Siragadikka Aasai : கவரிங் நகை என கண்டுபிடித்த சுதா... பதறிப்போன விஜயா… ஸ்ருதி கொடுத்த ட்விஸ்ட்!
பாட்டியின் பிறந்தநாள் விழாவுக்கு வரும் ஸ்ருதியின் அம்மா மீனாவின் கழுத்தில் இருப்பது கவரிங் நகை என்பதைக் கண்டுபிடிக்கிறாள்.
ஸ்ருதி அம்மாவை அதட்டி பிரச்சனையை முடித்துவைக்க, முத்துவை இன்னமும் தேடுகிறார் மீனா.
குடும்பத்தினர் கிஃப்ட் கொடுக்க ஆரம்பிக்க மனோஜும், ரோகிணியும் பாட்டியிடம் பாராட்டுபெறுகிறார்கள்.
உளறி சமாளித்த விஜயா!
டிவி குறித்து ‘’அது பழசுதான்’’ என்று விஜயா உளற, ரோகிணி ‘’என்னது பழசா? அப்போ இது புது டிவி இல்லையா’’ என்று கேட்டதும் ‘’கடை பழசு பொருள் புதுசு’’ என சமாளிக்கிறாள். மீனா ரெடி ஆகி நகை எல்லாம் போட்டுக்கொண்டு வெளியே வர அதை பார்த்து விஜயா, மனோஜ் பதறுகின்றனர். ‘’பாட்டி இப்பதான் இன்னும் அழகா லட்சணமா இருக்க’’ என்று சொல்கிறார்.
வீட்டுக்கு வரும் மீனாவின் குடும்பம்!
மீனாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வருகின்றனர். மீனா அவர்களை வரவேற்க உள்ளே வந்தவர்கள் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். சீதாவிடம் ‘’எப்படி படிக்கிற’’ என்று கேட்க ‘’நல்லா படிக்கிறேன் பாட்டி… இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சிடும்’’ என்று சொல்கிறாள். உடனே பாட்டி ‘’அப்புறம் என்ன அடுத்து கல்யாணம் தானா’’ என்று கேட்க சீதா ‘’அதுக்குள்ள எல்லாம் கல்யாணம் வேண்டாம்… வேலைக்கு போகணும்’’ என்று சொல்ல அவளது அம்மா ‘’நல்ல இடமா கிடைச்சா குடுத்துட வேண்டியதுதான்’’ என்று சொல்கிறாள்.
இளக்காரம் செய்து வாங்கி கட்டிய விஜயா!
‘’நல்ல இடம்னா எப்படி உங்க பெரிய பொண்ணுக்கு கிடைச்ச மாதிரியா? அதுக்கு இன்னொருத்தர் ட்ரெயின் ஓட்டணும் இன்னொருத்தர் விழுந்து சாகணும்’’ என்று பேச நாச்சியார் பாட்டி கோபமாகி விஜயாவை பிடித்து திட்டுகிறார். ‘’வயசு ஆச்சே தவிர இன்னும் கொஞ்சம் கூட புத்தி வரல’’ என்று கோபப்படுகிறார். விஜயா ‘’என்ன அத்தை நான் நடந்தது தானே சொன்னேன்’’ என்று சொல்ல, அண்ணாமலை ‘’உன்னை யாருனா கேட்டாங்களா’’ என்று அடக்குகிறார்.
சுதாவின் என்ட்ரி, விஜயாவின் வரவேற்பு!
அடுத்ததாக சுதா வீட்டுக்கு வர விஜயா ‘’வாங்க சம்மந்தி வாங்க’’ என்று ஓடி ஓடி வரவேற்கிறாள். மீனா ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த பிறகு கழுத்தில் இருக்கும் நகையை பார்த்து அது கவரிங் என தெரிந்து கொள்கிறாள். உடனே மீனாவிடம் ‘’என்ன மீனா உன் புருஷன் இல்லையா’’ என்று கேட்க ‘’அவர் சவாரிக்கு போயிருக்காரு’’ என்று சொல்கிறாள். ‘’ஒரு நாள் கூட லீவ் போடாம வேலைக்கு போறாரு… அப்படி இருந்தாலும் உனக்கு தங்க நகை வாங்கி போட முடியலையா? கவரிங் நகையா போட்டுக்கிட்டு இருக்க’’ என்று கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ் விழி பிதுங்கி நிற்கிறான்.
