'சிறகடிக்க ஆசை' இன்று : மனோஜின் பய கெட்அப்பும், முத்துவின் உண்டியல் உருட்டும்!
முத்துவை பாராட்டிய கார்த்திக்!
கார்த்தி ''நீ இன்னும் நல்லா வளரணும் முத்து... ரெண்டு கார் நாலு ஆகணும்... நாலு எட்டு ஆகணும்... என்னை மாதிரி நிறைய பேர் உன்கிட்ட வேலை செய்யணும். நீ பெரிய தொழிலதிபராகணும்'' என்று சொல்ல அதை கேட்டு மீனா, அண்ணாமலை சந்தோஷப்பட மனோஜ் ''ரெண்டு கார் வச்சிருந்தா தொழிலதிபரா'' என்று ரோகிணியிடம் பேச ரோகிணி ''அமைதியா இரு... அவன் காதுல விழுந்து பிரச்சனையாகப் போகுது'' என்று திட்டுகிறாள்.
பிறகு மனோஜ் ''இவன் தொழிலதிபரா'' என்று கேட்க முத்து ''இவன் தான் பெரிய தொழிலதிபர் 4 லட்சத்தை ஏமாந்துட்டு வந்திருக்கான்'' என பதிலடி கொடுக்க விஜயா ''அவன் என்னடா தப்பா சொல்லிட்டான்'' என்று சப்போர்ட் செய்து பேச முத்து கலாய்த்து விடுகிறான்.
சபதம் போட வந்த மீனா!
''அவர் தொழிலதிபரா ஆகத்தான் போறாரு... நீங்க பார்த்துட்டே இருங்க... கூடிய சீக்கிரம் இந்த ரெண்டு கார்'' எனப் புது சபதம் போட வர முத்து ''ஏற்கெனவே போட்ட சபதமே போதும்... முதல்ல அதை முடிச்சு வைக்கலாம்'' என்று தடுத்து நிறுத்துகிறான்.
ஜோசியரை தேடி வந்த மனோஜ்!
மனோஜ் தன்னுடைய பார்க் நண்பன் சந்தோஷிடம் ''எனக்கு சுத்தி இருக்கவங்களால பிரச்சனைனு ஒரு லெட்டர் வந்தது... ரொம்ப பயமா இருக்கு'' என்று ஜோசியர் ஒருவரை பார்க்க கூட்டி வருகிறான். அவர் ''என்னாச்சு என்ன பிரச்சனை'' என்று கேட்க மனோஜ் லெட்டரை கொடுத்து ''இந்த லெட்டர்ல இருக்குற மாதிரி எனக்கு பிரச்சனை வருமா'' என்று கேட்கிறான். ''உன் மூஞ்சைப் பார்த்தா நிறைய தப்பான வேலை பண்ற மாதிரி தான் இருக்கு'' என்று சொல்லி ஜோசியர் ''கண்டிப்பா பிரச்சனை வரும்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிரச்சனையிலிருந்து தப்பிக்க என்ன பண்ணனும் என்று மனோஜ் பரிகாரம் கேட்க ஜோசியர் ''கர்ணனை காப்பாற்றியது அவன் செய்த தான தர்மம்தான். உன்னை பிரச்சனைகள்ல இருந்து காப்பாற்ற போறது.... உன்னுடைய உடைதான்... இந்த மாதிரி எல்லாம் நீ டிரஸ் பண்ண கூடாது... வாரத்தின் ஏழு நாளும் நான் சொல்ற மாதிரி டிரஸ் போடணும்... ஒவ்வொரு கலருக்கும் ஒரு சக்தி இருக்கு'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரை சொல்லி லிஸ்ட்டை போடுகிறார்.
இதைக் கேட்ட மனோஜ் ''பூஜை பண்ண சொல்லி ஏதாவது பரிகாரம் பண்ணுவீங்கன்னு பார்த்தா டிரஸ் மாத்த சொல்றீங்க'' என்று கேட்க ''நீ இப்படித்தான் டிரஸ் பண்ணனும் இல்லன்னா நடுத்தெருவுக்கு வந்து சாப்பாட்டுக்கு சிங்கி தான் அடிக்கணும்'' என்று சொல்கிறார். அடுத்து மனோஜ் சட்டையை கழட்ட வைத்து ஒரு மஞ்சள் டவலை கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொல்கிறார். ''இந்த துணி எல்லாம் உன் பொண்டாட்டி மட்டும்தான் துவைக்கணும். வேற யாராவது தொட்டா உன்னுடைய கதை முடிஞ்சு போச்சு'' எனவும் எச்சரிக்கிறார்.
உண்டியலுடன் வந்த முத்து!
