மீனாவிடம் சிக்கிய மலேசிய மாமா… விஜயாவை வைத்து விளையாடிய ஸ்ருதி - ‘சிறகடிக்க ஆசை’ எபிசோட் ஹைலைட்ஸ்!
முத்து, மீனாவிடம் ‘’பாத்தியா அவங்க கிளாஸ்ல யாருமே சேரலன்னு பரிதாபப்பட்டியே… இப்போ பழி உன் மேலே வந்து விழுந்துடுச்சு’’ என்று மீனாவை திட்டுகிறான். ரவி அம்மா விஜயாவிடம் ‘’ரொம்ப வலிக்குதாமா’’ என்று கேட்க ‘’இங்க கொஞ்சம் வா’’ என்று கூப்பிட்டு கன்னத்தில் ஒரு அறைவிட்டு ‘’கழுத்து திருப்ப முடியாம இருக்கேன்... வலிக்குதான்னா கேட்கிற’’ என்று திட்டுகிறாள்.
அதன் பிறகு முத்து கிச்சனுக்கு வந்து மீனாவிடம் குடிக்க டீ கேட்டுவிட்டு ‘’எங்க அம்மாவுக்கு சுளுக்கு பிடிக்க வச்சுட்ட’’ என்று சொல்ல ‘’அப்போ அத்தைக்கு சுளுக்கு பிடிக்க நான் தான் காரணம்னு நீங்களும் சொல்றீங்களா’’ என்று மீனா கோபப்படுகிறாள். ‘’நீ ஆடுன ஆட்டம் தான் காரணம்’’ என்று முத்து சொல்ல ‘’நீங்களும் தானே ஆடுனிங்க என்று மீனா திருப்பி கேட்க ‘’நீதான் ஐஸ்வர்யா ராய் மாதிரி சும்மா வளைச்சு, வளைச்சு ஆடுன.. சொல்லப்போனா அவங்கள விட பயங்கரமாவே ஆடுன… கிளாஸ்ல சேரலாம்னு சொன்னது என்னுடைய பிளான்… சுளுக்கு பிடிக்க வச்சது உன்னுடைய பிளான்’’ என மீனாவைக் கலாய்க்கிறான் முத்து.
அதன் பிறகு அண்ணாமலை ‘’இன்னைக்கு நீ கீழ படுத்துக்க… மீனா துணையா இருக்கட்டும்’’ என்று விஜயாவிடம் சொன்னதும் ‘’அவ எதுக்கு’’ என்று கோபப்படுகிறாள். ‘’மீனா இருந்தாதான் உனக்கு ஏதாவது தேவைனா உடனே உதவி செய்வா’’ என்று அண்ணாமலை சொல்கிறார். இதற்கிடையே ஸ்ருதி ‘’ஆன்ட்டியை பாத்துட்டு வரேன்’’ எனக்கிளம்ப, ரவி ‘’வேண்டாம் சொன்னா கேளு’’ என்று பின்னாடியே ரவி வர ‘’விஜயா என் மருமக என்ன பாக்க வரா… அதுல உனக்கு என்னடா’’ என்று திட்டுகிறார்.
‘’ஆன்ட்டி படியில தலை வெச்சி எப்படி படுக்கிறாங்கன்னு பார்க்கணும்… இதுவரைக்கும் நான் அப்படி பார்த்ததே இல்லை’’ என்று வேடிக்கைப்பார்க்கத் தயாராக மீனாவும், ரோகிணியும் விஜயாவை படுக்க வைத்து ‘’லெஃப்ட், ரைட், இப்போ ஓகே… ஆன்ட்டியோட கழுத்து லேண்ட் ஆகிடுச்சு’’ என்று விஜயாவை விளையாட்டு பொம்மையாய் வைத்து விளையாடுகிறார்கள்.
மீனா, விஜயா பக்கத்தில் படுக்க வர ‘’தூரமா போய் படு…போய் சுடு தண்ணி எடுத்துட்டு வா… அப்படியே ரோகிணியையும் கூப்பிடு’’ என்று எரிந்துவிழுகிறாள் விஜயா. இதைத் தொடர்ந்து விஜயா ரோகினியை தன்னோடு படுக்கச் சொல்ல மனோஜ் பின்னாடியே ஓடிவந்து ‘’ரோகினி என்கூடவே இருக்கட்டும்… இல்லைனா எனக்கு தூக்கம் வராதுமா’’ என்று சொல்லி விஜயாவிடம் வாங்கி கட்டிக் கொள்கிறான்.
மறுநாள் காலையில் மனோஜ் கடைக்கு வரும் வித்யா போட்டோ ஒன்றை கிப்டாக கொடுத்து ‘’தினமும் பூ போட்டு பூஜை செஞ்சா பிசினஸ் நல்லா நடக்கும்’’ என்று சொல்கிறாள். ரோகிணி மீனாவுக்கு போன் செய்து தினமும் ‘’பூ கொடுக்க சொல்ல’’ மீனா எடுத்துட்டு வரேன் என்று சொல்லி போனை வைக்க மலேசியா மாமா நடந்து வருவதை பார்க்கிறாள்.
மீனா ‘’இவர் ரோகினியோட மாமாதானே’’ என்று கண்டுபிடித்து அவரை நெருங்கிச் செல்ல அவர் வண்டியில் ஏறி வேக வேகமாகப்போக, மீனா அவரை மிஸ் செய்து விடுகிறாள். மறுபக்கம் ஃபிரிட்ஜ் வாங்கணும் என்று செல்வம் சொல்ல முத்து அவரை அழைத்துக் கொண்டு மனோஜ் கடைக்கு வருகிறான்.
எஸ்கேப் ஆன மலேசியா மாமா ‘இந்த பொண்ணு என்ன துரத்திட்டே வருது… ரோகிணி பாப்பாவோட கடை பக்கத்துலதானே இருக்கு… அங்க போயிடலாம்’ என்று சொல்லி அவரும் கடைக்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.