போட்டியில் தொடங்கி பஞ்சாயத்தில் முடிந்த 'பொண்டாட்டிகளை தூக்கும்' சம்பவம்… ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்!
ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு சுற்ற, இதைப்பார்த்து மீனா முத்திவிடம் கேட்க முத்துவும் மீனாவைத்தூக்கொண்டு சுற்ற, மனோஜும், ரோகிணியைத் தூக்கிக்கொண்டு சுற்றுகிறான்.
விஜயா நடுவீட்ல இப்படியா சுத்துவீங்க என சண்டைபோட ரூம் இருந்தா நாங்க ஏன் நடுவீட்ல சுத்துறோம் எனப் பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது.
ரூம் பஞ்சாயத்தில் அப்பா அண்ணாமலை எடுக்கப்போகும் முடிவு என்ன?
காட்சி - 1 : மீனாவின் கோபத்தால் முத்து எடுத்த முடிவு!
‘’டேய் ரவி… என்னடா பண்ற பல குரல்(ஸ்ருதி) கீழ விழுந்துடுச்சா’’ என்று முத்து கேட்க ‘’ஸ்ருதி என்னங்க ஆச்சு’’ என்று மீனா கேட்க ரவி ‘’ஏதோ ஒரு வீடியோவை பார்த்து இருக்கா… அது நமக்கு டேஞ்சர் ஆகிடுச்சு'’ என்று சொல்ல ஸ்ருதியோ, ‘’என் மேல எவ்ளோ லவ் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்டு இருக்கான்’’ என்று சொல்கிறாள். பிறகு மீனா, முத்துவிடம் ‘’உங்க தம்பி அதாவது பண்றாரு.. எனக்காக நீங்க என்ன பண்ணீங்க’’ என்று கேட்க முத்து ‘’உன்னை தூக்கிட்டு மலை மேல ஏறுனது ஞாபகம் இல்லையா’’ என்று கேட்க ‘’அது வேண்டுதல்… எனக்காகவா பண்ணீங்க’’ என்று சொன்னவள் ‘’நீங்க எனக்காக எதுவும் பண்ண மாட்டீங்க, எனக்கு தெரியும் விடுங்க’’ என்று கோபித்துக் கொள்ள ‘’இப்ப என்ன உன்னை தூக்கணும் அவ்வளவு தானே.. மூணு இல்ல 30 சுத்து சுத்துறேன்’’ என மீனாவை தூக்கிக் கொண்டு சுத்த தொடங்குகிறான் முத்து.
போட்டியில் சேர்ந்து கொண்ட ரோகிணி, மனோஜ்!
ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டுக்கு வர முத்து மீனாவை தூக்கிக்கொண்டு சுற்றுவதையும் ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு சுற்றுவதையும் பார்த்து என்ன நடக்குது இங்க என்று கேட்க அவங்களுக்கு எவ்வளவு லவ் இருக்குன்னு போட்டி என்று ஸ்ருதி சொல்ல ரோகிணி மனோஜை பார்க்க ‘’இப்ப என்ன உன்னை தூக்கணும் அதானே புரியுது’’ என்று கஷ்டப்பட்டு ரோகிணியை தூக்கிக்கொண்டு சுத்த ஆரம்பிக்கிறான்.
காட்சி - 2 : விஜயாவின் கோபமும் முத்துவின் கலாயும்!
கோவிலுக்குப்போன அண்ணாமலை மற்றும் விஜயா வீட்டுக்கு வர, மூணு பேரும் ஜோடி ஜோடியாக மனைவிகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை பார்த்து அண்ணாமலை வெட்கப்பட்டு வெளியேவே நிற்க விஜயா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். வீட்டுக்குள் வந்து ‘’என்னடா பண்ணிட்டு இருக்கீங்க… பொண்டாட்டியை தூக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க, யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க’’ என்று கோபப்படுகிறாள். முத்து ‘’எங்க பொண்டாட்டியை தானே தூக்கிட்டு சுத்துறோம் ரோட்ல போறவங்கள தூக்கிக்கிட்டு சுத்தலையே’’ என்று பதிலடி கொடுக்கிறான்.
மீண்டும் தொடங்கிய ரூம் பஞ்சாயத்து!
