ஃப்ரிட்ஜுக்குள் ரோகிணியின் மலேசிய மாமா... ஒன்றுகூடிய மீனா, முத்து, மனோஜ் - 'சிறகடிக்க ஆசை' ஹைலைட்ஸ்
சுருக்கம்
மனோஜின் கடைக்குள் ரோகிணியும், வித்யாவும் இருக்க மலேசிய மாமா உள்ளே வந்து மீனா தன்னை பார்த்துவிட்ட தகவலை சொல்கிறார்.
முத்து, மீனா, மனோஜ் என மூவருமே கடைக்குள் வர ரோகிணியும், வித்யாவும் மலேசிய மாமாவை ஃப்ரிட்ஜுக்குள் ஒளித்துவைக்கிறார்கள்.
மலேசிய மாமா மாட்டுவாரா, இல்லையா?
காட்சி 1 : ரோகிணியைப் பதறவைக்கும் மலேசிய மாமா
மனோஜ் கடையில் வேலை செய்பவர்களிடம் கண்டிஷனாக நடந்து கொள்ள அதை பார்த்து ரோகிணியும், வித்யாவும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு மனோஜ் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரை பார்ப்பதற்காக வெளியே கிளம்பிச் செல்கிறான். அந்த நேரம் பார்த்து மலேசிய மாமா கடைக்குள் வர ரோகிணி மற்றும் வித்யா அதிர்ச்சி அடைகின்றனர். ‘’ஏன் இங்க வந்த’’ என ரோகிணி கேட்க ‘’மீனா என்ன பார்த்துட்டு துரத்திக்கிட்டு வரா… அதான் எஸ்கேப் ஆகி வந்தேன்’’ என்று சொல்கிறார். ‘’நல்ல வேலை எதுவும் சொல்லாம தப்பிச்சிட்ட’’ என்று வித்யா நிம்மதியடைய ரோகிணியோ அய்யோ ‘’மீனாவை வேற நான் பூ எடுத்துட்டு வரச் சொல்லிட்டேனே’’ என்று என்று பதறுகிறாள்.
இந்த நேரம் பார்த்து சரியாக மீனாவும் கடைக்கு வந்து விட வித்யா மலேசியா மாமாவை கூட்டிக்கொண்டுபோய் உள்ளே மறைந்துகொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் மனோஜும் கடைக்கு வந்து ‘’அப்புறமா பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க’’ என்று சொல்லி ‘’பொருளுங்க ஸ்டாக் எவ்வளவு இருக்கு’’ என கணக்கு எடுக்கப்போக ரோகிணிக்கு பதட்டம் இன்னும் அதிகமாகிறது.
காட்சி 2 : மனோஜின் கடைக்குள் முத்துவின் என்ட்ரி!
முத்துவும் செல்வத்தோடு கடைக்கு வர அதை பார்த்து ரோகிணி பேரதிர்ச்சி அடைகிறாள். வித்யா மலேசியா மாமாவை கூட்டிச்சென்று ஒரு ஃபிரிட்ஜுக்குள் மறைத்து வைக்கிறாள். பிறகு முத்து ஃபிரிட்ஜை பார்க்க வந்ததாக சொல்ல மனோஜ் ‘’வாங்குவீங்களா இல்ல சும்மா ஏசி காத்து வாங்கிட்டு போயிடுவீங்களா’’ என்று நக்கலாகப் பேச செல்வம் ‘’வாங்கதான்பா வந்தோம்... ஒரு நல்ல ஃபிரிட்ஜா காட்டு’’ என்று சொல்கிறான்.
உடனே பதறும் ரோகிணி ‘’இங்க கேட்டலாக் இருக்கு… அதுல எந்த ஃபிரிட்ஜ் வேணும்னு பாருங்க’’ என்று சொல்ல ‘’எதுக்கு அதெல்லாம் பார்க்கணும்… நேரா பாத்தாதானே புடிச்சது வாங்க முடியும்’’ எனும் முத்து செல்வத்தை ஃபிரிட்ஜ் இருக்கும் இடத்துக்கு நேராகக் கூட்டிப்போகிறான். இதனால் வித்யா ரோகிணியிடம் வந்து ‘’என்னடி ஃப்ரிட்ஜை எல்லாம் திறந்து பார்க்கிறாங்க… அப்ப நீ மாட்டிக்குவ போலையே’’ என்று சொல்லி ஃபிரிட்ஜுக்குள் மாமாவை மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறாள்.
