‘சிறகடிக்க ஆசை’ இன்று : முத்துவை நம்பி சவால் விட்ட மீனா… ரோகிணி மாட்டப்போகும் பர்த் டே பார்ட்டி!
மீனா விட்ட சவால்!
மீனா தனது வீட்டு பக்கத்தில் பூ கட்டுபவர்களை சென்று பார்க்கும் போது அவர்கள் ‘’கடவுள் அவருக்கு பூ கட்டி கொடுக்கிற நம்மள கண்டுக்கவே மாட்டாரு’’ என்று வருத்தப்படுகின்றனர். மீனா ‘’நேர்மையா உழைச்சா எல்லாமே நல்லபடியா நடக்கும்’’ என்று சொல்கிறாள். ‘’முத்து வாங்கி தந்த மாதிரி ஒரு வண்டி இருந்தால் நல்லா இருக்கும்’’ என்று சொல்ல மீனா உங்க புருஷன் கிட்ட கேட்க வேண்டியதுதானே என்று சொல்கிறாள். ‘’அந்த ஆள பத்தி பேசாத மீனா... பாசம் எல்லாம் கல்யாணம் ஆகிற புதுசுலதான் அப்புறம் கண்டுக்க மாட்டாங்க. நான் ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். அங்க ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு தோசை செஞ்சு கொடுத்தாங்க… நல்லா தான் இருந்தது... சரின்னு என் வீட்டுக்காரருக்கு பண்ணி கொடுக்கலாம்னு பண்ணி கொடுத்தா நல்லா இருக்கு, நல்லா இல்லன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல’’ என்று புலம்புகிறாள். ‘’மிச்சமிருந்ததை தெரு நாய்க்கு போட்டா சாப்பிட்டு வாலாட்டிட்டு போச்சு… அதுக்கு இருக்குற நன்றி கூட புருஷனுக்கு இல்ல’’ என்று திட்டுகிறாள்.
எல்லா புருஷனும் அப்படித்தான் என்று இன்னொரு பெண்மணி சொல்ல மீனா ‘’பொதுவா அப்படி சொல்லிடாதீங்க… என் புருஷன் எது செஞ்சு கொடுத்தாலும் என்னை பாராட்டுவாரு’’ என்று சொல்ல ‘’நீ வேணா ஆந்திரா பெசரட்டு தோசை செஞ்சு கொடுத்து பாரு பாராட்ட மாட்டாரு.. அம்பது ரூபா பெட்டு வச்சுக்கலாம்’’ என்று சொல்ல ‘’என் புருஷனை நம்பி 50 ரூபாய் இல்ல அஞ்சாயிரம் கூட பெட்டு கட்டுவேன்’’ என்று சொல்கிறாள் மீனா.
போட்டிக்கான கண்டிஷன்!
‘’எங்களால 5000 எல்லாம் பெட்டு கட்ட முடியாது அம்பது ரூபா போதும். நீ பொய் சொல்ல மாட்ட உன் புருஷன் என்ன சொல்றாருன்னு பாரு. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் அவ்வளவுதான் கல்யாண வாழ்க்கை அப்புறம் எல்லாரும் ஒரே மாதிரி தான்’’ என்று சொல்கின்றனர்.
ஜோசியரால் மனோஜ் செய்த வேலை!
ஜோசியர் சொன்ன விஷயத்தால் மனோஜ் கலர் கலராக சட்டைகளை வாங்கி அடுக்கி விஜயா மற்றும் ரோகிணியை கூட்டிச்சென்று அதை காட்டுகிறான். ‘’இனிமே இந்த கலர்ல தான் டிரஸ் போட போறேன்… ஜோசியர் இப்படி டிரஸ் பண்ணா தான் சுத்தி இருக்கவங்களால பிரச்சனை வராதுன்னு சொன்னாரு’’ என்று சொல்ல ‘’இதுக்காடா இத்தனை டிகிரி வாங்கி வச்சிருக்க’’ என்று விஜயா திட்ட ‘’டிகிரிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு’’ என்று சொல்கிறான். ‘’இதெல்லாம் வெறும் துணி இல்லை… என்னைக் காக்கப் போற கவசம். மகாபாரதப் போரில் அனுமனை கூட இந்த மாதிரி ஒரு கவசம் தான் காப்பாத்துச்சு’’ என்று சொல்ல விஜயா ‘’அது அனுமன் இல்ல கர்ணன்’’ என்று திட்டுகிறாள். ‘’என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் நிறைய பேர் எனக்கு எதிரா சதி செய்றாங்க'’ என்று சொல்ல ‘’ஆமா பெருசா வளர்ந்துட்ட’’ என்று விஜயா நொந்து கொள்கிறாள்.
‘’போற போக்கை பார்த்தா நீ பெரிய ஆள் எல்லாம் ஆக மாட்ட மென்ட்டலாதான் ஆகப் போற’’ என்று திட்டிவிட்டுப்போகிறாள். மனோஜ் ‘’இந்த டிரஸ் எல்லாம் துவைக்க கூடாது’’ என்று சொல்ல ரோகிணி ‘’துவைக்கலன்னா நாத்தம் வரு…ம் உன்கிட்ட யாருமே வர மாட்டாங்க’’ என்று சொல்கிறாள். ‘’இதையெல்லாம் வேற யாரும் துவைக்க கூடாது நீ மட்டும் தான் உன் கையால துவைக்கணும்… அப்படித்தான் ஜோசியர் சொல்லி இருக்காரு’’ என்று சொல்கிறான்.
ஆசையுடன் அசத்தும் மீனா!
