Siragadikka Aasai : எலுமிச்சை பழத்துடன் வந்த முத்து… உச்சகட்ட பதட்டத்தில் மனோஜ், விஜயா!
நகையை கண்டுபிடிக்க எலுமிச்சைப்பழ ஐடியாவோடு வீட்டுக்கு வருகிறான் முத்து!
நகையை எடுத்துவங்களுக்கு வாய் கோணிக்கும் எனச்சொல்ல மனோஜும், விஜயாவும் கலவரம் ஆகிறார்கள்.
எலுமிச்சைப்பழ டெக்னிக் வொர்க் அவுட் ஆகுமா?!
எலுமிச்சம் பழத்துடன் வந்த முத்து!
‘’அம்மா… தாயே… கருமாரி… கரீம்… கிரீம்… கிரீம்…’’ என சொல்லிக்கொண்டு முத்து வாசலில் நின்று சாமியை கும்பிட்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர, ‘’இந்த வீட்ல கெட்ட சக்தி இருக்கு’’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வீட்டைச் சுற்றி சுற்றி வர எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். முத்து ‘’அந்த சாமியார் சொன்ன மாதிரியே இந்த வீட்ல கெட்ட சக்தி இருக்கு… அது எனக்குத் தெரியுது’’ என்று சொல்லி போனை எடுத்து சாமியாருக்கு போன் போட்டு ‘’சாமி நான் வீட்டுக்குள்ள வந்துட்டேன்… நீங்க சொன்ன மாதிரி தான் நடக்குது… அடுத்து என்ன பண்ணட்டும்’’ என்று கேட்டு போனை வைக்கிறான்.
முத்துவால் மனோஜ் விஜயாவுக்கு அதிர்ச்சி!
முத்து ‘’நகை காணாமல் போனதால் ஒரு சாமியாரை போய் சந்தித்தேன்… அவர் பெரிய ஆளு…. நிறைய ஞானம் உள்ளவர். அவர் நகைய மாத்துனவன் இந்த ஏரியாக்குள்ள தான் இருக்கான்… ஏன் இந்த வீட்டிலேயே கூட இருக்கலாம்’’ என்று சொன்னதாக சொல்கிறான். ‘’அவர் மந்திரிச்சு ஒரு பழத்தை கொடுத்து இருக்காரு… இதை வீட்டுக்குள்ள வச்சு பூஜை பண்ணா அடுத்த 24 மணி நேரத்துக்குள்ள நகையை எடுத்தவனோட வாய் கோனையாகிமாம்'’ என்று சொல்லி செய்து காட்ட மனோஜ், விஜயா அதிர்ச்சி அடைகின்றனர். ஸ்ருதி ‘’இதெல்லாம் உண்மையா’’ என்று கேட்க மீனா ‘’ஆமா ஸ்ருதி எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் இந்த மாதிரியெல்லாம் செஞ்சிருக்காங்க… நான் பார்த்திருக்கேன்’’ என்று சொல்கிறாள். அண்ணாமலையும் ‘’ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன். சில வீட்டுலயும் பார்த்து இருக்கேன்’’ என்று சொல்கிறார்.
பதற்றத்தில் விஜயா செய்த விஷயம்!
பிறகு முத்து அந்த எலுமிச்சம்பழத்தை பூஜை அறைக்குள் கொண்டு சென்று வைக்கப் போக ஓடிவந்த விஜயா தடுத்து நிறுத்தி ‘’டேய் என்னடா பண்ற? எதை எதையோ கொண்டு வந்து வீட்டில் வைக்கிற’’ என்று கோபப்பட ‘’நீங்க எதுக்கு பயப்படுறீங்க’’ என்று முத்து மடக்குகிறான். விஜயா ‘’எனக்கு பயம்லாம் இல்ல’’ என்று சொல்ல மனோஜ் ‘’அதானே யாருக்காவது ஏதாவது ஆனா என்னடா பண்றது’’ என்று கேள்வி கேட்க ‘’எடுத்தவங்களுக்கு தான் வாய் கோணையாகும்’’ என்று எலுமிச்சம்பழத்தை கொண்டு போய் வைக்க அண்ணாமலை ‘’என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்’’ என்று உள்ளே செல்கிறார்.
