‘சிறகடிக்க ஆசை’ இன்று : கிரிஷ்ஷின் பிறந்தநாள் பார்ட்டியில் முத்து, மீனா... ரோகிணி உண்மை வெளிவருமா?
ரவியை அதிர்ச்சியாக்கிய சுதா!
ரவி ரெஸ்டாரன்ட்டில் இருக்க அவளைப் பார்க்க வந்த சுதா ‘’ரெஸ்டாரன்ட் திறந்த பிறகு தான் குழந்தை பெற்றுக்குவேனு சொன்னீங்களா? எதுக்கு மாப்பிள்ளை இதையெல்லாம் தள்ளி போடணும்? எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கணும். உங்களுக்கு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணணும் அவ்வளவுதானே? எங்க கிட்ட கேட்டா நாங்க ஏற்பாடு பண்ண மாட்டோமா’’ என்று கேட்க ரவி ‘’அதெல்லாம் வேண்டாம்’’ என்று சொல்கிறான். ‘’நானே லோன் போட்டு பார்த்துக்குறேன்’’ என்று சொல்ல ‘’நீங்க எதுக்கு லோன் போட்டு கஷ்டப்படணும்? நீங்களும் எங்க வீட்டு பையன் மாதிரி தான்’’ என்று சொல்லி பிளாங்க் செக்கை கையில் கொடுக்க ரவி அதிர்ச்சி அடைகிறான்.
ஸ்ருதியிடம் கோபத்தைக் காட்டிய ரவி!
ரவி அந்த ப்ளாங்க் செக்குடன் கோபமாக கிளம்பி ஸ்ருதியின் ஸ்டூடியோவுக்கு வருகிறான். வெளியே நின்று போன் செய்ய சுருதி போனை எடுக்காத நிலையில் உள்ளே வந்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கின்ற ஸ்ருதியின் முகத்தில் செக்கை தூக்கி வீசி எதுவும் பேசாமல் வெளியே வருகிறான்.
பின்னாடியே வந்த சுருதி ‘’எதுக்கு இப்போ இதை தூக்கி வீசிட்டு போற… என்ன ஆச்சு’’ என்று கேட்க ‘’இங்க நடக்கிறத வீட்ல சொல்லாதன்னு சொன்னா நீ கேக்க மாட்டியா? ரெஸ்டாரன்ட் தொடங்க பணம் வேணும்னு உன்கிட்ட கேட்டனா? நான் என் அப்பாகிட்டயே கேக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது உங்க வீட்ல எப்படி வாங்குவேன்’’ என்று திட்டுகிறான். ‘’என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது குழந்தை பத்தி கேட்டாங்க. முதல்ல ரவி ரெஸ்டாரன்ட் திறக்கட்டும்னு சொன்னேன், பணத்தை கொண்டு வந்து கொடுப்பாங்கனு நான் எதிர்பார்க்கல. நான் எனக்கே அவங்க கிட்ட பணம் கேட்க மாட்டேன். உனக்கா கேட்கப் போறேன்? உனக்கு வேணும்னா யூஸ் பண்ணிக்க.. வேணாம்னா கிழிச்சு போட்டுட்டு போ.. இன்னொரு முறை இப்படி ஸ்டுடியோவுக்கு வந்து சீன் கிரியேட் பண்ணாத’’ என்று திட்டுகிறாள்.
கிரிஷ்ஷை பார்க்க வந்த ரோகிணி!
ரோகிணி ஊருக்கு வர அம்மாவை பார்த்ததும் க்ரிஷ் சந்தோஷத்துடன் கட்டி அணைத்துக் கொள்கிறான். பிறகு ‘’என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க… நீ தான் என் அம்மானு சொல்லட்டுமா’’ என்று கேட்க ‘’அதுக்கான டைம் இது இல்ல… ஒரு நாள் அம்மாவே அவங்க எல்லார்கிட்டயும் நான்தான் உன் அம்மானு சொல்றேன். இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று சொல்கிறாள். பிறகு கிரிஷ்க்காக வாங்கி வந்த துணியை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறான் கிரிஷ்.
ரோகிணியின் அம்மா ‘’நைட்டெல்லாம் உன்ன பத்தி தான் கேட்டுக்கிட்டே இருந்தான். அவன் வளர்ந்துட்டு வரான்… ரொம்ப நாளைக்கு உண்மையை மறைக்க முடியாது. உன்னுடைய கல்யாண விஷயத்தை பத்தி எப்படி சொல்லப் போற’’ என்று கேட்க ரோகிணி ‘’நான் இப்போ இங்கே இருக்கவா? கிளம்பி போகவா’’ என்று கோபப்படுகிறாள். அதன் பிறகு க்ரிஷ் கோட்டு சூட்டில் வர ரோகிணி ‘’சூப்பரா இருக்கு’’ என்று சொல்கிறாள். அக்கம் பக்கத்தினர் கிரிஷ்க்கு வாழ்த்து சொல்ல வந்து விட கேக் கட் பண்ண தயாராகின்றனர்.
முத்து, மீனாவின் என்ட்ரி!
இந்த நேரத்தில் முத்து மற்றும் மீனா என இருவரும் கிரிஷ்ஷை பார்க்க வர ரோகிணி அதிர்ச்சி அடைந்து கிச்சனுக்குள் ஓடி ஒளிகிறாள். அதன் பிறகு கிரிஷ்க்கு பிறந்தநாள் என்பது தெரிய வந்து அவனுக்காக எடுத்து வந்த டிரெஸ்ஸை கொடுக்கின்றனர்.
கேக் தயாராக இருப்பதை பார்த்து முத்து, மீனா கேக் வெட்ட சொன்னதும் க்ரிஷ் அம்மா, அத்தை என மாத்தி மாத்தி பேச முத்து ஒரு நிமிஷம் என்று ரோகிணியின் அம்மாவை தனியாக அழைத்துச் சென்று க்ரிஷ் அத்தையை பார்க்கணும்னு ரொம்ப ஏங்குறான். அவங்க ஏன் வரவே மாட்றாங்க நீங்க போன் பண்ணி குடுங்க நான் பேசுறேன் என்று சொல்ல மீனா ‘’நீங்க கோபமா பேசுவீங்க... நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன்’’ என்று சொல்கிறாள்.
ஒரு கட்டத்தில் ரோகிணியின் அம்மா ‘’அவ இங்க வர மாட்டா.. அவளுக்கு இங்கு வர பிடிக்காது. என் பொண்ணு தான் கிரஷ்க்கு அம்மா. அவளுக்கு 19 வயசு இருக்கும்போது வயசான ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். குழந்தை பிறந்ததும் அவர் கொஞ்ச நாள்ல இறந்து போயிட்டாரு’’ என்று சொல்கிறாள். இதைக் கேட்டு முத்து மீனா அதிர்ச்சி அடைகிறார்கள்.
ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவருமா?