Siragadikka Aasai : காணாமல் போன முத்து... அண்ணாமலையால் பதறும் மீனா, விஜயாவின் தில்லாலங்கடி!
பாட்டியின் பிறந்தநாளுக்காக ஒவ்வொருவரும் என்ன கிஃப்ட் தரலாம் என பிளான் போடுகிறார்கள்.
விஜயா ஒரு செகண்ட் ஹேண்ட் ஐடியா பிடிக்கிறார்.
முத்து நீண்டநேரமாகியும் காணவில்லை என மீனாவும், அண்ணாமலையும் பதறுகிறார்கள்.
மனோஜின் கஞ்சத்தனம்!
பாட்டியின் ஸ்பெஷல் கிஃப்ட்டை வாங்குவதற்காக என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று இருவரும் யோசித்துக் கொண்டிருக்க திடீரென மனோஜுக்கு ''பாட்டி நாங்க சின்ன வயசா இருக்கும்போது ஒரு நவரத்தின மாலை போட்டுக்கிட்டு இருந்தாங்க... அது காணாம போயிடுச்சு... அதே மாதிரி ஒரு கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம்'' என்று சொல்ல ரோகிணி ''சூப்பர் ஐடியா'' என்று சொல்கிறாள். நவரத்தின மாலை வாங்குவதற்காக இருவரும் கிளம்ப மனோஜ் ''பாட்டிக்கு வாங்கிய புடவையை எடுத்துக்க... அது ரிட்டன் பண்ணிடலாம் பணம் மிச்சமாகும்'' என்று சொல்ல ரோகிணி மனோஜின் கஞ்சத்தனத்தை பார்த்து முறைக்கிறாள்.
ஐஸ் வைக்கும் விஜயா!
விஜயா அண்ணாமலையிடம் ''உங்க அம்மாவுக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுக்க போறீங்க?'' என்று கேட்க ''அதான் அம்மா எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்களே'' என்று சொல்ல ''அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க... நீங்க சர்ப்ரைஸா வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க'' என்று சொல்கிறாள். ''நீயா இப்படியெல்லாம் பேசுற'' என்று அண்ணாமலை ஆச்சரியப்பட ''உங்களுக்கு உங்க அம்மா மேல பாசம் இல்லாம இருக்கலாம்... எனக்கு என் அத்தை மேல பாசம் இருக்கு'' என்று சொல்கிறாள். அண்ணாமலை ஸ்பெஷல் கிஃப்டுக்காக விஜயா அடி போடுவதை புரிந்து கொண்டு மடக்கி மடக்கி கேள்வி கேட்க ''என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க'' என்று சமாளித்துவிட்டு வெளியே போகிறாள்.
ரவி - ஸ்ருதி ஐடியா!
ரவியும், ஸ்ருதியும் பாட்டிக்கு என்ன கிஃப்ட் கொடுப்பது என யோசிக்கின்றனர். ரவி ''உனக்கு பாட்டித்தரப்போற அந்த கிஃப்ட் வேணுமா'' என்று கேட்க ''எனக்கு அந்த கிப்ட் எல்லாம் வேணாம்... ஆனா எப்பவும் சின்ன வயசுல இருந்து போட்டின்னு வந்தா நான் தான் ஜெயிப்பேன். அதனால இந்த முறையும் நான் தான் ஜெயிக்கணும்னு நினைக்கிறேன்'' என்று சொல்கிறாள். ரவியிடம் ''நீ கேக் பண்ணு கண்டிப்பா பாட்டிக்கு பிடிக்கும். என்னையே உன்னுடைய சமையல் திறமையை வெச்சுதானே கரெக்ட் பண்ண'' என்று சொல்கிறாள்.
விஜயாவின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!
விஜயா பார்வதிக்கு போன் போட்டு ''என் மாமியாருக்கு 80-வது பிறந்தநாள்... அவங்களுக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கணும்... அதையும் பெருசா கொடுக்கணும்... உன் வீட்ல உன் பையனோட ரூம்ல ஒரு டிவி இருக்குல்ல அது யூஸ் பண்ணாம தானே இருக்க'' என்று கேட்க பார்வதி ''ஆமா அதோட பாக்ஸ் கூட அப்படியே இருக்கு'' என்று சொன்னதும் ''அதை நல்லா தொடச்சி கிளீன் பண்ணி பேக் பண்ணி எடுத்துட்டு வா... அதையே நான் என் மாமியாருக்கு கிஃப்ட்டா கொடுத்துடறேன்... அவங்க கொடுக்கிற ஸ்பெஷல் கிஃப்ட்ல உனக்கும் பங்கு தரேன்'' என்கிறாள்.
