சபதம் போட்ட மீனா, அடிக்கல் நாட்டிய முத்து... ரோகிணியின் ஏமாற்றம்! ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்!
முத்து கொடுத்த பதிலடி!
மனோஜ் ‘’நீ என்ன வீட்டை விட்டு வெளிய போகப்போறியா’’ கேட்டதும் ‘’பாத்தீங்களா அப்பா நான் இந்த வீட்டை எடுத்துக்க நினைக்கிறேனு சொன்னான்.. ஆனா இப்போ அவன் நான் வெளியே போறேனானு கேக்குறான்… இதுல இருந்தே தெரியல இந்த வீட்டுக்கு யார் ஆசைப்படுறானு’’ என்று சொல்கிறான் முத்து. ‘’இனிமே இந்த ரூம் பிரச்சனையை நினைச்சு நீ கவலைப்படாதப்பா, எங்களுக்கு ரூம் எல்லாம் வேண்டாம்.. மனோஜ் அந்த ரூமை நிரந்தரமா எடுத்துக்காட்டும், ரவி இந்த ரூமை எடுத்துக்கட்டும்… நாங்க இருக்கிற இடத்துல ஏதோ ஓரமா இருந்துட்டு போறோம். என்னால எப்ப முடியுதோ அப்போ நான் ரூம் கட்டுறேன்'’ என்று சொல்கிறான்.
மீனா போட்ட சபதம்!
‘’இப்பதான் இதைச்சொல்ல உங்களுக்கு ஞானம் வந்துச்சா’’ என்று விஜயா சொல்ல ரோகிணி ‘’அவர் உங்களுக்கு நகை வாங்கி தரேன்னு போட்ட சபதமே இன்னும் முடியல... அது முடியவே இன்னும் எப்படியும் ரெண்டு மூணு வருஷம் ஆகும்… அதுக்கப்புறம் எப்போ ரூம் கட்டுவீங்க? திருப்பி ஒரு சபதம் எல்லாம் போட்றாதீங்க'’ என்று நக்கல் அடிக்கிறாள். இதனால் மீனா கோபமாகி ‘’ஏன் அவரால கட்ட முடியாதா? இப்ப சொல்றேன் மாமா அவரே அந்த ரூமை கட்டி முடிப்பாரு… யாரும் எதுவும் பண்ண வேண்டாம்’’ என்று சபதம் போட முத்து ஷாக் ஆகி நிற்கிறான்.
மனோஜ் கேள்வியும் விஜயாவின் நக்கலும்!
‘’அதான் மங்கம்மா சபதம் போட்டாச்சே… அவங்களே ரூம் கட்டிப்பாங்க’’ என்று விஜயா சொன்னதும் ‘’நம்பிக்கையும் உழைப்பும் இருந்தா கண்டிப்பா எல்லாமே முடியும்’’ என்று மீனா பதிலடி கொடுக்கிறாள். ‘’அதான் அவங்களே ரூம் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டாங்களே… இனிமே மாசமாசம் பணம் தர வேண்டாமா’’ என்று மனோஜ் கேள்வி கேட்க ரவி ‘’வீட்டு செலவுக்கு கொடுத்து தானே ஆகணும்’’ என்று சொல்கிறான். ‘’அவன் அதை கூட தராமல் எல்லாத்தையும் ஓசில அனுபவிக்கனும்னு பாக்குறான்’’ என்று முத்து சொல்ல ‘’அப்பாவோட பென்ஷன் பணம் வருதே’’ என்று மனோஜ் பதில் கொடுக்க, ‘’அதைக்கூட அவர்கிட்ட விட்டு வைக்க மாட்டியா’’ என்று முத்து கோபப்பட ரோகிணி ‘’அதெல்லாம் நாங்க தருவோம்’’ என்று சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறாள்.
மீனாவிடம் முத்துவின் கோபம்!
