‘சிறகடிக்க ஆசை’ இன்று : பாட்டி வைத்து பஞ்சாயத்து… அடங்கிப்போன விஜயா… ஆட்டம் கண்ட மனோஜ்!
மீனா கேட்ட கேள்வி, அதிர்ச்சியான ரோகிணி!
ரோகிணி பிரசவ வலி குறித்து அடுக்கிக் கொண்டே செல்ல ஸ்ருதி மற்றும் மீனா அப்படியே வச்ச கண் வாங்காமல் பார்க்க ‘’என்ன அப்படி பாக்கறீங்க’’ என்று கேட்க ‘’இல்ல வலி இருக்கும்னு தெரியும்… ஆனா, இவ்வளவு இருக்குமா? நீங்க என்ன குழந்தை பெத்த மாதிரியே சொல்றீங்க’’ என்று மீனா கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். ‘’இல்ல என்னோட க்ளையன்ட்ஸ் என்கிட்ட இதைப்பத்திலாம் ஷேர் பண்ணி இருக்காங்க. அதனால தெரியும் அவ்வளவுதான்’’ என்று சொல்கிறாள். அதன் பிறகு ஸ்ருதி ‘’இவ்வளவு வலிய தாங்கிக்கிட்ட பிறகும் எப்படி குழந்தை பெத்துக்குறாங்க… என்னாலலாம் முடியாது’’ என சொல்கிறாள்.
தாய்மை பற்றி பேசிய மீனா!
‘’என்ன ஸ்ருதி இப்படி சொல்றீங்க’’ என்று கேட்க ‘’நீங்க ரெண்டு பேரும் குழந்தை பெத்துப்பீங்க தானே… அதுல நான் ஒன்னை அடாப்ட் பண்ணிக்கிறேன்’’ என்கிறாள். ‘’நாம யார் குழந்தை பெத்துக்கிட்டாலும் அது எல்லாருக்கும் குழந்தைதான். ஆனாலும் உங்களுக்கு ஒரு குழந்தை வேணும்ல, ரவிக்கும் ஆசை இருக்கும்ல’’ என்று சொல்ல ‘’அவனுக்கு ஆசை இருந்தா அவன் பெத்துக்கட்டும்’’ என்று சொல்கிறாள். ரோகிணி ‘’அப்போ ஒரு சண்டை இருக்கு’’ என்று சொல்ல ‘’சண்டை எல்லாம் இல்ல இதுக்கு வேற வழி பண்றேன்’’ என்று சொல்கிறாள்.
பாட்டியுடன் வந்த முத்து!
முத்து பாட்டியுடன் வீட்டுக்கு வருகிறான். ‘’பாட்டி பிரச்சனையை சரி பண்ணிடலாம்ல’’ என்று கேட்க ‘’இத முன்னாடியே சொல்லி இருந்தா எப்பவோ சரி பண்ணி இருக்கலாம்’’ என்று சொல்கிறார். மீனாவும் பாட்டியை பார்த்து கீழே ஓடி வர ‘’ நீ கூட என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சிட்டல்ல’’ என்று கோபப்படுகிறார். ‘’இல்ல பாட்டி நீங்க பிறந்தநாள் முடிஞ்சி சந்தோஷமா போனீங்க… உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல’’ என்று சொல்ல ‘’சந்தோஷம் மட்டும்தான் படணுமா? இந்த குடும்பத்துல கஷ்டம்னா அதுல பங்கெடுக்க கூடாதா’’ என்று கேள்வி கேட்கிறார்.
அதிர்ச்சியான விஜயா!
உள்ளே நுழைந்த பாட்டி விஜயா என கூப்பிட சோஃபாவில் உட்கார்ந்து இருந்தவள் நாச்சியார் பாட்டியை பார்த்து ஷாக் ஆகிறாள். ‘’வாங்க அத்தை எப்ப வந்தீங்க? என்ன திடீர்னு’’ என்று கேள்வி கேட்க ‘’ஏன் வரக்கூடாதா’’ என்று திருப்பி கேட்க ‘’அப்படி இல்ல அத்தை… போனவாரம் தானே வந்து போனீங்க… அதனால’’ என்று பதில் சொல்ல ‘’வீட்டுக்கு பெரிய மனுஷி… ஆனா, என்ன வேலை பண்ணியிருக்க’’ என்று கோபப்படுகிறார். ‘’அண்ணாமலை எங்க’’ என்று கேட்க ‘’அவர் மேல இருக்காரு’’ என்று சொல்லவும் ‘’போய் கூப்பிடு’’ என்று சொல்ல விஜயா முழிக்க ‘’முத்து அங்கதான பிரச்சனை’’ என்று சொல்ல பாட்டி ‘’என் பையன நானே கூப்பிடுறேன்’’ என்று சொல்லி மேலே செல்கிறார்.
அண்ணாமலைக்கு அறிவுரை!