காட்சி 3 : மாட்டிக்கொள்வாரா மலேசிய மாமா
மலேசியா மாமா மறைந்து இருக்கும் ஃபிரிட்ஜைப் பார்த்த செல்வம் ‘’இது நல்லா இருக்கு… இது புடிச்சிருக்கு’’ என்று சொல்ல முத்து அதை திறந்து பார்க்கப்போக வித்யா ஓடி வந்து ‘’இந்த ஃபிரிட்ஜ திறந்து பார்க்காதீங்க அந்த பக்கம் போய் பாருங்க’’ என்று சொல்ல முத்து ‘’ஏன் திறந்து பார்க்ககூடாது’’ என்று கேட்க, மனோஜும் ரோகிணியிடம் ‘’இவ என்ன பண்ணிட்டு இருக்கா… திறந்து பார்க்கட்டும்… விட சொல்லு’’ என்று சொல்கிறான்.
ரோகிணி சட்டென சமாளித்தவளாக ‘’இல்ல… அந்த ஃபிரிட்ஜை அவ வாங்கிக்கிறதா சொல்லி இருக்கா’’ என்கிறாள். முத்துவோ ‘’செல்வத்துக்கு அதான் புடிச்சிருக்கு… 3000 பணம் கொடுப்பான் வாங்கிக்கோ.. மீதி இன்ஸ்டால்மென்ட்ல கட்டிடுவான்’’ என்று சொல்ல மனோஜ் ‘’இன்ஸ்டால்மென்ட்லலாம் கொடுக்குறது இல்ல’’ என்று சொல்கிறான். ரோகிணி ‘’யாருக்காகவும் நம்ம பாலிசியை மாத்த வேணாம்… வித்யா முழு பணத்தையும் கொடுக்கிறதா சொல்லி இருக்கா’’ என்று சொன்னதும் மனோஜ் ''அப்படின்னா ஃபிரிட்ஜ் வித்யாவுக்குத்தான்'' என்கிறான்.
காட்சி 4 : முத்து Vs மனோஜ்
இதனால் முத்து கோபப்பட்டு மனோஜிடம் சண்டைக்குப்போக செல்வம் ‘’வேண்டாம் விடுப்பா நாம வெளியில வேற கடையில வாங்கிக்கலாம்’’ என்று அழைத்துச் செல்கிறான். பிறகு மனோஜ் வெளியில் கிளம்பிச் சென்றுவிட மலேசியா மாமா வெளியே வந்து ரோகிணியிடம் ‘’நீ எனக்கு மணிரத்தினம் படத்துல நடிக்க வாய்ப்புலாம் வாங்கித் தரப்போறது இல்ல… உன் வாழ்க்கையில ஏதோ ஒரு பிரச்சனை அதுக்காக என்னை நடிக்க வச்சு சமாளிச்சிட்டு இருக்க… எனக்கு அது நல்லாவே தெரிஞ்சிபோச்சு'’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
‘’ஆனா என்னால உன் வாழ்க்கையில நல்லது நடந்தா எனக்கு சந்தோஷம்தான்… நான் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்… கவலைப்படாத’’ என்று சொல்லிவிட்டு மலேசியா மாமா கிளம்பிச் செல்கிறார்.
காட்சி 5 : மீனாவின் கேள்வியும், முத்துவின் சந்தேகமும்!
வீட்டுக்கு வந்த மீனா முத்துவிடம் ‘’மலேஷிய மாமாவை பார்த்ததாகச் சொல்ல’’ முத்துவோ ‘’அவர் இங்க எங்க இருக்கார்… அவரை எப்படி பார்க்க முடியும்?’’ என்று கேட்கிறான். ‘’இல்லைங்க பார்க்க அவரை மாதிரிதான் இருந்துச்சு… என்ன பார்த்ததும் அவர் வேகமா வண்டியில ஏறி மறைஞ்சிக்கிட்டாரு… நான் கடைக்கு போனப்புறம் ரோகிணிகிட்ட கூட இதைப்பத்தி கேட்டேன். நான் மாமாபத்தி கேட்டதும் அவ முகமே மாறி போச்சு... அதை நான் கவனிச்சேன்’’ என்று சொல்கிறாள்.
முத்து மீனாவிடம் ‘’ஆரம்பத்துல இருந்தே எனக்கு அந்த மலேசியா மாமா மேல ஒரு சந்தேகம் இருக்கு. மலேசியா, துபாய்னு இந்த பார்லர் அம்மா தொடர்ந்து ஏதோ ஒரு கதையை சொல்லிக்கிட்டே இருக்கு... இதுல ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு’’ என்று மனதுக்குள் இருப்பதை பேச இதையெல்லாம் ஒட்டு கேட்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.
முத்துவின் சந்தேகம் வலுக்குமா, ரோகிணி அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்கிற கேள்விகளோடு இன்றைய எபிசோட் முடிவடைந்திருக்கிறது.