இதையெல்லாம் ரூம்ல வச்சுக்க வேண்டியது தானே என்று விஜயா கேள்வி கேட்க ‘’மூணு பசங்க இருக்கோம் ரெண்டு ரூம் தான் இருக்கு’’ என்று முத்து பதிலடி கொடுக்க ‘’மனோஜ் நான் இப்போ பெரிய பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்… என்னால வெளிய எல்லாம் படுத்து தூங்க முடியாது… நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாத்தானே பிசினஸ் நல்லா பார்க்க முடியும். அதனால எனக்கு ரூமை கொடுத்துடுங்க’’ என்று பஞ்சாயத்தை தொடங்கி வைக்கிறான்.
வெடித்த வாக்குவாதம்!
மனோஜ் சொன்னதை கேட்ட முத்து வேலை செஞ்சா டயர்ட் ஆகத்தான் செய்யும். இந்த வீட்டுல வேற யாரும் வேலையே செய்யலையா என்று கேள்வி கேட்க ரவி அதானே நானும்தான் நாளெல்லாம் கிச்சன்ல நின்னுட்டு வரேன் முத்து கார் ஓட்டிட்டு வரான். எல்லாருக்கும் டயர்டாகத்தான் செய்யும்… அதனால அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்’’ என்று சொல்கிறான். ‘’உனக்கென்ன நீ ரூம்ல இருக்க’’ என்று மனோஜ் கேட்க ‘’என்னுடைய டர்ன் வரும்போது நானும் வெளியே தானே வரணும்’’ என்று முத்து சொல்ல, ரோகினி ‘’அதான் ஸ்ருதி அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன்னு சொன்னாலே’’ என்று கேட்க மீனா ‘’சொன்னாங்க போகலையே’’ என்கிறாள்.
‘’ஏன் போகலன்னு கஷ்டமா இருக்கா… எல்லாரும் இந்த வீட்டை விட்டு அனுப்பிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறியா’’ என்று மீனாவிடம் விஜயா கொந்தளிக்க ‘’அப்படி நினைச்சிருந்தா நாங்க ஏன் ஹால்லயும் மொட்டை மாடிலயும் படுத்து தூங்க போறோம்’’ என மீனா பதிலடி கொடுக்கிறாள்.
பஞ்சாயத்தை தீர்க்க முத்து எடுத்த முடிவு!
முத்து ‘’மூத்த பையன் அந்த ரூம்ல இருக்கட்டும், இளைய பையன் இந்த ரூம்ல இருக்கட்டும். நான் நடு பையன் தானே நடு ஹால்லயும் மொட்டை மாடிலயும் படுத்து தூங்கிக்கிறேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று சொல்கிறான். மீனாவும் ‘’ஆமா மாமா எங்களுக்கு எதுவும் வேண்டாம்’’ என்று அண்ணாமலையிடம் சொல்கிறாள். இதைக் கேட்ட விஜயா ‘’இப்பயாவது புத்தி வந்துச்சே’’ என்று பேச அண்ணாமலை மீனாவிடம் நோட்டு பேனாவை எடுத்த வரச் சொல்கிறான்.
அண்ணாமலை போடும் கணக்கு!
வீட்டில் இருக்கும் எல்லோரையும் உட்கார வைக்கும் அண்ணாமலை ‘’இந்த வீட்டுக்கு எல்லாரும் மாசா மாசம் எவ்ளோ பணம் தருவீங்கன்னு சொல்லுங்க’’ என்று கணக்கு கேட்க மனோஜ் ‘’எதுக்குபா இதெல்லாம்… ஆல்ரெடி கொடுத்துட்டு தானே இருக்கோம்’’ என்று சொல்ல, அண்ணாமலை ‘’இப்போ சொல்லுங்க உங்களால அதிகபட்சமா எவ்வளவு தர முடியும்'’ எனக்கேட்கிறார்.
விரலைக் காட்டிய ரோகிணி, வில்லங்கம் செய்த முத்து!