மேலே வந்த பாட்டி அண்ணாமலையை கூப்பிட அவர் ‘’அம்மா எப்ப வந்தீங்க’’ என்று கேள்வி கேட்க ‘’வீட்ல நடந்தது எல்லாம் எனக்கு தெரியும். முத்து சொல்லிட்டான்… அதுக்காக விஜயாகிட்ட பேசாம இருப்பியா? அவ புள்ள பாசத்துல இப்படி பண்ணிட்டா… விஜயாவ பத்தி தெரிஞ்ச விஷயம் தானே’’ என்று சொல்ல ‘’அவ பண்ற ஒவ்வொன்னத்தையும் பொறுத்துக்கிட்டு போக முடியல’’ என்று அண்ணாமலை வருத்தப்படுகிறார். ‘’எல்லாம் சரிதான்… ஆனா, என்னதான் இருந்தாலும் அவளும் பொண்டாட்டியை விட்டுக் கொடுத்துட்டுத்தான் போகணும். பிரச்சனைக்காக பேசாம இருந்தா நாளைக்கு உங்களுடைய பிள்ளைங்களும் உங்ககிட்ட இருந்து அதுதான் கத்துப்பாங்க’’ என்று அறிவுரை சொல்கிறார். ‘’விஜயாவ மன்னிச்சிடு’’ என்று சொல்ல அவர் ‘’மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணும்’’ என்று அண்ணாமலை சொல்ல ‘’அப்படி செய்ய சொன்னா மீனாவ இன்னும் கொடுமைதான் படுத்துவா’’ என்று சொல்கிறார்.
மன்னிப்பு கேட்க சொன்ன பாட்டி!
அண்ணாமலையுடன் கீழே வந்த நாச்சியார் பாட்டி விஜயாவிடம் ‘’செஞ்ச தப்புக்காக அண்ணாமலையிடம் மன்னிப்பு கேள்’’ என்று சொல்ல ‘’அவளும் தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க’’ என்று சொல்ல ‘’எல்லார் முன்னாடியும்தான் இந்த பிரச்சனை நடந்துச்சு… அதனால எல்லாரும் முன்னாடியும் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க’’ என்று சொல்கிறார். முத்து மனோஜ் மற்றும் ரோகிணியை வெளியே கூப்பிட மீனா ரவி ஸ்ருதியை வெளியே கூப்பிடுகிறாள். பிறகு மொத்த குடும்பமும் ஒன்று கூட பாட்டி ‘’இப்போ மன்னிப்பு கேளு’’ என்று சொல்ல விஜயா மன்னிப்பு கேட்க அண்ணாமலையும் மன்னித்து விட்டதாக சொல்கிறார். பிறகு மனோஜை கூப்பிட அவனும் ‘’பாட்டி’’ என ஆர்வமாக அருகில் வர பளார் என அறைகிறார். ‘’எல்லாம் உன்னால வந்ததுதான்'’ எனத் திட்டுகிறார்.
ரோகிணிக்கு விழுந்த டபுள்டோஸ்!
‘’ஏண்டியம்மா மூத்த மருமகளே… அவன் அம்மாகாரிதான் செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்து வச்சிருக்கா... நீயாவது அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்தக்கூடாதா? இனிமே அவன நல்லபடியா இருக்கச் சொல்லு’’ என்று அட்வைஸ் செய்கிறார். ‘’பொறுப்பா இருக்கணும்னா ஒரு வழி இருக்கு’’ என்று முத்து சொல்ல என்னவென்று கேட்கிறார்.
முத்து கொடுத்த ஐடியா!
‘’மொத்தமா 29 லட்சம் தரணும்… மாசம் மாசம் 50,000 தர சொல்லுங்க அப்பதான் அவனுக்கு பொறுப்பு வரும்’’ என்று ஐடியா கொடுக்க மனோஜ், ரோகிணி அதிர்ச்சி அடைய ஸ்ருதி ‘’இதுவும் நல்ல ஐடியாதான்’’ என்று சொல்ல அண்ணாமலையும் ‘’முத்து சொல்றது தான் சரி’’ என்று சொல்கிறார்.
மனோஜ் ‘’எனக்கு நிறைய செலவு இருக்கு… பிசினஸ்ல நிறைய இன்வெஸ்ட் பண்ணனும்.. மாசா மாசம் கொடுக்க முடியாது’’ என்று சொல்ல நாச்சியார் பாட்டி விஜயாவிடம் ‘’நீ சொன்னாதான் உன் புள்ள கேப்பான் சொல்லு’’ என்று அதட்ட விஜயா ‘’அந்த பணத்தாலதானே இவ்வளவு பிரச்சனை சரினு சொல்லுடா’’ என்று சொல்கிறாள்.
அடங்கிப்போகும் விஜயா அடுத்து செய்யப்போவது என்னவோ?!