Siragadikka Aasai : முத்துவின் எலுமிச்சம் பழ டெக்னிக்... நடங்கும் விஜயா, மனோஜ்!
முத்துவின் எலுமிச்சம் பழ மந்திரத்தால் பயந்து நடுங்கும் மனோஜும், விஜயாவும் தூக்கமின்றி தவிக்கின்றனர்.
பார்வதியின் ஆலோசனைப்படி இன்னொரு சாமியாரைப்பார்த்து இன்னொரு எலுமிச்சம் பழத்தை வீட்டுக்கொண்டு வருகின்றனர்.
எலுமிச்சம் பழம் என்னவெல்லாம் செய்யப்போகுதோ?!
பயத்தில் நடுங்கும் மனோஜ்!
தூங்கமுடியாமல் தவிக்கும் மனோஜ் அப்படியே உட்கார்ந்து உறங்க, திடீரென அந்த எலுமிச்சம்பழம் கண் முன் வந்து போக தூக்கமில்லாமல் தவிக்கிறான். வாய் கோணையாகி விட்டதோ என்ற பயத்தில் கண்ணாடியை பார்த்து பிறகு ரோகிணியை தட்டி எழுப்பி வாய் சரியா இருக்கா, கோணையா இருக்கா என்று கேட்டு தொந்தரவு செய்ய அவள் ''இன்னொரு முறை என்னை எழுப்பினால் நான் கொடுக்குற அடியில அந்த வாய் கோணையாகிடும்'' என்று வார்னிங் கொடுக்கிறாள்.
விஜயா கொடுத்த அதிர்ச்சி!
வெளியே வந்த மனோஜ் பூஜை ரூம் கதவை திறந்து எலுமிச்சம் பழத்தை பார்க்க விஜயா பின்னாடி வந்து தோள் மீது கை வைக்க மனோஜ் பயத்தில் கத்த விஜயா ''ஏன்டா கத்துற? நான்தான்'' என்று சொல்ல இருவரும் தூக்கமில்லாமல் தவிப்பதால் பார்வதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்கின்றனர். எல்லா கதையையும் கேட்ட பார்வதி ''எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்காரு... காலையில் 7 மணிக்கு அங்க வந்து விடு'' என்று சொல்லி போனை வைக்கிறாள்.
மாறி மாறி உளறிய மனோஜ், விஜயா!
மனோஜ் மற்றும் விஜயா என இருவரும் பார்வதியை பார்க்க கிளம்ப ரோகிணி ''என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட'' என்று கேட்க ''பார்வதி ஆன்ட்டியும் அம்மாவும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க... அவங்கள டிராப் பண்ணிட்டு நான் தாம்பரம் வரைக்கும் ஒரு ஏஜென்ட்டை பார்க்கப் போறேன்'' என்று சொல்கிறான்.
மனோஜ் மற்றும் விஜயா இருவரும் கிளம்பி வெளியே வர ''எங்க கிளம்பிட்டீங்க'' என்று அண்ணாமலை கேட்க ''பார்வதிக்கு உடம்பு சரியில்ல'' என்று விஜயா சொல்ல ''என்ன ஆச்சு'' என்று முத்து கேட்க விஜயா ''காய்ச்சல்'' என்று சொல்ல மனோஜ் ''வயிற்று வலி'' என்று சொல்கிறான். இதனால் காய்ச்சலா வயிற்று வலியா என்று கேட்க மீண்டும் இருவரும் பதிலை மாற்றி சொல்கின்றனர். அண்ணாமலை சாமி கும்பிட்டு விட்டு போக சொன்னதும் பூஜை அறைக்குள் போகவே பயந்து ''நாங்க வழியிலேயே கும்பிட்டுக்கிறோம்'' என்று சொல்கிறாள்.
பரிதாபப்பட்ட மீனா, முத்து சொன்ன வார்த்தை!
பார்வதிக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் மீனா பரிதாபப்பட முத்து ''அவங்க சும்மா சொல்லிட்டு போறாங்க... மாட்டிக்கிறதுக்கான நேரம் வந்துடுச்சு'' என்கிறான். பிறகு சாமியாரை சென்று பார்த்து விஷயத்தை சொல்ல மனோஜ் ''அதெல்லாம் பலிக்காது தானே'' என்று கேட்க ''நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க கண்டிப்பா பலிக்கும்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். விஜயா ''என்ன சாமி சொல்றீங்க... எங்களை நீங்கதான் காப்பாத்தணும்'' என்று சொல்ல அவர் மந்தரித்து ஒரு பழத்தை கொடுக்க மனோஜ் ''என்ன சாமி நீங்க ஒரு பழத்தை தர்றீங்க'' என்று கேட்க ''இதுல மந்திரத்தை சொல்லி சக்தியை உருவாக்கிக் கொடுத்திருக்கேன்... அந்தப் பழத்துக்கு எதிர் திசையில் இந்த பழத்தை வைங்க... அந்த பழத்துக்கு பவர் அதிகமா இருந்தா இந்த பழம் கருத்து போயிடும்... இந்த பழத்துக்கு பவர் அதிகமா இருந்தா அந்த பழம் கருத்துப் போயிடும்'' என்று சொல்கிறார்.
''ஒருவேளை இந்த பழம் கறுத்து போச்சுன்னா என்ன பண்றது'' என்று கேட்க ''திரும்ப வாங்க பெரிய பழம் தரேன்'' என்று சொல்கிறார். மனோஜ் ''பலாப்பழமா'' என்று கேட்க ''எலுமிச்சை பழம் தான் சொன்னேன்'' என்று சொல்லி அனுப்புகிறார்.
வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!
விஜயா நைசாக அந்த பழத்தை கொண்டு போய் பூஜை அறையில் வைக்க அந்த பழம் உருண்டு போய் கீழே விழுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு விஜயா ''இப்போ அந்த பழத்தை நீ எடுத்து வச்சுட்டு வா'' என்று மனோஜை பூஜை அறைக்குள் தள்ளிவிட மனோஜ் நடுங்கிய படியே பழத்தை எடுக்கப் போகிறான்.
ஒரு பழம் என்னலாம் பண்ணுது!