சீதா கேட்ட கேள்வி!
மீனா போனை கேட்டதால் அதை கொண்டு வந்து கொடுக்க வந்த சீதா ''கடைக்கு பூ கொடுக்கப் போயிருந்தேன்... அப்போ நீயும் மாமாவும் ஏதோ கவரிங் நகை எடுத்துட்டு வந்து பிரச்சனையாகிட்டதா சொன்னாங்க... என்னாச்சு'' என்று கேட்க ''அதெல்லாம் ஒன்னும் இல்ல... நாங்கதான் தெரியாம கவரிங் நகை எடுத்துட்டு போயிட்டோம்'' என்று சொல்லி சமாளிக்கும் மீனா ''இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லிடாத'' என்று சொல்லி அனுப்புகிறாள்.
பாட்டியை வைத்து வீடியோ எடுக்கும் மீனா!
போன் வந்ததும் மீனா பாட்டியை வைத்து வீடியோ எடுக்கிறார். இதைப் பார்த்ததும் விஜயா ''வீடியோல நான் தெரியணும்'' என்று ஓடிவந்து ''அத்தை ஏதாச்சும் வேணுமா... டீ காபி போட்டு எடுத்துட்டு வரவா'' என்று கேட்க பாட்டி ''உன் கிட்ட எதுவும் கேட்கலையே'' என்று பல்பு கொடுத்து அனுப்புகிறார். அதன் பிறகு பாட்டியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ''80-வது பிறந்தநாள் கொண்டாடுறீங்க... இந்த 80 வருஷ வாழ்க்கையில நடந்த மறக்க முடியாத விஷயங்கள் பத்தி சொல்லுங்க'' என்று கேட்டு வீடியோ எடுக்கிறாள்.
முத்துவை பற்றி விசாரிக்கும் அண்ணாமலை!
அண்ணாமலை ''முத்து எங்கம்மா... எங்க அம்மா வந்தா வீட்டிலேயே இருப்பான்.. இப்ப எங்க போனான்... போன் பண்ணா கூட எடுக்க மாட்றான்'' என்று மீனாவிடம் கேட்க ''வந்துடுவாரு மாமா... கார் ஓட்டிட்டு இருப்பாரு'' என்கிறாள். ''நான் போன் பண்ணா கார் ஓரம் கட்டிட்டு உடனே எடுத்து பேசிடுவான்... நீ போன் பண்ணு'' என்று சொல்ல மீனா போன் பண்ண அப்போதும் முத்து போனை எடுக்காமல் இருக்கிறான். இதைப்பார்த்த விஜயா ''எங்கேயாவது குடிக்க போயிருப்பான்... நாலு காலோட வருவான் பாருங்க'' என்று நக்கலாக பேசுகிறாள். அண்ணாமலை ''அம்மாவோட பிறந்தநாள் அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்... ஆனா முத்து எதுவும் தப்பு பண்ணி இருக்க மாட்டான்'' என்று மனதுக்குள் இருக்கும் பயத்தை சொல்லிக் கொள்கிறார்.
குழம்பும் மீனா!
முத்து எங்கே என விசாரிக்கும் பாட்டி ''விஜயாதான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா... அவதான் ஏதாவது திட்டினாளா'' என்று விஜயாவை கூப்பிட்டு விசாரிக்க விஜயா ''அவன் ஆள் இல்லனா அதுக்கு நான் என்னடி பண்ணுவேன்'' என்று மீனாவிடம் கோபப்படுகிறாள். 'சோகமாக இருந்த முத்து ஒருவேளை குடிக்க போயிட்டாரோ' என்று நினைத்து மீனாவும் பதறத் தொடங்குகிறாள்.
முத்து நீங்க எங்கதான் போனீங்க?!