Siragadikka Aasai : பாட்டிக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முத்து… மீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
நீடித்துக்கொண்டே போன முத்து எங்கே என்கிற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது!
பாட்டியின் 30 வருட நண்பர்களை அழைத்துவந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான் முத்து.
மீனாவும் பதிலுக்கு பாட்டிக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கொடுக்கிறாள். மீனா கொடுக்கும் சர்ப்ரைஸ் என்ன?
பாட்டிக்கு கிஃப்ட் கொடுத்த குடும்பம்!
மனோஜ் கொடுத்த கிஃப்டை பார்த்து பாட்டி நல்லா இருக்கு என்று சொன்ன பிறகு ரவி ‘’உங்களுக்கு நான் கொடுக்குற கிப்ட் இந்த கேக்கு தான். உங்களுக்காக நானே என் கையால பண்ணது’’ என்று சொல்ல பாட்டி ‘’நான் கேக் சாப்பிட மாட்டேன்டா’’ என்று சொல்கிறார். இந்த மாதிரி ஷுகர் இருக்க உங்களுக்காக வித்தியாசமா பண்ண கேக்கு தான் இது… எங்க ஹோட்டல்ல கூட அறிமுகப்படுத்த போறோம், பேரு நாச்சியார் கேக்’’ என்று சொல்கிறான்.
உடனே விஜயா ‘’ஏன் உன் அப்பா அம்மா பேர்ல வைக்க மாட்டியா’’ என்று கேட்க ‘’உனக்கு பிறந்தநாள் வரும் போது வைப்பான்’’ என்று அண்ணாமலை பதிலடி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து சுருதி கிஃப்டாக போனை கொடுக்கிறாள்.
பல்பு வாங்கிய விஜயா!
அடுத்ததாக விஜயா பார்வதியிடம் நான் சொன்ன மாதிரியே சொல்லணும் என்று சொல்லி கூட்டி வந்து பாட்டிக்கு டிவி கிப்ட்டாக கொடுக்க பார்வதி எந்த மருமகளும் மாமியாருக்கு இவ்வளவு பெரிய கிப்ட் கொடுக்க மாட்டாங்க என்று சொன்னதும் பாட்டி ‘’பரவாயில்லையே அப்படியே விஜயா சொல்லிக் கொடுத்தது சொல்லிட்ட’’ என்று பல்பு கொடுக்கிறார்.
ஸ்பெஷல் கிஃப்ட் கேட்ட மனோஜ்!
வீட்ல இருக்க எல்லாரும் உங்களுக்கு கிஃப்ட் கொடுத்தாச்சு... உங்களுடைய ஸ்பெஷல் கிஃப்ட் யாருக்கு பாட்டி என்று மனோஜ் கேட்க இருடா என் பேரன் முத்து வந்துடட்டும் என்று சொல்கிறார். ‘’அவன் நாளைக்கு காலையில தான் வருவான், அதுவும் வெறும் கையை வீசிட்டு தான் வருவான்’’ என்று சொல்கிறான் மனோஜ்.
மாஸ் என்ட்ரி கொடுத்த முத்து!
மனோஜ் இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘’டேய் தொழிலதிபரே நீ நினைக்கிறதெல்லாம் நடக்காதுடா’’ என்று மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் முத்து. அதன் பிறகு மீனா ‘’எங்கங்க போயிட்டீங்க போனை கூட எடுக்கல’’ என்று கேட்க ‘’போன் சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு’’ என்று சொல்கிறான். அதன் பிறகு பாட்டி முத்துவை கூப்பிட்டு காதை பிடித்து ‘’நீ என்ன அவ்வளவு வளர்ந்துட்டியா’’ என்று கண்டிக்கிறார்.
மனோஜ் கேட்ட கேள்வியும் முத்து சொன்ன பதிலும்!
மனோஜ் ‘’நாங்க எல்லாரும் பாட்டிக்கு கிஃப்ட் கொடுத்துட்டோம்… அங்க பாரு பாட்டியோட கழுத்துல... அது நான் கொடுத்த கிஃப்ட்… நீ என்ன வாங்கிட்டு வந்திருக்க’’ என்று கேட்க முத்து ‘’நான் எதுவும் வாங்கிட்டு வரலையே’’ என்று சொல்கிறான். உடனே மனோஜ் ‘’பாத்தீங்களா பாட்டி நான் தான் சொன்னேன்ல வெறும் கையோடு தான் வருவான்னு’’ எனச் சொல்ல ‘’அவன் என்கூட இருந்தாலே போதும்’’ என்று நாச்சியார் பாட்டி பதில் சொல்கிறார்.
முத்து கொடுத்த சர்ப்ரைஸ்!
பிறகு முத்து ‘’உங்களுக்காக நான் எதுவும் வாங்கிட்டு வரல.. ஆனா, கூட்டிட்டு வந்து இருக்கேன்’’ என்று சொல்லி ‘’பாட்டிஸ் வாங்க’’ என்று சொன்னதும் நாச்சியார் பாட்டியின் சிறு வயது தோழிகள் இருவர் உள்ளே என்ட்ரி கொடுக்கின்றனர்.
அவர்களைப் பார்த்த பாட்டி ‘’30 வருஷம் ஆச்சு உங்கள பாத்து’’ என்று கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு சந்தோஷப்படுகிறார். ‘’என் வாழ்க்கையிலேயே ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்’’ என்று குழந்தையாகவே மாறி விடுகிறார்.
குடும்பத்தை அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்ட நாச்சியார்!
பிறகு நாச்சியார் பாட்டி தன்னுடைய குடும்பத்தை அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுகிறார். விஜயாவை பார்த்த பாட்டிகள் ‘’கல்யாணத்தின் போது ஒல்லியா இருந்தா… இப்ப என்ன ஊதி போய் கிடக்கிறா’’ என்று கிண்டல் அடிக்கின்றனர். அதேபோல் மனோஜை அறிமுகப்படுத்தியதும் ‘’ஆமா இவன் தானே துணி கூட இல்லாம சுத்திக்கிட்டு இருப்பான்’’ என்று சொன்னதும் ரோகிணி உட்பட மொத்த குடும்பமும் சிரிக்கிறது. அதன் பிறகு மீனா, சுருதி, ரோகிணி என மூவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார் பாட்டி.
சோகமான மனோஜ், ரோகிணி சொன்ன வார்த்தை!
முத்துவின் கிஃப்டால் ‘’ஸ்பெஷல் கிஃப்ட் அவனுக்குத்தான்’’ என்று மனோஜ் சோகமாக, ரோகிணி ‘’நானும் இதை எதிர்பார்க்கல… ஆனா மீனா எதுவுமே செய்யலையே… அதனால கிஃப்ட் அவங்களுக்கு கிடைக்காது’’ என்று சொல்கிறாள்.
மீனா கொடுத்த ஷாக்!
இதையடுத்து மீனா முத்துவிடம் ‘’நீங்க இப்படி ஒரு சர்ப்ரைஸ் தருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை’’ என்று சொல்வதோடு ‘’நானும் பாட்டிக்கு ஒன்னு பண்ணி வச்சிருக்கேன்’’ என்று வீடியோ விஷயத்தை சொல்கிறாள். பிறகு முத்து அதை டிவியில் போட பாட்டி தனது 80 வருட வாழ்க்கை பயணம் குறித்து பேசுவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை… லாலலா..!