‘சிறகடிக்க ஆசை’ இன்று : அண்ணாமலை - விஜயா ரொமான்ஸ்… முத்துவுக்கு மீனாவின் அட்வைஸ்!
ரவியை ரசிக்கும் ஸ்ருதி!
ஸ்ருதி, பாட்டி இருவரும் ஒன்று சேர்ந்து பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க ‘’ரவி இந்த டிரஸ்ல ரொம்ப அழகா க்யூட்டாக இருக்க’’ என்று சொல்லி போட்டோவை காட்ட ரவி அதில் டிரெஸ் இல்லாமல் இருக்க ‘’பாட்டி இதையெல்லாம் ஏன் காட்டுறீங்க’’ என்று வெட்கப்படுகிறான். ஸ்ருதி ரவியை கலாய்த்து இதை தான் டிபியா வைக்க போறேன் என்று சொல்ல ரவி வேண்டாம் என்று போனை புடுங்க முயற்சி செய்ய ஸ்ருதி சுத்தி சுத்தி வந்து விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்க முத்து காரை தாறுமாறாக ஓட்டி வந்து வீட்டு முன்னாடி நிறுத்த அண்ணாமலை மற்றும் விஜயா என இருவரும் இறங்க அண்ணாமலை ‘’என்னடா காரை ஓட்டுற’’ என்று முத்துவை திட்ட அவன் ‘’ரோடு சரியில்லப்பா’’ என்கிறான்.
சந்தோஷத்தில் விஜயா!
வீட்டுக்குள் வந்ததும் அண்ணாமலை ‘’விஜயா தண்ணி கொண்டா’’ என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். விஜயாவும் சந்தோஷப்பட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அண்ணாமலை கழுத்தில் விஜயாவின் பொட்டு ஒட்டிக்கொண்டு இருப்பதை பார்த்த முத்து ‘’அப்பா அப்படியே இரு.. உன் கழுத்துல ஏதோ மச்சம் இருக்கு’’ என்று சொல்ல அண்ணாமலை ‘’மச்சம் எல்லாம் இல்லை’’ என்று சொல்ல ‘’இல்லப்பா சிவப்பு மச்சம் இருக்கு’’ என சொல்லி சிரிக்க விஜயா நெற்றியில் பொட்டு இல்லை என பாட்டி கண்டு பிடிக்க ரவி ‘’அம்மா பொட்டு தான் அங்க போயிருக்கு’’ என்று கலாய்க்க அண்ணாமலையும் விஜயாவும் வெட்கப்படுகிறார்கள்.
ரவி பிறந்த வரலாறு!
பாட்டி ‘’இதுக்கு முன்னாடி ஒருமுறை சண்டை போட்டு பேசாம இருந்தாங்க… அப்போ நான் தான் வந்து சமாதானம் செஞ்சுட்டு போனேன். அடுத்த 10 மாசத்துல ரவி பிறந்துட்டான்’’ என்று சொல்ல முத்து ‘’’அப்படின்னா இன்னும் பத்து மாசத்துல எங்களுக்கு தங்கச்சி வருமா’’ என்று கிண்டல் அடிக்கிறான். விஜயா ‘’இவனுக்கு வெவஸ்தையே இல்லை’’ என்று வெட்கப்பட அண்ணாமலை ‘’போடா போ’’ என வெட்கப்படுகிறார்.
வாடகை தாய் மூலம் குழந்தை!
ரூமுக்குள் ஸ்ருதி பாட்டு கேட்டு கொண்டிருக்க ரவி ஓடி வந்து கட்டிப்பிடிக்க ஸ்ருதி ‘’கொஞ்ச நாளைக்கு என்னை தொடாத’’ என்று திட்டுகிறாள். ‘’நான் குழந்தை பெத்துக்க போறது கிடையாது’’ என்று சொன்னதும் ரவி ‘’ரெண்டு மூணு வருஷத்துக்கு தானே அது பரவால்ல’’ என்கிறான்.
‘’ரெண்டு மூணு வருஷத்துக்கு இல்ல எப்பவுமே பெத்துக்க போறது இல்லை… என்னால அந்த வலி எல்லாம் தாங்க முடியாது’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். ‘’வேணும்னா வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்’’ என்று சொல்ல ரவி ‘’வீட்ல அதுக்கெல்லாம் சம்மதம் சொல்ல மாட்டாங்க… என்னதான் இருந்தாலும் நீ பெத்துக்கிற மாதிரி வராது’’ என்று சொல்ல பெண்கள் ‘’வெறும் குழந்தை பெத்துக்கிற மிஷினா? என்னால பெத்துக்க முடியாது’’ என்று உறுதியாக சொல்கிறாள். இதனால் ரவி அப்செட் ஆகிறான்.
விஜயாவை சந்தேகப்பட்டு அடி வாங்கிய மனோஜ்!
மொட்டை கடுதாசியால் மனோஜ் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு தவிக்கும் மனோஜ் ஒரு கட்டத்தில் அம்மா விஜயாவுக்கு போனை போட்டு ‘’எனக்கு தூக்கமே வரல வெளியே வா மா’’ என்று சொல்லி கூப்பிட விஜயா ‘’உனக்கு தூக்கம் வரலைன்னா என்னை ஏன் டா எழுப்புற’’ என திட்டி விட்டு வெளியே வர மொட்டை கடுதாசியை காட்டி ‘’எனக்கு என்னமோ பயமா இருக்கு’’ என்கிறான். விஜயா இதை கேட்டு ‘’மாசம் ஐம்பதாயிரம் தரணும்னு புது கதையை ரெடி பண்றியா’’ என்று திட்டுகிறாள். இதனால் மனோஜ் ‘’எனக்கு யாரால பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சு போச்சு… உங்களால தான்’’ என்று சொல்ல விஜயா மனோஜை போட்டு அடிக்கிறாள். ‘’நான் சொல்றதை நம்பாம இப்படி சொல்றீங்க’’ என்று கேட்க ‘’உனக்காக எவ்ளோ அசிங்கப்பட்டு நிக்கிறேன்… நீ என்னையே சந்தேகப்படுறியா’’ என்று கோபப்படுகிறாள்.
முதலாளியான முத்து, மீனா போட்ட கண்டிஷன்!
காலையில் முத்துவுடன் கார் ஓட்டும் கார்த்தி வீட்டுக்கு வர அண்ணாமலை வா பா... நீ முத்து கூட வேலை செய்யுறவன் தானே என்று கேட்க முத்து கார்த்தி வந்ததும் ‘’இவன் தான் நம்முடைய புது காரை ஓட்ட போறான்’’ என்று சொல்லி அண்ணாமலையிடம் சாவி கொடுத்து கொடுக்க சொல்கிறான். விஜயா வழக்கமாக நக்கலாக பேச அண்ணாமலை திட்டுகிறார். பிறகு மீனா ‘’ஃபிரெண்டு எல்லாம் மத்த நேரத்துல தான் வேலைன்னு வரும்போது எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் நல்லபடியா கார் ஓட்டணும்’’ என்று கண்டிஷன் போடுகிறாள். அண்ணாமலையும் ‘’சரியா சொன்ன மா’’ என்று சொல்கிறார். முத்துவின் வளர்ச்சியை பிடிக்காமல் முறைக்கிறாள் ரோகிணி!
மனோஜுக்கு வரப்போகும் பிரச்சனை ரோகிணியால்தானே?!