விஜயா கேட்ட கேள்வி… வீம்பு பிடிக்கும் சுதா!
‘’என்ன சம்மந்தி சொல்றீங்க’’ என்று விஜயா கேட்க சுதா ‘’ஆமா சம்மந்தி எல்லாமே கவரிங் நகை மாதிரி தான் தெரியுது… அதனாலதான் கேட்டேன்’’ என்று சொல்ல ‘’மீனா இல்ல… தங்க நகைதான்’’ என்று சொல்கிறாள். மீனாவின் அம்மாவும் ‘’தங்க நகைதான் எங்களால் முடிந்ததை போட்டு அனுப்பினோம்’’ என்று சொல்ல சுதா ‘’நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னுதானே… அப்படி இருக்கும்போது எதுக்கு மீனா பொய் சொல்ற’’ என்று கேள்வி கேட்க நாச்சியார் பாட்டி ‘’என்னம்மா நீ அந்த நகையை தேர்ந்தெடுத்தது நான் தான்… விட்டா நகையை உரசி காட்ட சொல்லுவ போல’’ என்று கோபப்பட ‘’அய்யோ அப்படி இல்லம்மா, கவரிங் மாதிரி தெரிஞ்சது… அதனால கேட்டேன்’’ என்று சொல்ல ஸ்ருதி ‘’அவங்க என்ன நகை போட்டா உனக்கு என்னமா’’ என்று கோபப்படுகிறாள்.
ரவி, சீதாவின் விளையாட்டு!
ரவி, சீதாவின் கல்யாணம் பற்றி பேச ‘’ஸ்ருதி உனக்கு கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு பையன் கிடைக்க மாட்டானா’’ என்று பதில் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாட இதை பார்த்து சுதா கடுப்பாகிறாள். விஜயா ‘சம்மந்தி வேற கடுப்பாகுறாங்க’ என்று பதற சுருதி வெளியே வந்து இருவரையும் முறைக்க விஜயா பெரிய பிரச்சனையாகப் போகுது என்று சொல்ல கடைசியில் சுருதியும் அவர்களோடு சேர்ந்து விளையாடி பல்பு கொடுக்கிறாள்.
வீட்டுக்கு வராத முத்து, விஜயா சொன்ன வார்த்தை!
கேக் கட் பண்ண தயார் செய்து பாட்டியை கூப்பிட ‘’இன்னும் முத்து வரலையே’’ என்று சொல்ல’’ அவன் எந்த கடையில தவழ்ந்துட்டு கிடக்கிறானோ? அவன் வர வரைக்கும் எல்லாரும் காத்துகிட்டு இருக்க முடியுமா’’ என்று சொல்ல ‘’அதெல்லாம் வந்துடுவான்’’ என்று பாட்டி சொல்கிறார்.
கிஃப்ட் கொடுக்கும் குடும்பம்!
முதல் ஆளாக மனோஜ் ‘’உங்களுக்கு பிடிச்ச நவரத்தின மாலை வாங்கி வந்திருக்கேன்'’ என்று சொல்லி கழுத்தில் போட்டுவிட ‘’நல்லா இருக்கு’’ என்று சொல்கிறாள் பாட்டி. அதன் பிறகு ரோகிணி ‘’பாட்டி நான் ஏற்கனவே உங்களுக்கு கிஃப்ட் கொடுத்துட்டேன்’’ என்று சொன்னதும் ‘’அதான் பள பளன்னு மாத்தி விட்டுட்டியே’’ என்று சொல்கிறார்.
முத்து எங்கதான்பா போனான்?!