மீனாவை அவமானப்படுத்தி பத்திரம் தர மறுக்கும் விஜயா… சவால் விடும் அண்ணாமலை! ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்
காட்சி - 1 : மீனாவை சீண்டி பல்பு வாங்கிய ரோகிணி!
மீனா கிச்சனில் இருக்கும்போது ஸ்ருதி அவளுடன் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த ரோகிணி ‘’நீங்க எதுக்கு மீனா மாமா கிட்ட காசு தரேன்னு சொன்னீங்க’’ என்று கேட்க மீனா ‘’நானும் சம்பாதிக்கிறேன்… அதனால என்னால முடிஞ்சது தரேன்னு சொன்னேன்’’ என்று சொல்கிறாள். ‘’நீங்க சம்பாதிக்கிறதுனால பணம் தரேன்னு சொன்னீங்களா இல்ல மாமா கிட்ட நல்ல பேர் எடுக்கிறதுக்காக சொன்னீங்களா?’’ என்று ரோகிணி கேட்க ‘’மாமா கிட்ட எனக்கு ஆல்ரெடி நல்ல பேரு தான் இருக்கு… அப்படி இருக்கும்போது நான் எதுக்கு அப்படி செய்யணும்’’ என்று கேட்கும் மீனா ‘’நீங்கதான் அத்தைக்கு பாக்கெட் மணி தர்றீங்க… அதை நல்ல பேர் எடுக்கவா குடுக்கறீங்க’’ என்று கேட்டு பதிலடி கொடுக்கிறாள்.
‘’மனோஜ் பிசினஸ் பண்றாரு நிறைய லாபம் கிடைக்கும்… அதனால நாங்க சொல்ற பணத்தை கொடுக்க முடியும். ஆனா நீங்க அப்படி இல்லல்ல… தினமும் உழைச்சாதானே காசு… உங்களால் எப்படி சொன்ன காசு கொடுக்க முடியும்… அவசரப்பட்டு சொல்லிட்டீங்க’’ என்று நக்கலாக ரோகிணி மீனாவிடம் பேச ‘’உங்க வீட்டுக்காரருக்கு நிறைய லாபம் வருது… ஆனா காசு கம்மியாதானே தருவேன்னு சொல்லி இருக்கீங்க… இத்தன வருஷமா என் வீட்டுக்காரர்தான் இந்த வீட்டுக்கு பணம் கொடுத்துட்டு இருக்காரு… அதனால நான் சொன்ன காசு எங்களால கொடுக்க முடியும்’’ என்று மீண்டும் மீனா பதிலடி கொடுக்க பல்பு வாங்கிய ரோகிணி வெளியே செல்கிறாள்.
காட்சி - 2 : முத்து, மீனாவின் கோபம்
மொட்டை மாடியில் மனோஜ் பேசிய பேச்சால் கடுப்பான முத்து கிச்சனுக்கு வந்து காபி கேட்க ரோகிணி பேசிய பேச்சால் கோபத்தில் இருக்கும் மீனாவும் நடந்த விஷயத்தை சொல்ல ‘’ரெண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தானே அப்படித்தான் இருக்கும்’’ என்று சொல்கிறான் முத்து.
காட்சி - 3 : இன்ஜினியருடன் அண்ணாமலை!
அண்ணாமலை ரூம் கட்ட முடிவெடுத்து பரசு எனும் என்ஜினியரை கூட்டிக்கொண்டு வருகிறார். மொட்டை மாடிக்குச் சென்று பரசு ரூம் கட்டுவதற்காக அளந்து பார்க்க இதை பார்த்து விஜயா, மனோஜ், ரவி என எல்லோரும் மொட்டை மாடியில் ஒன்று கூடி விடுகின்றனர். மொட்டை மாடியில் அளவெடுத்து முடித்த பிறகு என்ஜினியர் ‘’குறைந்தது 5 லட்சம் ஆகும் என்று சொன்னதும் அண்ணாமலை பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்றேன்’’ என்று சொல்லி அனுப்புகிறார்.
காட்சி - 4 : அண்ணாமலையின் முடிவும் குடும்பத்தின் பேச்சும்!
பின்னர் எல்லோரும் ஹாலில் ஒன்று கூட 5 லட்சம் பணத்துக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. ‘’அதுக்குத்தான் இங்க எல்லாரையும் பணம் கொடுக்க சொன்னேன்’’ என்று அண்ணாமலை சொல்ல ‘’நாங்க கொடுக்கிற பணத்தில் வீட்டு செலவு பார்க்க மீதி இருக்கிறத சேர்த்து வச்சா அஞ்சு லட்சம் சேர, இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும்’’ என ஸ்ருதி சொல்கிறாள். அண்ணாமலை ‘’அதுக்குத்தான் ஒரு லோன் வாங்கிட்டு மாச மாசம் லோன் கட்டலாம்னு ஐடியா’’ என்று அண்ணாமலை சொல்ல விஜயா ‘’நீங்களே வேலை இல்லாம வீட்ல இருக்கீங்க… உங்கள மதிச்சி யார் லோன் தருவா’’ என்று கேள்வி கேட்கிறாள். ‘’எங்க அப்பாக்கு இப்பயும் மரியாதை இருக்கு அவர் தங்கம்’’ என முத்து அப்பாவுக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறான்.
