேட்ட கேள்வி!
‘’யார்கிட்ட பேசிட்டு இருக்க.. யார் அந்த செல்லம்’’ என்று மனோஜ் கேள்வி கேட்க ரோகிணி பதறிப் போகிறாள். என் பிரண்ட் பேரு செல்லம்மா அவளை செல்லம்னு தான் கூப்பிடுவோம் என்று சொல்லி சமாளிக்கிறாள். ‘’அப்ப என்ன கூப்பிட மாட்டியா’’ என்று மனோஜ் கேட்க ரோகினி அவனிடம் ரொமான்டிக்காக பேசி தப்பிக்கிறாள். ‘’பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கலாம்’’ என்று ரோகிணி கேட்க மனோஜ் ‘’அதெல்லாம் எதுக்கு’’ என்று சொல்கிறான். ‘’எல்லாரும் கிப்ட் கொடுப்பாங்க நாமளும் ஒரு கிப்ட் கொடுக்க வேண்டாமா’’ என்று கேட்க ‘’சரி ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விடலாம்’’ என்று மனோஜ் முடிவெடுக்கிறான்.
அடுத்து ஸ்ருதி பாட்டிக்காக ஒரு போன் கிப்ட் பண்ணப் போவதாகச் சொல்கிறாள். ரவி தனது கையால் கேக் பேக் செய்து கொடுக்கப் போவதாக சொல்கிறான்.
ரைட்டு… அப்போ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நகை பிரச்சனை வெடிக்கப்போகுது!