Siragadikka Aasai : முத்துவிடம் தொக்காக வந்து சிக்கிய மனோஜ்… விஜயா கொடுத்த ட்விஸ்ட்!
முத்துவும் செல்வமும் ஃப்ரிட்ஜ் வாங்க கடைக்குப்போக, அது ஒரு திருட்டுக் கடை என்பது தெரியவருகிறது.
போலீஸிடம் திருடிய பொருட்கள் எல்லாம் மாட்ட மனோஜ் அதில் என் பொருள் இல்லை என்கிறான். இதை வீடியோவாக எடுக்கும் முத்து வீட்டில் வந்து அதை எல்லோருக்கும் காட்டுகிறான்.
வீடியோவைப் பார்த்ததும் பதறும் விஜயா மனோஜை அடித்து வெளுக்கிறாள்.
கைதான முத்து!
செல்வம், முத்து இருவரும் ஃப்ரிட்ஜ் வாங்குவதற்காக ஒரு கடைக்கு வருகின்றனர். மனோஜ் கடையில் கொள்ளை அடித்த கும்பல் தான், பல இடங்களில் கொள்ளை அடித்ததைவைத்து புதிய கடையை போட்டு பொருட்களை பாதி விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
மனோஜ் கடையில் பார்த்த அதே ஃபிரிட்ஜை வெறும் ஐயாயிரம் ரூபாய் எனப்பார்க்க, செல்வம் சந்தோஷத்தோடு பொருளை வாங்க பணத்தை கொடுக்க, திடீரென போலீஸ் சுற்றி வளைத்து உள்ளே நுழைய, கொள்ளைக்கார கும்பல் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய போலீஸ் அங்கிருந்த அனைவரையும் கைது செய்கிறது.
முத்துவும் செல்வமும் ''நாங்க பொருள் வாங்கத்தான் வந்தோம்'' என்று சொல்லியும் போலீஸ் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்க என்று அழைத்துச் செல்கின்றனர்.
முத்துவின் கோபம்!
முத்து கொள்ளைக்கார கும்பலிடம் ‘’இப்படி அடுத்தவங்க பொருளை ஆட்டைய போட்டு சம்பாதிக்க உங்களுக்கு கொஞ்சம் கூட கூசவே இல்லையா’’ என்று அடிக்க பாய ‘’எங்க மேல கைய வச்ச நீங்களும் எங்க குரூப்புதான்னு சொல்லி ஜெயில்லயே இருக்க வச்சுடுவேன்’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
ஆதாரத்துடன் சிக்கிய மனோஜ்!
பொருளை ஏமாந்த கடைக்காரர்கள் ஸ்டேஷனுக்கு வந்து அவர்களது பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல மனோஜ் ஓடிவந்து ‘’சார் பொருள் எல்லாம் கிடைச்சுச்சுன்னு போன் வந்துச்சு. ஆனா, இங்க வந்து பார்த்தா என்னுடைய பொருள் ஒன்னு கூட இல்லை’’ என்று புலம்புகிறான். மனோஜின் குரலை கேட்ட முத்து அவன் பேசுவதை வீடியோவாக எடுத்து கொள்கிறான்.
மனோஜுக்கு வேட்டு வைத்த முத்து!
மனோஜின் பொருள் குறித்து கொள்ளைக்காரர்களிடம் விசாரிக்க ‘’அது எல்லாமே நல்ல பிராண்ட் சார்… மொத்தமும் வித்துப் போச்சு’’ என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். போலீஸ் ‘’பொருள் கிடைச்சா சொல்லி அனுப்புறோம்’’ என்று அனுப்பி வைக்க மனோஜ் ஏமாற்றத்துடன் கிளம்பி செல்கிறான்.
அதன் பிறகு முத்துவுக்கும், இந்த கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வந்ததும் போலீஸ் அவர்களை விடுதலை செய்ய வீட்டிற்கு வந்த முத்து கதவை சாத்தி லாக் போட்டு வீட்டில் உள்ள மொத்த பேரையும் கூப்பிட்டு மனோஜ் ஏமாந்ததை படம் போட்டு காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனா ரோகிணியை நிற்க வைத்து கேள்வி கேட்க ரோகிணி ‘’என்ன மனோஜ் இதெல்லாம்’’ என்று கோபப்படுகிறாள்.
பணத்தைக் கேட்டு அடிக்க பாய்ந்த முத்து!
‘’சரி 4 லட்சம் ரூபாய் பணம் எப்படி வந்துச்சு’’ என்று கேள்வி கேட்டு அடிக்க போக மனோஜ் பயந்து நடுங்கி நிற்கிறான். மனோஜ் நகையை பற்றி சொல்லி விடக்கூடாது என்பதற்காக விஜயா இடையில் புகுந்து ‘’ஏன்டா இப்படி பொய் சொன்ன’’ என்று வளைத்து வளைத்து அடித்து ‘’யார் கிட்ட கடன் வாங்கின சொல்லுடா’’ என்று திரும்பத் திரும்ப கேட்க மனோஜ் தன்னுடைய நண்பன் சந்தோஷிடம் கடன் வாங்கியதாக சொல்கிறான்.
‘’யாருடா சந்தோஷ்’’ என்று அண்ணாமலை கேட்க ‘’பார்க்கில் இவனோட படுத்து தூங்கிட்டு கிடப்பானே அவன் தான்பா’’ என்று ரவி சொன்னதும் ‘’ஆமாம்பா அவன் தான்… வட்டிக்கு பணம் கொடுக்கிறான்.. அவன்கிட்ட தான் கடன் வாங்கினேன்’’ என்று பொய் சொல்கிறான். திரும்பவும் விஜயா மனோஜை போட்டு அடித்து டிராமா போட ‘’விடுங்க ஆன்ட்டி அவர் யாரையும் ஏமாத்தலையே ஏமாந்து போய் தானே நிக்கிறாரு’’ என்று சொல்கிறாள் ரோகிணி.
ஆக இன்னைக்கும் உண்மை வெளில வரல!