முத்து வீட்டுக்கு ஒரு உண்டியலை வாங்கி வர அண்ணாமலை ''எதுக்கு இது'' என்று கேட்டுக் கொண்டிருக்க வெளியே வந்த விஜயா ''உங்களுக்கு இந்த நிலைமை வரும்னு தெரியும். ஆனா, இவ்வளவு சீக்கிரம் வரும்னு யோசிக்கல. ரூம் கட்டுறதுக்காக ரோடு ரோடா போய் பிச்சை எடுக்க போறீங்களா? பிச்சை எடுத்த காசுல தான் ரூம் கட்ட போறீங்களா'' என்று கண்டமேனிக்கு பேசுகிறாள்.
இந்த நேரத்தில் மனோஜ் அம்மா என பிச்சைக்காரன் போல வாசலில் வந்து நிற்க முத்து ''பிச்சைக்காரன் வந்துட்டான்'' என்று கலாய்க்க விஜயா மனோஜ் கெட்டப்பை பார்த்து டேய் உனக்கு என்னடா ஆச்சு என்று பதறுகிறாள். எதுக்குடா இப்படி டிரஸ்ஸை கையில வெச்சிக்கிட்டு டவல போர்த்திக்கிட்டு இருக்க'' என்று கேட்க ''இது என்னுடைய பர்சனல் நீங்க தலையிடாதீங்க'' என்று சொல்லி விடுகிறான்.
பூஜை அறைக்கு வந்த மனோஜ் விழுந்து விழுந்து சாமி கும்பிட விஜயா ஒண்ணும் புரியாமல் வேடிக்கை பார்க்கிறாள். அதன் பிறகு விஜயா கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் ரூமுக்குள் சென்று விடுகிறான். மனோஜ் ''என் விஷயத்துல தலையிடாதீங்க'' என்று சொன்னதை வைத்து விஜயாவை வெறுப்பேற்றுகிறான் முத்து.
உண்டியல் பணம்... பல்பு வாங்கிய ரோகிணி!
முத்து அண்ணாமலையை கூப்பிட்டு அவரது கையால் உண்டியலில் பணம் போட்டு சேமிப்பை தொடங்கி வைக்க சொல்ல அண்ணாமலை பணத்தை எடுத்து வர உள்ளே போக முத்து ''இந்தாப்பா இங்கேயே பணம் இருக்கு'' என்று எடுத்து கொடுக்கிறான். பிறகு அவர் விஜயாவையும் கூப்பிட்டு இரண்டு பேரும் சேர்ந்து உண்டியலில் பணம் போடுகின்றனர்.
பிறகு வீட்டுக்கு வந்த ரோகிணி ''என்ன ஆன்ட்டி உண்டியல் எல்லாம் வெச்சிருக்கீங்க... டொனேஷனா'' என்று கேட்க ''அப்படித்தான்மா'' என்று விஜயா நக்கலாக பேச முத்து ''இத எங்க வைக்கலாம் மனோஜ் ரூம்லயே வைக்கலாம்... திருடன் கையில சாவி கொடுத்தாதான் திருடு போகாமல் இருக்கும்'' என்று பல்பு கொடுக்கிறான். பிறகு அண்ணாமலை புதிய பிரச்சனை வேண்டாம் என்று திட்ட ''அதுவும் சரிதான் இப்ப அவன் இருக்கிற கெட்டப்பிற்கு இதை தூக்கிட்டு போய் கோயில் வாசல்ல பிச்சை எடுக்க உக்காந்தாலும் உட்கார்ந்திடுவான்'' என்று கலாய்க்கிறான்.
கோபப்பட்ட ரோகிணி!
ரோகிணி எதுக்கு முத்து இப்படி எல்லாம் பேசுறாரு என்று கோபப்பட ''நீங்களே உள்ள போய் பாருங்க உங்களுக்கே தெரியும்'' என்கிறாள் மீனா. ரோகிணி ரூமுக்குள் வர மனோஜ் கெட் அப்பை பார்த்து அதிர்ச்சி ஆகிறாள். ''மனோஜ் என்ன இது... ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க... முத்து உன்னை அடிச்சானா'' என்று கேட்டு சண்டை போட வர மனோஜ் ''அதெல்லாம் ஒன்னும் நடக்கல. நான் ஒரு ஜோசியரை பார்த்தேன்'' என்று நடந்த விஷயத்தை சொல்கிறான். ''இனிமே நான் இப்படித்தான் டிரஸ் பண்ண போறேன்'' என்று சொல்ல ரோகிணி அவனைப் பிடித்து திட்டி ''உன் பயம்தான் எல்லாத்துக்கும் காரணம்'' என்று சொல்ல ''எதுவா வேணாலும் இருக்கட்டும்... நான் யாரையும் நம்பற மாதிரி இல்ல ஒரு வாரத்துக்கு கடைக்கு வரமாட்டேன். நீயே ஷோ ரூமை பார்த்துக்கோ'' என்று சொல்கிறான்.
ரோகிணி ரூபத்துலதானே ஆபத்து இருக்கு?!