மீனா கேட்ட கேள்வி… உண்மையை சொன்ன முத்து!
முத்து கிச்சனில் உட்கார்ந்திருக்க ‘’ஏங்க நீங்க பயங்கரமான ஆள்தான்… வெத்தலைல மை போட்டு பார்க்கப் போலாம்னு சொன்னதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு நீங்க வேற ஒரு சாமியார் பார்க்க போயிருக்கீங்க... யார் அந்த சாமியார், அவரோட பேர் என்ன’’ என்று கேட்க ‘’அந்த சாமியார் உன் முன்னாடி தான் இருக்கேன் உனக்கு தெரியலையா’’ என்று எலுமிச்சம்பழக் கதையை சொல்கிறான்.
பயத்தில் மனோஜ், விஜயா!
விஜயா, மனோஜ் ரூமுக்கு வந்து ‘’எல்லாம் உன்னாலதான் அவன் எதோ மந்திரிச்சி பழத்த எல்லாம் கொண்டு வந்து வச்சிருக்கான்… என்ன நடக்க போகுதுன்னு தெரியல…’’ என்று கோபப்பட மனோஜுக்கு விஜயா வாய் கோணையாக சென்றது போல தெரிகிறது. அதேப்போல் விஜயாவுக்கு மனோஜ் வாய் கோணையாக சென்றது போல தெரிய இருவரும் மாற்றி மாற்றி சத்தம் போட்டுக்கொள்ள ரோகிணி உள்ளே வந்து ‘’உங்களுக்கு ஒன்னும் ஆகல.. ரெண்டு பேரும் நல்லா தான் இருக்கீங்க’’ என்று சொல்கிறாள். ‘’முத்து கோயில் உள்ளவே வர மாட்டாரு… அப்படி இருக்கும் போது அவர் எப்படி சாமியாரப் போய் பார்ப்பாரு… சும்மா உங்களுக்கு பயம் காட்டுறதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு… பயந்து நீங்களே உங்களை காட்டிக் கொடுக்காதீங்க’’ என்று சொல்லி மனோஜை அமைதிப்படுத்துகிறாள்.
ஆர்வத்தில் ஸ்ருதி!
எலுமிச்சம் பழத்தை பற்றிய யோசனையில் இருக்கும் ஸ்ருதியை பின்னாடி இருந்து ரவி தொட அவள் பயந்து நடுங்குகிறாள். பிறகு ரவி ‘’உனக்கு இதுலலாம் நம்பிக்கை இருக்கா’’ என்று கேட்க ‘’நம்பிக்கைலாம் இல்லை… ஆனா இப்படி எல்லாம் இருக்கும்னு சொல்லுவாங்க… கேரளாவுல இப்படியெல்லாம் அதிகம் பண்ணுவாங்க’’ என்று சொல்கிறாள். அதன் பிறகு மீனாவை கூப்பிட்டு ‘’முத்து எந்த சாமியாரை போய் பார்த்தாரு’’ என்று கேட்க அவள் முத்து சொன்ன விஷயத்தை சொல்கிறாள். உடனே ஸ்ருதி ‘’இது சூப்பர் ஐடியா சிலர் பயத்திலேயே உண்மையை சொல்லிடுவாங்க’’ என்று சொல்கிறாள்.
தூக்கமின்றி தவிக்கும் மனோஜ்!
நைட் ஆனதும் ரோகிணி நன்றாக அசந்து தூங்க மனோஜ் எலுமிச்சம்பழத்தை நினைத்து நினைத்து தூக்கம் வராமல் தவிக்கிறான்.
மாட்டுவானா மனோஜ்?!