‘சிறகடிக்க ஆசை’ இன்று : மீனா எடுத்த திடீர் முடிவு… பிரசவக் கதையால் மாட்டப்போகும் ரோகிணி!
குழப்பத்தில் முத்து!
செல்வம் ‘’என்னப்பா திடீர்னு கார் வாங்குற’’ என்று கேட்க ‘’அதான் அந்த ஓடுகாலி மனோஜ் மீனா நகை எடுத்துட்டு போய் வித்துட்டானே… அதுக்காக இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தான்…. இன்னும் இரண்டு லட்சம் தரணும்’’ என்று சொல்ல செல்வம் ‘’அதெல்லாம் கொடுத்திடுவான்’’ என்று சொல்கிறான். அதன் பிறகு ஓனரை சந்தித்து கார் வாங்க வந்திருப்பதாக சொல்ல அவர் ‘’புதுசா ரெண்டு கார் வந்திருக்கு’’ என கை காட்ட முத்து இரண்டு காரையும் பார்க்க இரண்டும் பிடித்திருப்பதாக சொல்கிறான். எதை வாங்குவது என்ற குழப்பம் உருவாக இறுதியில் ‘’மீனா தானே ஐடியா கொடுத்தா அவளே எந்த கார்னு சொல்லட்டும்’’ என்று முடிவெடுக்கிறான்.
முத்து மீனாவுக்கு போன் போட்டு கார் வாங்க வந்திருக்கும் இடத்திற்கு வர சொல்கிறான். பூ கொடுக்க கிளம்பிய மீனாவும் வருவதாகச் சொல்லி ஃபோனை வைக்கிறாள்.
ஸ்ருதிக்கு எதிராக மாறும் விஜயா!
வேக வேகமாக பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா ‘’அவ ரொம்பதான் பண்றா’’ என்று ஆவேசப்பட ‘’யாரு மீனாவா’’ என்று கேட்க ‘’அவ இல்லை… பணக்கார பைத்தியம்’’ என்று ஸ்ருதியை திட்டுகிறாள். ‘’அவதான் பணக்கார வீட்டு பொண்ணு... உன் வீட்டுக்கு வந்த பெரிய மகாலட்சுமியாச்சே’’ என்று சொல்ல ‘’ஆமா பெரிய மகாலட்சுமி… அவளால் எனக்கு ஒத்த ரூபா பிரயோஜனம் இல்லை. ரோகிணினாலும் மாசம் அஞ்சாயிரம் தரா’’ என்கிறாள்.
‘’என் பையன அடிமையா வச்சி இருக்கறது மட்டும் இல்லாம… அவ என்னையே எதிர்த்து பேசுறா… அந்த மீனா கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொல்றா… உங்க நகையை கொடுக்க வேண்டியதுதானேன்னு என்னைப்பார்த்து கேக்குறா’’ என ஆவேசப்படுகிறாள்.
‘’வீட்ல இருக்க பிரச்சனை எல்லாம் முடியட்டும் அவளை வெக்க வேண்டிய இடத்தில் வெக்கிறேன்… அப்பதான் இந்த விஜயா யாருன்னு அவளுக்கு தெரியும்’’ என்று முடிவெடுக்கிறாள்.
மீனாவின் திடீர் முடிவு!
செல்வம் முத்துவிடம் ‘’நீ சொல்ற கார்தான் தங்கச்சியும் எடுக்க சொல்லுவாங்க’’ என்று சொல்ல ‘’நீ வேற நான் சொல்றதுக்கு நேர் எதிரா அவ ஒன்னு சொல்லுவா’’ என்று சொல்லிக் கொண்டிருக்க மீனா ஷோரூம் வருகிறாள். இரண்டு காரை காட்டி முத்து ‘’இரண்டுமே எனக்கு பிடிச்சிருக்கு… நீ எதை எடுக்கலாம்னு சொல்லு’’ என்று கேட்க காரை பார்த்த மீனா ‘’ரெண்டுமே நல்லா தான் இருக்கு.. ஆனா இப்போ கார் எடுக்கணுமா என திடீரென கேள்வி எழுப்புகிறாள்.
முத்துவின் கேள்வியும், மீனாவின் விளக்கமும்!
‘’நீ தானே மீனா கார் வாங்கலாம்னு சொன்ன… இப்போ இப்படி சொல்ற’’ என்று கேட்க ‘’மாமாவும் அத்தையும் பேசாம இருக்காங்க… வீட்ல பிரச்சனையா போயிட்டு இருக்கு… இந்த நேரத்துல நாம கார் வாங்கிட்டு போய் உங்க அம்மாவையும் அப்பாவையும் உட்கார வெச்சு ஓட்டிட்டு போக முடியுமா? நாம நம்மள பத்தி மட்டுமே யோசிக்கிறோம்னு நினைச்சிடுவாங்க... முதல்ல அத்தையையும் மாமாவையும் பேச வைக்கலாம் அப்புறம் கார் வாங்கலாம்’’ என்று சொல்கிறாள். ‘’தங்கச்சி சொல்றதும் சரியாதான் இருக்கு’’ என்று செல்வம் சொல்ல முத்து ‘’அப்பாகிட்ட பேசி பாத்தாச்சு… அவரு பேச மாட்டேன்னு உறுதியா இருக்காரு’’ என்று சொல்ல மீனா ‘’நானும் அத்தைகிட்ட பேசி பார்த்தேன்… அவங்க என்னை தான் திட்டுறாங்க’’ என்று சொல்ல முத்து ‘’அப்போ நாம என்னதான் செய்ய முடியும் போக போக சரியாகிவிடும்’’ என்று சொல்கிறான்.
மீனா ‘’அவங்கள முதல்ல பேச வைக்கணும்’’ என்று சொன்னதும் முத்து ‘’இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். நீ வீட்டுக்கு போ நான் வந்துடுறேன்’’ என்று சொல்லி கிளம்பிச் செல்கிறான்.
எமோஷனலாகி மன்னிப்பு கேட்ட ஸ்ருதி!
அடுத்ததாக டப்பிங் பேச வந்த இடத்தில் ஸ்ருதி பிரசவ வலியில் துடிப்பது போல அழுது அழுது டப்பிங் பேச சொல்ல ஸ்ருதியும் அதேபோல் பேசி இறுதியில் எமோஷனலாகி கண் கலங்குகிறாள். வெளியே வந்த அவள் தன் அம்மா சுதாவுக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டு பிரசவம் குறித்து பேசுகிறாள்.
வாயைக் கொடுத்து மாட்டிய ரோகிணி!
மீனா மற்றும் ரோகிணி டீ குடிக்க ஸ்ருதி வீட்டுக்கு வர டீ வேண்டுமா என்று கேட்க அவளும் ஆமாம் என்று சொல்ல பிறகு மூவரும் டீ குடிக்கும் போது ஸ்ருதி டல்லாக இருப்பதை பார்த்து ‘’என்னாச்சு’’ என்று கேட்க டப்பிங் பேசிய விஷயத்தை சொல்கிறாள். உடனே ரோகிணி ‘’குழந்தை பெத்துக்கிறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லை’’ என்றவல் ஒவ்வொரு மாசமும் உடம்பு எப்படி இருக்கும் என விளக்கமாக சொல்ல மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் அதிர்ச்சியோடு ரோகிணியைப் பார்க்கின்றனர்.
ரோகிணியைப் பற்றிய உண்மை மீனா, ஸ்ருதிக்குத் தெரியவருமா?!