வீட்டுக்கு வந்த மீனா சவால் விட்டபடி பெசரட்டு தோசை செய்கிறாள். முதலில் அண்ணாமலை சாப்பிட உட்கார அவருக்கு தோசையை வைக்க ‘’என்னமா பச்சையா இருக்கு’’ என்று கேட்க ‘’பெசரட்டு தோசை மாமா’’ என்று சொல்கிறாள். ‘’ஆந்திரா ஸ்பெஷலா… நான் ட்ரெய்ன்ல போகும்போது சாப்பிட்டு இருக்கேன்’’ என்று சொல்லி அண்ணாமலை சாப்பிட்டு பார்த்து ‘’ரொம்ப சூப்பரா இருக்கு… அந்த டேஸ்ட் அப்படியே இருக்கு… இந்த வீட்ல உன் கை பக்குவம் வேற யாருக்கும் வராது’’ என பாராட்டுகிறார். இதைக் கேட்டு மீனா சந்தோஷப்படுகிறாள்.
பக்தி முத்திப்போன மனோஜ்!
வெள்ளை கலர் உடையில் வெளியே வரும் மனோஜ் பூஜை அறைக்கு சென்று ரொம்ப நேரமாக சாமி கும்பிட்டபடி இருக்க ரோகிணி இதை பார்த்து கடுப்பாகிறாள். அடுத்து சாப்பிட வந்த விஜயா ரோகிணியை ‘’ஏன்மா இங்க உட்கார்ந்திருக்க’’ என்று கேட்க அவள் மனோஜை கை காட்ட பூஜை அறையில் பக்தி முத்தி போய் நின்று கொண்டிருக்கும் மனோஜை பார்த்து வேதனைப்பட்டு சாப்பிட வருகிறாள். ‘’என்ன இது பச்சை பச்சையா இருக்கு… பச்ச மிளகாவை அரைச்சு ஊத்தி என்னை ஒரேடியா சாகடிக்க பாக்குறியா’’ என்று விஜயா கோபப்பட அண்ணாமலை ‘’அது பெசரட்டு தோசை’’ என்று சொல்கிறார். அது என்ன ஸ்பெஷல் தோசை என்று கேட்க மீனா ‘’பச்சைப்பயிர்தான் அரைச்சு ஊத்தி இருக்கேன்’’ என்று சொல்கிறாள். பிறகு விஜயா சாப்பிட்டு பார்த்து ‘’சாப்பிடுற மாதிரி தான் இருக்கு’’ என்று சொல்கிறாள். இதைக் கேட்டு மீனாவின் சந்தோஷம் இன்னும் அதிகமாகிறது.
போன் காலால் வெறுப்பேத்தும் முத்து!
முத்து போன் பேசிக் கொண்டே சாப்பிட வந்து உட்காருகிறான். மீனா ஆசையுடன் பரிமாற முத்து கத்தி கத்தி போன் பேச விஜயா திட்ட அண்ணாமலை ‘’சாப்பிடும்போது போன் பேசாதன்னு சொல்லி இருக்கேன்ல’’ என்று சொன்னதும் ‘’அப்ப நான் நின்னுட்டு சாப்பிட்டுக்கிறேன்’’ என்று நின்று கொண்டு போன் பேசிக் கொண்டே சாப்பிடுகிறான். ஒவ்வொருத்தராக மீனாவின் சமையலை பாராட்ட அதற்கேற்றபடி போனில் முத்து நண்பனிடம் பேசி கவுன்ட்டர் கொடுக்கிறான்.
ஸ்ருதி ‘’டேஸ்ட் அப்படியே இருக்கு’’ என்று பாராட்டி ‘’ரவி ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் போது நீங்க அவனுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுங்க’’ என்று சொல்ல முத்து ‘’போனில் லூசு மாதிரி பேசாத’’ என்று சொல்ல இவர்கள் அதைக் கேட்டு ஜெர்க் ஆகின்றனர். ‘’அந்த அளவுக்கெல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது… எதுக்கு இத போய் பாராட்டிக்கிட்டு இருக்கீங்க’’ என்று விஜயா கேள்வி கேட்க முத்து போனில் ‘’வந்துட்டேன் நீயா நானான்னு பார்த்துடலாம்’’ என்கிறான்.
கடைசி வரை முத்து சாப்பாட்டை பற்றி ஒன்றுமே சொல்லாமல் கிளம்பி விட மீனா கடுப்பாகிறாள். ஏமாற்றமும் அடைகிறாள்.
ரோகிணிக்கு வந்த போன் கால்!
அடுத்து மனோஜ் ரோகிணி கடையில் இருக்கும் போது கிரிஷ் ரோகிணிக்கு போன் போட்டு ‘’என்னோட பிறந்தநாளுக்கு நீ வந்துருவதானேம்மா’’ என்று கேட்க ரோகிணி ‘’கண்டிப்பா வந்துருவேன்’’ என்று சொல்கிறாள். ‘’நான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிடட்டுமா’’ என்று கிரஷ் கேட்க ரோகிணி ‘’கூப்பிடு… கேக் கூட வெட்டலாம்’’ என்று சொல்கிறாள். ‘’எனக்கு நீ கோட்டு சூட்டு ஷூ எல்லாம் வாங்கிட்டு வா… அதுதான் நான் போட்டுக்குவேன்’’ என்று சொல்ல ரோகிணி ‘’உனக்கு அதெல்லாம் நல்லாதான் இருக்கும்… வாங்கிட்டு வரேன்’’ என்று சொல்கிறாள். மனோஜ் ‘’யார்கிட்ட எங்க வரேனு சொன்ன’’ என்று கேட்க ‘’க்ளையன்ட் வீட்ல பர்த்டே பார்ட்டி’’ என்று சொல்லி சமாளித்து ‘’வெளியே போயிட்டு வரேன்’’ என்று கிளம்பி வருகிறாள்.
மனோஜ் - ரோகிணிக்கு ஆபத்து நெருங்குது!