Siragadikka Aasai : அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி... ரூமுக்குள் ஓடி கதவை பூட்டிய விஜயா!
நீண்டு கொண்டே போன நகைத்திருட்டு நாடகம் இன்றைய எபிசோடில் முடிவுக்கு வந்திருக்கிறது.
விஜயாவும், மனோஜும் மாட்டிக்கொள்ள மனைவி விஜயாவை திட்டுகிறார் அண்ணாமலை
தப்பிக்க வழிதெரியாமல் ‘’நான் இருக்கிறதுதான் உங்களுக்கெல்லாம் பிரச்சனைல்ல'’ என கதவை பூட்டிக்கொள்கிறாள் விஜயா
நைசாக நழுவிய ரோகிணி!
ரோகிணி ''அதான் ஆன்ட்டி சொல்லிட்டாங்கல'' என்று மனோஜை அழைத்துக்கொண்டு ரூமுக்குள் செல்ல முத்து ஓடி வந்து மடக்கி பிடித்து ''கேஸ் நடந்துட்டு இருக்குல்ல... அக்யூஸ்ட் நீ பாட்டுக்கு உள்ள போற'' என்று கேள்வி கேட்கிறான். மனோஜ் ''எனக்கு எதுவும் தெரியாது நான் தான் என் பிரண்டு கிட்ட கடன் வாங்குனேன்னு சொன்னேன்ல'' என்று சொல்ல ''அவரு இவனுக்கு கடன் கொடுக்கலப்பா... நான் அவர பார்க்ல பார்த்து பேசிட்டேன்'' என்று அடுத்த அதிர்ச்சியை கொடுக்கிறான்.
அவமானப்பட்டு நின்ற விஜயா!
விஜயா ''ஏங்க அவனுக்கு எதுவும் தெரியாது... அவனை எதுக்கு புடிச்சி இவன் கேள்வி கேட்டுட்டு இருக்கான்'' என்று கோபப்படுகிறாள். அதுவுமில்லாமல் ''ஏய் மீனா நீ சொல்லி கூட்டிட்டு வந்தியாடி'' என்று மீனாவின் மீது கோபப்பட ''எது நடந்தாலும் அந்த பழியை என் மேல தான் போடுவீங்களா'' என்று மீனா பதில் கொடுக்கிறாள்.
மனோஜுக்கு விழுந்த அறை!
அதன் பிறகு அண்ணாமலை மனோஜை கூப்பிட்டு ''உண்மையை சொல்லு'' என்று கேட்க மனோஜ் ''எனக்கு எதுவும் தெரியாது.... நான் எதுவும் பண்ணல'' என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க ''அப்பா தான் கேட்கிறார்ல உண்மைய சொல்லுடா'' என்று முத்து அடிக்க வர ''ஆமா நான் தான் எடுத்தேன்'' என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
''எனக்கு வேற வழி தெரியல பா'' என்று மன்னிப்பு கேட்க அண்ணாமலை ''நீ திருந்தவே மாட்டியா'' என்று கன்னத்தில் பளார் பளார் என அறைய விஜயா தடுக்க ஓடி வர ''பேசாத எல்லாம் உன்னால வந்தது நீ எல்லாம் ஒரு அம்மாவா? புள்ளைக்கு ஃப்ராடு, பித்தலாட்டம்னு எல்லாத்தையும் சொல்லி கொடுத்து வச்சிருக்க'' என்று ஆவேசப்படுகிறார்.
விஜயா சொன்ன பதில்!
விஜயா ''அவன் ஏமாந்து நிற்கவே இப்படி பண்ணிட்டேன். அந்த நகை பீரோல சும்மா தானே இருந்தது'' என்று சொல்ல ''சும்மா இருந்தா வித்துடுவியா? நகையை வித்துட்டு நல்லவ வேஷம் போடுற... பழிய தூக்கி மீனாவோட அம்மா மேல போட்ட... என் அம்மா மேல போட்ட... நீ எல்லாம் மனுஷியா'' என்று கோபப்படுகிறார். ''நான் எல்லாத்தையும் நம்ம பையனுக்காக தான் பண்ணேன்... அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டுறீங்க'' என்று சொல்ல அண்ணாமலை இன்னும் கோபமாகிறார்.
''உன் பையனுக்காக நீ என்னை எதையாவது பண்ணிடுவியோனு பயமா இருக்கு'' என்று சொல்ல ''ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க'' என்று விஜயா கேள்வி கேட்க ''ஆமா உன்கிட்ட பேசுறதே தப்புதான்... இனிமே என் முகத்திலேயே முழிக்காத... உன் கையால சொட்டு தண்ணி கூட குடிக்க மாட்டேன்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
கூட்டாகச் சேர்ந்து மாட்டிய ரோகிணி!