பிறகு மனோஜ் திரு திருவென முழிக்க ரோகிணி விரலைக் காட்ட மனோஜ் 3,000 ரூபாய் என்று சொல்கிறான். என் பையன் பெரிய பிசினஸ் பண்றான் அவன் நிறைய தான் கொடுப்பான் என பில்டப் கொடுத்த விஜய்யா பல்பு வாங்குகிறாள். அதன் பிறகு முத்துவிடம் கேட்க ‘’மீனா நீ விரலை காட்டு’’ என்று சொல்ல அவள் ‘’நான் சொன்னா மட்டும் அப்படியே கேட்கவா போறீங்க’’ என்று சொல்ல முத்து ‘’நீ காட்டு’’ என்று அடம்பிடிக்க மீனா 10 விரலையும் காட்ட ‘’பாருங்க மீனா 10 விரலையும் காட்டுறா… நான் பத்தாயிரம் தரேன்’’ என்று சொல்கிறான். அடுத்து ரவியும் நானும் பத்தாயிரம் தரேன் என்று சொல்கிறான். பிறகு மீனா ‘’நானும் சம்பாதிக்கிறேன். அதனால என்னால முடிஞ்சதை நானும் இந்த வீட்டுக்கு கொடுக்குறேன்… மாசம் 2000 தரேன்’’ என்று சொல்ல மனோஜூம் ரோகிணியும் அதிர்ச்சி அடைய ரோகிணி ‘’நான் அஞ்சாயிரம் தரேன்’’ என்று சொல்ல சுருதி ‘’நானும் வேலைக்கு போறேன்… அதனால நான் பத்தாயிரம் தரேன்’’ என்று சொல்கிறாள்.
காட்சி - 3 : மனோஜ், முத்து இடையே மோதல்!
மொட்டை மாடியில் மனோஜ், முத்து, ரவி என மூவரும் ‘’அப்பா எதுக்கு திடீர்னு பணம் கேட்குறாரு… என்ன விஷயம்ன்னு தெரியலையே’’ என புலம்ப, மனோஜ் ‘’ஒருவேளை மூணு ரூம் தான் இருக்கு… அதை நம்ம மூணு பேருக்கு விட்டுட்டு அம்மாவை கூட்டிட்டு வெளியே தனியா போகப்போறாருன்னு நினைக்கிறேன்’’ என்று சொல்ல முத்து மனோஜை துரத்தி அடிக்க ஓடுகிறான். ‘’நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அப்பாவ தனியா விடமாட்டேன்’’ என்று சொல்கிறான். ‘’அப்பாவுக்கும் நம்ம கூட இருக்கணும்னுதான் ஆசை’’ எனச் சொல்கிறான்.
‘’இந்த வீட்டை வித்துட்டு ஒரு அபார்ட்மென்ட்ல நாலு ஃபிளாட் வாங்கிடலாம்’’ என்று ரவி ஐடியா கொடுக்க மனோஜ் ‘’எனக்கு கிரவுண்ட் ப்ளோர்’’ என கை தூக்குகிறான். ‘’ஏன்டா ரூம் இல்லாம இருக்க நானே இந்த வீட்டை விட்டு போகணும்னு யோசிக்கல… உங்களுக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது’’ என்று முத்து கோபப்படுகிறான்.
‘’நான் கூடிய சீக்கிரம் பெரிய பிசினஸ் மேன் ஆகிடுவேன்.. நிறைய பிரான்ச் ஓபன் பண்ணுவேன். அப்போ இந்த மாதிரி வீட்ல இருக்க முடியுமா… காலத்துக்கேத்த மாதிரி மாறுங்கடா’’ என்று மனோஜ் பேச ஆரம்பிக்க அந்த பேச்சு அப்படியே மீனா பற்றியும் மீனா குடும்பத்தை பற்றியும் மாற முத்து ‘’மீனாவை பத்தி பேசுன அவ்ளோதான்’’ என்று கோபப்பட்டு அடிக்க பாய்கிறான். ‘’இனிமே இவன் இருக்கும்போது நான் மொட்டை மாடிக்கே வரமாட்டேன்’’ என்று முத்து சொல்ல ‘’இனிமே நான் மொட்டை மாடி பக்கமே வரமாட்டேன்’’ என்று மனோஜ் சொல்லிவிட்டு கீழே போகிறான்.
ரொமான்ஸில் ஆரம்பித்து அண்ணன் - தம்பிகளுக்கு இடையேயான சண்டையோடு முடிந்திருக்கிறது இன்றைய எபிசோட்!