'சிறகடிக்க ஆசை' இன்று : மனோஜை அலற விட்ட மொட்டை கடுதாசி… புது காரில் முத்து, மீனா!
வீம்பு பிடிக்கும் அண்ணாமலை!
நாச்சியார் பாட்டி வெட்கப்பட முத்து ‘’என்ன பாட்டி வெட்கப்படுற… நான் இதை பார்த்ததே இல்லையே’’ என்று சொல்ல நாச்சியார் பாட்டி ‘’நான் காதலிக்கல.. அவர் தான் என் பின்னாடியே சுத்தினாரு’’ என்று காதல் கதையை சொல்ல விஜயா ‘’ஆமாம் பெரிய காதல் காவியம்’’ என சலித்து கொள்கிறாள்.
ஸ்ருதி ‘’சரி ஆன்ட்டி அங்கிளுக்கு ஊட்டி விடுங்க’’ என்று சொல்ல அண்ணாமலை வேகவேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு ‘’நான் சாப்பிட்டுட்டேன் எனக்கு போதும்’’ என்று எழுந்து செல்கிறார். நாச்சியார் பாட்டி ‘’உங்க அம்மாவையும் அப்பாவையும் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வாடா’’ என்று சொல்ல சரி பாட்டி என்று சொல்கிறான்.
மீனா கொடுத்த ஐடியா!
முத்து கார் எடுக்க போவதாகச் சொல்ல மீனா ‘’அத்தை மாமாவை கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்’’ என்று சொல்கிறாள். முத்து ‘’அப்போ கோயிலுக்கு போய்ட்டு வந்து கார் எடுக்க போறேன்’’ என்று கிளம்ப மீனா ‘’கார் எடுத்துட்டு வந்து அத்தை மாமாவை கூட்டிட்டு போகலாம்’’ என்று ஐடியா கொடுக்கிறாள்.
மொட்டை கடுதாசியால் பித்து பிடித்த மனோஜ்!
மனோஜ் கடையில் இருக்க ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்க மனோஜ் அதை பிரித்து படிக்க அதில் ‘’உங்களை சுத்தி இருக்கவங்களால் பிரச்சனை வர போகிறது'’ எழுதி இருக்க மனோஜ் அதிர்ச்சி அடைகிறான். லெட்டரை கொடுத்தவரும் காணாமல் போய் விட மனோஜ் அவரை தேடி வரும் அலைகிறான். ‘’யாரால பிரச்சனை வரப் போதுனு தெரியலையே’’ என்று புலம்புகிறான். ரோகிணி பிராங்க் பண்ணி இருப்பாங்க என்று சொல்லியும் மனோஜ் பயப்படுகிறான். வித்யா மீதும் கடையில் வேலை செய்பவர்கள் மீதும் சந்தேகம் அடைகிறான்.
குழப்பத்தில் ரோகிணி!
ரோகிணி ‘இந்த லெட்டரை யார் அனுப்பி இருப்பா’ என பயப்பட ‘’ஜீவாவா இருக்கலாம்’’ என்று சொல்கிறாள்.
புது காருடன் வந்த முத்து!
முத்து புது காருடன் வீட்டுக்கு வர மீனா எல்லோரையும் கூப்பிட ‘’ஆமாம்… ஏரோபிளேன் வாங்கிட்டு வந்துட்டான்’’ என்று எலக்காரமாக பேச பாட்டி ஏரோபிளேனை உன் தலை மேலயா நிறுத்துவான்’’ என்று நோஸ்கட் செய்கிறார். அண்ணாமலை விஜயாவை கோயிலுக்கு அழைத்துச் செல்ல அண்ணாமலை முன்னாடி சீட்டிலும் விஜயா பின்னாடி சீட்டிலும் உட்காரப் போக நாச்சியார் பாட்டி மீனாவை முன்னாடியும் அண்ணாமலையை பின்னாடியும் உட்கார வைக்கிறார்.
கோயிலுக்கு போய்விட்டு வந்தும் அண்ணாமலை, விஜயா பேசிக் கொள்ளாமல் இருக்க முத்து காரை தாறுமாறாக ஓட்டி இருவரையும் இடிக்க வைக்க ஒரு கட்டத்தில் அண்ணாமலை விஜயாவிடம் தள்ளி உட்காரு கையை பிடிச்சிக்க என்று சொல்ல விஜயாவும் பிடித்து கொள்ள முத்து, மீனா சந்தோஷப்படுகிறாள்.
மனோஜுக்கு வரப்போகும் பிரச்சனை என்னவோ?!