சபதம் போட்ட மீனா கிச்சனில் இருக்க அங்கு வந்த முத்து ‘’என்னை கேட்காம எதுக்கு சபதம் போடுற? ஏற்கனவே முதல்ல போட்ட சபதமே முடியல இப்போ இது பார்ட் 2 வா?’’ என்று கேட்க மீனா ‘’நாம அப்படி சொல்லலனா மாமா சும்மா இருக்க மாட்டாரு, போய் எங்கேயாவது பணம் கேட்பாரு’’ என்று சொல்கிறாள். முத்து ‘’நீ சொல்றதும் சரிதான் இருந்தாலும் நாம எப்படி ரூம் கட்ட முடியும்’’ என்று கேட்க ‘’அதெல்லாம் முடியும்’’ என்று மீனா நம்பிக்கை சொல்கிறாள்.
குழந்தை பெறத் தயாரான ரோகினி, ஏமாற்றம் கொடுத்த மனோஜ்!
மனோஜை கைக்குள் வைக்க குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ள ரோகிணி கையில் ஒரு கல்யாண பத்திரிக்கையுடன் கடைக்கு வந்து மனோஜிடம் கொடுத்து ரெசார்ட்ல என்னோட கிளையன்ட் ஒருத்தங்க மேரேஜ் இருக்கு, நாம அங்க போயிட்டு வரலாம். நமக்கு தனி ரூம் கொடுத்திருக்காங்க சந்தோஷமா இருந்துட்டு வரலாம் என்று சொல்ல மனோஜ் முதலில் ‘’பிசினஸ் இருக்கு’’ என்று சொல்ல பிறகு ரோகிணி ரொமான்ஸாக பேசி அவனை சம்மதிக்க வைக்கிறாள். இந்த நேரத்தில் மனோஜ்க்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் ‘’அஞ்சு ஏசி, அஞ்சு ஃபிரிட்ஜ்’’ என அடுக்கடுக்கான ஆர்டர் வந்து குவிவதோடு நாளைக்கு டெலிவரி வேண்டும் என்று சொல்ல, மனோஜ் ‘’கண்டிப்பா பண்ணிடலாம்’’ என்று வாக்கு கொடுக்கிறான். ஒரே நாள்ல இவ்வளவு சேல் ஆனா நமக்கு பிராஃபிட் மட்டுமே ஒரு லட்சத்துக்கு மேல வரும்.. அதனால நீ மட்டும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடு’’ என்று ரோகிணிக்கு பல்பு கொடுக்கிறான் மனோஜ்.
ரூமுக்கு அடிக்கல் நாட்டிய முத்து, மீனா!
சவாரி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் முத்து செங்கலுடன் வந்து மீனாவுக்கு சர்ப்ரைஸ் தருகிறான். ‘’நீதான் நானே ரூம் கட்டுவேன்னு சபதம் போட்டல… அதுக்கு தான் அடிக்கல் நாட்ட செங்கல் வாங்கிட்டு வந்திருக்கேன்’’ என்று சொல்ல மீனாவும் சந்தோஷப்படுகிறாள். பிறகு இருவரும் சேர்ந்து செங்கலை எடுத்துக்கொண்டு மேலே செல்ல இதைப் பார்த்த விஜயா அண்ணாமலையை கூப்பிட்டு விட ‘’எதுக்கு முத்து செங்கல்’’ என்று கேள்வி கேட்கிறார் அப்பா அண்ணாமலை. ‘’ரூம் கட்டத்தான்பா… கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கிறோம்’’ என்று சொல்ல விஜயா ‘’இப்படி பண்ணா உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு தான் ரூம் கட்டுவீங்க’’ என்று நக்கலாக சொல்ல அண்ணாமலை விஜயாவை அதட்டுகிறார்.
மீனா அண்ணாமலையிடம் ‘’பரவால்ல மாமா… நான் இந்த வீட்டை விட்டு சீக்கிரம் போகணும்னு நினைச்சுட்டு இருந்த அத்தையே அறுபதாம் கல்யாணம் வரைக்கும் இந்த வீட்ல தான் இருப்பேன்னு ஆசீர்வாதம் பண்ணதா எடுத்துக்கிறேன்’’ என்று பதிலடி கொடுக்கிறாள். பிறகு முத்துவும், மீனாவும் மொட்டை மாடிக்கு வந்து செங்கல்களை அடுக்கி சந்தோஷப்படுகின்றனர்.
செம பாசிட்டிவாக முடிந்திருக்கிறது இன்றைய ‘சிறகடிக்க ஆசை’