Siragadikka Aasai : அண்ணாமலை கொடுத்த சர்ப்ரைஸ்.. பழைய டிவி விஜயாவின் உளறல்… முத்து மிஸ்ஸிங்!
பாட்டிக்கு மேக்அப் போட்டுவிட்டு பாட்டியை கரெக்ட செய்யலாம் என நினைத்த ரோகிணிக்கு பாட்டி பல்பு கொடுக்கிறார்.
முத்து எங்கே என போன் செய்து செய்து அழும் நிலைக்குப்போகிறாள் மீனா
தான் தன் மாமியாருக்கு வாங்கியது பழைய டிவிதான் என உளறுக்கொட்டுகிறாள் விஜயா
வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறிய ரோகிணி!
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க ரோகிணி ‘’வாங்க பாட்டி… நான் உங்களுக்கு மேக்கப் போட்டு விடுறேன்’’ என்று கூட்டிச் செல்கிறாள். உள்ளே கூட்டிச் சென்று மேக்கப் போட்டு விட தொடங்க பாட்டி ‘’உங்க அப்பாவ செய்யாத தப்புக்காகவா போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டா? என்ன ஆச்சு’’ என்று கேட்க ரோகிணி ‘’பிசினஸ் பார்ட்னர்ஸ் செஞ்ச தப்புக்காக எங்க அப்பாவ பிடிச்சுட்டு போய்ட்டாங்க’’ என்று சொல்கிறாள். ‘’உங்க அம்மா வேற இல்லல்ல.. அவங்க எப்போ தவறினாங்க?’’ என்று கேட்க ‘’16 வயசு இருக்கும்’’ என்று ரோகினி சொன்னதும் ‘’அப்போ நீ எப்படி பொறந்த’’ என்று பாட்டி கேள்வி கேட்க ரோகிணி சட்டென சமாளித்தவளாக ‘’எனக்கு 16 வயசு இருக்கும்போது தவறிட்டாங்கன்னு சொன்னேன்’’ என்கிறாள்.
கொஞ்ச நேரம் வாயை மூடுங்க!
பாட்டியின் அடுக்கடுக்கான கேள்வியால் ரோகிணி ‘’கொஞ்ச நேரம் வாயை மூடுங்க’’ என்று கோபப்பட்டு விட பாட்டி ‘’என்னடி சொல்ற’’ என்று திருப்பி கேட்க ‘’லிப்ஸ்டிக் போட்டு விடத்தான் பாட்டி… வாயை மூடுங்க’’ என்று தன் எரிச்சலை சமாளிக்கிறாள்.
அண்ணாமலை தரும் சர்ப்ரைஸ்!
ரோகிணி மேக்கப் போட்டு முடிந்ததும் பாட்டி வெளியே வர பரசு இரண்டு ஐயர்களுடன் வீட்டுக்கு வந்து ‘’நீ சொன்ன மாதிரியே கூட்டிட்டு வந்துட்டேன்பா’’ என்று அண்ணாமலையிடம் சொல்ல பூஜை முடிந்து நாச்சியார் பாட்டிக்கு மாலை போட்டு எல்லோரும் ஆசிர்வாதம் வாங்க மீனா மட்டும் முத்து இல்லாமல் தனியாக நிற்கிறாள். விஜயா ‘அவன் எந்த கடையில இருக்கானோ… வெளியில பிறந்தநாள் கொண்டாடுறான் போல’’ என்று கிண்டல் அடிக்கிறாள்.
முத்து எங்கே?!
எல்லோரும் ஆசிர்வாதம் வாங்கியதும் அண்ணாமலை மீனாவையும் கூப்பிட மீனா ‘’அவரும் வந்துறட்டும் மாமா’’ என்று சொல்ல மனோஜ் ‘’அவன் வந்த பிறகுதான் ஆசீர்வாதம் வாங்கணும்னா பாட்டியோட ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்காது’’ என்று கலாய்க்கிறான். மறுபக்கம் முத்து யாரையோ தேடி அலைந்தபடி இருக்கிறான். முத்துவுக்கு மீனா போன் செய்தும் போனை எடுக்காமல் இருக்கிறான்.