''அவர் ஏதோ தெரியாம பண்ணிட்டாரு மன்னிச்சிடுங்க'' என்று சொல்ல ''அப்ப இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா'' என்று ஸ்ருதி கேட்க ''தெரியும்'' என அதிர்ச்சி கொடுக்கிறாள் ரோகிணி. ''மனோஜ் எங்கிட்ட முன்னாடியே இப்படி பண்ண போறேன்னு சொல்லி இருந்தா, கண்டிப்பா நான் பண்ண விட்டு இருக்க மாட்டேன்'' என்று சொல்கிறாள். ''அவன பெத்தவதான் இப்படி இருக்கா... கட்டிக்கிட்டு வந்த நீயுமா'' என்று அண்ணாமலை கேள்வி கேட்கிறார்.
ரூமுக்குள் ஓடி கதவை பூட்டிய விஜயா!
விஜயா அண்ணாமலையிடம் ''என்கிட்ட பேச மாட்டீங்களா? இந்த வீட்ல எல்லாருக்கும் நான் இருக்கிறதுதான் பிரச்சனை'' என்று சொல்லிக்கொண்டு ரூமுக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொள்ள ரோகிணி மனோஜிடம் ''போய் என்னன்னு பாரு'' என்று சொன்னதும் ஓடி வந்த மனோஜ் ''அம்மா அம்மா'' என்று கதவை தட்டுகிறான். பிறகு ரோகிணியும் வந்து கதவைத் தட்ட விஜயா திறக்காமல் இருக்க ரவியும் கதவைத் தட்டுகிறான். மனோஜ் ''அப்பா நீங்க வந்து கூப்பிடுங்க'' என்று அண்ணாமலை கையைப் பிடிக்க அவர் உதறி தள்ளுகிறார்.
கெஞ்சிய முத்து!
மீனா ''நீங்க போய் மாமா கிட்ட பேசுங்க'' என்று முத்துவை அனுப்பி வைக்க முத்து ''வாப்பா அம்மா ஏதோ யோசிக்காம பண்ணிட்டு இருப்பாங்க... நீ வந்து கூப்பிடுபா... அவங்க வந்து கதவை திறப்பாங்க'' என்று சொல்ல அண்ணாமலை கோபப்படுகிறார். ''நீ போய் கூப்பிடு... நான் எதுக்கு கூப்பிடணும்'' என்று பதில் கொடுக்கிறார். ''இவ்வளவு நாளா அமைதியா இருந்தது எதுக்காக'' என்று கேட்க ''நீ பொறுமையான ஆளுப்பா'' என்று பதில் சொல்ல ''மண்ணாங்கட்டி... வீட்ல எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். அவ பணண தப்பு எல்லாத்தையும் மன்னிச்சி விட்டுட்டேன்.
''இவ்வளவு நடந்த பிறகும் நான் அமைதியா இருந்தா இந்த வீட்டில ஒரு ஜடம் மாதிரி'' என்று சொல்ல முத்து ''ஏன்பா இப்படி எல்லாம் பேசுற'' என்று சொல்கிறான். மீனாவும் ''எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் மாமா... நீங்க அத்தைய வெளியே வர சொல்லுங்க'' என்று சொல்ல அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். முத்து திரும்பத் திரும்ப கேட்க அண்ணாமலை ''இது எனக்கும் என் பொண்டாட்டிக்குமான விஷயம் இதுல நீ தலையிடாத'' என்று திட்டி விடுகிறார்.
அதன் பிறகு அண்ணாமலை சோஃபாவில் படுத்து விட கதவை தட்டிக் கொண்டிருந்த குரூப் காணாமல் போய்விட மீனா முத்துவை அழைத்துச் சென்று விடுகிறாள். விஜயாவுக்காக மீனா பரிதாபப்பட முத்து ''அம்மா பண்ணது பெரிய தப்பு அவங்க தப்பை ஒத்துக்கிட்டு இருந்தா கூட அப்பா கோபப்பட்டு இருக்க மாட்டாரு.. ஆனா எதுவுமே பண்ணாத மாதிரி நடிச்சது தான் அவருக்கு கோபம் அதிகமாயிடுச்சு'' என்று சொல்கிறான்.
விஜயாவை மன்னிப்பாரா அண்ணாமலை!