'’வீட்டு பத்திரத்தை வைத்து லோன் வாங்கலாம்’’ என்று அண்ணாமலை சொல்ல விஜயா ‘’நீங்க இங்க யாருக்கு ரூம் கட்டப் போறீங்கன்னு தெரியும்… இவங்களுக்காகலாம் என் அப்பா விட்டு பத்திரத்தை தர முடியாது. இவங்களுக்கு அஞ்சு லட்சம் செலவு பண்ணி ரூம் கட்டணுமா ஒரு குடிசை கட்டி விடுங்க.. அதுல போய் இருக்கட்டும்’’ என்று சொல்ல அண்ணாமலை ‘’குடிசையே கட்டி விட்டாகூட அதுல நீயும்நானும் தான் போய் இருக்கணும்’’ என்று சொல்லி விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். ‘’என் அப்பா கட்டி கொடுத்த வீட்டை விட்டுட்டு நான் குடிசையில இருக்கணுமா’’ என்று விஜயா கோபப்படுகிறாள்.
அவமானப்படுத்திய விஜயாவுக்கு மீனா கொடுக்கும் பதிலடி!
‘’இவ என்ன மாளிகையில் இருந்தா வந்தா… குடிசையில இருந்துதான் வந்தா… அதனால் குடிசை கட்டினாலே போதும்’’ என்று விஜயா மீனாவைப்பார்த்துச் சொல்ல மீனா ‘’எனக்கு மாளிகையும் வேண்டாம், ரூமும் வேண்டாம்… குடிசையா இருந்தாக்கூட என் புருஷனோட இருந்தா எனக்கு சந்தோஷம்தான்’’ என்று பதிலடி கொடுக்கிறாள்.
விஜயாவை அதட்டிய அண்ணாமலை!
‘’இவர் ட்ரெயின் ஓட்டத் தெரியாம ஓட்டி உங்க அப்பா மேல இடிச்சு நீ இந்த வீட்டுக்கு வந்துட்ட’’ என்று விஜயா தன் பழைய புராணத்தை மீண்டும் பேச அண்ணாமலை ‘’போதும் நிறுத்துறியா… நானும் எல்லாரும் முன்னாடியும் உன்னை கண்டிக்கக் கூடாதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க… இதே கதையை எவ்வளவு நாளைக்கு தான் பேசிட்டு இருக்க போற’’ என்று அதட்டுகிறார். மீனாவும் ‘’இப்ப எதுக்கு என் அப்பாவை பத்தி பேசுறீங்க’’ என்று கோபப்படுகிறாள். ‘’என் அப்பா ஒன்னும் யாரையும் ஏமாத்தி பணத்தை தூக்கிட்டு ஓடல’’ என்று சொல்ல மனோஜ் ‘’யாரை சொல்ற நீ’’ என்று கோபப்பட முத்து ‘’அப்படி சொன்னதும் சுருக்குன்னு குத்துச்சில அப்பவே தெரியும் உன்னதான் சொல்றானு’’ என்று பதிலடி கொடுக்கிறான். ‘’பத்திரத்தை கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டல்ல எப்படி ரூம் கட்டணும்னு எனக்கு தெரியும்’’ எனச் சவால் விடுகிறார் அண்ணாமலை.
காட்சி - 5 : குடும்பத்தை பிரிக்க பிளானுடன் வந்த சுதா!
அடுத்ததாக ஸ்ருதி ரூம் பிரச்சனை குறித்து அம்மாவிடம் போனில் சொல்ல சுதா தனியாக ஒரு பிளான் போடுகிறாள். ‘நாம அங்கப் போய் அஞ்சு லட்சம் செக்கை கொடுத்தா எப்படியும் வாங்க மாட்டாங்க… அதனால ஸ்ருதிக்கு கோவம் வரும்… அதை வச்சு குடும்பத்துல பிரச்சனையை உண்டு பண்ணி மாப்பிள்ளையும், நம்ம பொண்ணையும் நிரந்தரமா பிரிச்சு கூட்டிட்டு வந்துடலாம்’’ என்ற பிளானோடு கிளம்பி வருகிறாள்.
வீட்டுக்கு வரப்போகும் சுதாவால் என்ன நடக்கப்போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.