விஜயாவை வெளுத்து விட்ட பாட்டி!
பிறகு மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த பாட்டி ‘’நீ என்ன இன்னும் வேலை பார்த்துட்டு இருக்க ரெடி ஆகல’’ என்று கேட்க ‘’வேலையெல்லாம் முடிச்சிட்டு ரெடி ஆகிடுவேன் பாட்டி'’ என்று சொல்கிறாள். ‘’ஏன் எல்லா வேலையும் நீ தான் செய்யணுமா? இந்த வீட்ல மத்த மருமகளுங்க இல்லையா? விஜயாவை உதவிக்கு கூப்பிட்டுக்க வேண்டியது தானே’’ என்று பாட்டி சொல்கிறார்.
அதன் பிறகு பாட்டி விஜயாவை கூப்பிட்டு கிச்சனில் வேலை பார்க்கச் சொல்கிறார். மீனாவை போய் ரெடியாக சொல்ல மீனாவும் ரூமுக்கு செல்ல பாட்டி மீண்டும் கூப்பிட்டு நிறுத்தி ‘’நகை எல்லாம் எங்க? இன்னும் இவ கொடுக்கலையா’’ என்று கேட்க விஜயா அதெல்லாம் ‘’நான் எப்பவோ கொடுத்துட்டேன்’’ என்று சொல்கிறாள். ‘’நகை எல்லாம் போய் போட்டுட்டு வா’’ என்று பாட்டி மீனாவிடம் சொல்லி அனுப்புகிறார்.
டிவியுடன் வந்த பார்வதி!
அடுத்ததாக பார்வதி டிவியை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ‘’விஜயா விஜயா’’ என கூப்பிட்டபடி மேலே வருகிறாள். ‘’என்ன பார்வதி அப்படியே உள்ள எடுத்துட்டு வர வேண்டியதுதானே’’ என்று விஜயா சொல்ல ‘’தூக்க முடியாம இதுவரைக்கும் தூக்கிட்டு வந்துட்டேன்… இனிமேல் என்னால முடியாது’’ என்று சொல்ல ரவியை அனுப்பி எடுத்து வர வைக்கிறாள்.
விஜயாவால் ஷாக்கான குடும்பம்!
‘’அத்தைக்காக தான் டிவி வாங்கிட்டு வந்திருக்கேன்… அவங்க ஊர்ல பழைய டிவி வச்சுட்டு இருக்காங்க… அடிக்கடி நடுவுல கோடு வருது… சீரியல் நிறைய பார்ப்பாங்க.. அதனால புது டிவி வாங்கிக் கொடுக்கலாம்னு வாங்கிட்டு வர சொன்னேன்’’ என்று சொல்கிறாள். உடனே பாட்டி பக்கத்தில் இருந்த அண்ணாமலையை கிள்ளி இது உண்மையா பொய்யா என செக் பண்ணி பல்பு கொடுக்கிறார்.
மனோஜ் கேட்ட கேள்வி, உளறிய விஜயா!
அடுத்ததாக மனோஜ் ‘’இதெல்லாம் சரியே இல்லை’’ என்று சொல்ல விஜயா ‘’ஏன்டா என்னாச்சு’’ என்று கேட்க ‘’என் கடையில வாங்காம வேற எங்கேயோ வாங்கி இருக்கீங்க’’ என்று கோபப்பட ஒரு கட்டத்தில் விஜயா ‘’இது பழசுதான்டா’’ என்று உளறி விடுகிறாள்.
விஜயாவின் பித்தலாட்டம் முடிவுக்கு வந்துவிட்டது… ஆனால், முத்து எங்கே?!