Siragadikka Aasai : பாட்டி கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்... மீனா, முத்து போட்டியில் வெல்வார்களா?
மீனாவின் அட்வைஸ்!
மீனா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு ''நாளைக்கு பாட்டியோட 80-வது பிறந்தநாள். அதனால வீட்ல அலங்காரம் பண்ணிட்டு இருந்தோம்'' என்று சொன்னதும் ''ஆமா... அண்ணாமலை அண்ணாகூட போன் பண்ணி வர சொல்லி இருந்தாரு'' என்று சொல்ல மீனா ''ஆமா... சாயங்காலம் வந்துருங்க... வீட்ல எதுவும் சமைக்க வேண்டாம் நைட்டு இங்கேயே சாப்பிட்டுக்கலாம்'' என்று சொல்கிறாள்.
''பாட்டிக்கு என்ன வாங்கித் தருவது'' என்று மீனாவின் அம்மா கேட்க ''உன் மனசுக்கு தோன்றத வாங்கிட்டு வா'' என்று மீனா சொல்ல முத்து போனை வாங்கி ''அத்தை நீங்க வந்தா மட்டும் போதும்... எதுவும் பெருசா செலவு எல்லாம் பண்ணாதீங்க'' என்று சொல்கிறான். அதன் பிறகு மீனா ''நாம என்ன வாங்கி கொடுக்கிறது'' என்று கேட்க ''அதான் நகை வாங்கித் தர போறது இல்லையே... வேற என்ன வாங்கித் தர முடியும்'' என்று முத்து டென்ஷனாகவே பேச மீனா ''நீங்க கோபத்தை விலக்கி வெச்சிட்டு யோசிங்க கண்டிப்பா ஒன்னு தோணும் என்று சொல்கிறாள்.
பாட்டியின் வருகை, முத்துவின் சோகம்!
அடுத்ததாக முத்து பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கிய பாட்டியை காரில் அழைத்துக் கொண்டு அமைதியாகவே வர ''உனக்கு என்னடா ஆச்சு... எதுக்கு மூஞ்ச தொங்க போட்டுக்கிட்டு வர'' என்று கேட்கிறார். ''உடம்பு எதுவும் சரியில்லையா'' என்று கேட்க முத்து ''அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி'' என்று சொல்கிறான். வழியில் ஒரு பெண் கழுத்து நிறைய நகை போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்த பாட்டி ''இந்த ஊரு அவ்வளவு பாதுகாப்பாக ஆகிடுச்சா? அந்த பொண்ணு கழுத்து நிறைய நகை போட்டுட்டு போறா? யாருக்கு தெரியும் அது கவரிங் நகையாக கூட இருக்கலாம்.. இப்பலாம் தங்கம் எது, கவரிங் எதுனு கண்டுபிடிக்க முடியல'' என்று சொல்கிறார். முத்து ''கண்டுபிடிக்கணும்'' என்று சொல்ல ''அவ யாரோ ஒருத்தி அதை நீ எப்படி கண்டுபிடிப்ப'' என்று பாட்டி கேட்க முத்து எதையோ சொல்லி சமாளிக்கிறான்.
மீனாவை விலக்கிய விஜயா!
நாச்சியார் பாட்டி வந்து வீட்டில் இறங்கியதும் முத்து ''மீனாவை ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்'' என்று சொல்ல விஜயா மீனா கரைத்த ஆரத்தியை வாங்கி ரோகினி மற்றும் ஸ்ருதியை கூப்பிட்டு நீங்க போய் ஆரத்தி எடுங்க என்று அனுப்பி வைக்க மீனா பின்னாடி தயங்கி நிற்க பாட்டி ''என்ன ரெண்டு மருமகள் மட்டும்தான் இருக்காங்க... மீனா எங்க'' எனக்கேட்டு மீனாவையும் கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்ல விஜயா முதல் பல்பு வாங்குகிறாள்.
அலங்காரத்தைப் பார்த்து வியந்த நாச்சியார் பாட்டி!
வீட்டுக்குள் நுழைந்த நாச்சியார் பாட்டி அலங்காரத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார். ''நான் உங்களுக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்'' என்று சொன்னதும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை பதிலாக சொல்ல பாட்டி ''அதெல்லாம் இல்ல இது வேற'' என்று சொல்கிறார். இறுதியாக முத்து ''ஏதாவது போட்டி வெச்சி பரிசு தர போறீங்களா'' என்று கேட்க ''நீ தான்டா என் மனசை சரியா புரிஞ்சு வச்சிருக்க... ஆமா போட்டிதான்... எல்லாரும் எனக்கு கிப்ட் வாங்கி வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும்... என் மனசுக்கு புடிச்ச மாதிரி கிப்ட் தருபவர்களுக்கு நான் ஒரு பரிசு தரப் போறேன்'' என்று சொல்கிறார். விஜயா என்ன கிப்ட் அத்தை என்று கேட்க பாட்டி ''கிட்ட வா'' என்று கூப்பிட்டு ''அதை பிரிக்கும் போது உனக்கே தெரியும்'' என்று பல்பு கொடுக்கிறார்.
பாட்டியின் மனசை கவர போட்டி போடும் குடும்பம்!
பாட்டி பரிசு கொடுப்பதாக சொன்னதும் அவரது மனசை கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என ஆளாளுக்கு யோசிக்க தொடங்குகின்றனர். மனோஜ் ''புடவை மட்டும் பத்தாது... வேற ஏதாவது வாங்கி தரணும்'' என்று யோசிக்க ரோகிணி ''நான் மேக் ஓவர் செட்டு வாங்கி வச்சிருக்கேன். பாட்டிக்கு மேக்கப் போட்டு விட போறேன்'' என்று சொல்கிறாள். மனோஜ் ''அதெல்லாம் பத்தாது வேற என்ன செய்யலாம்'' என்று கேட்க ரோகிணி ''பாட்டிக்கு என்ன பிடிக்கும்னு யோசி'' என்று சொல்ல மனோஜ் யோசிக்கத் தொடங்குகிறான்.
பாட்டிக்கு இவர்கள் சர்ப்ரைஸ் தரப்போகிறார்களா.... நோ... நோ... பாட்டிதான் இவர்களுக்கு சர்ப்ரைஸ் தரப்போகிறார்!