‘சிறகடிக்க ஆசை’ இன்று : பாட்டி கொடுத்த ரொமான்டிக் டாஸ்க்… சின்ன சின்ன தோசையால் சந்தோஷமான குடும்பம்!
விஜயாவை நொறுக்கும் பாட்டி!
நாச்சியார் பாட்டி விஜயாவிடம் ‘’நீ சொன்னா தான் அவன் கேட்பான் சொல்லு’’ என்று சொல்ல விஜயாவும் ‘’டேய் பணத்தை கொடுத்துடு... அந்த பணத்தாலதானே இவ்வளவு பிரச்சனை’’ என்று சொல்கிறாள். உடனே மனோஜ் ரோகிணியைப் பார்க்க முத்து ‘’நகையை திருடும் போது உன் பொண்டாட்டி கிட்ட கேட்டா திருடின’’ என்று பதிலடி கொடுக்கிறான். ரோகிணி ‘’பணத்த கொடுத்துடுறோம்’’ என்று ஒப்புக் கொள்கிறாள். அடுத்து பாட்டி ‘’அவன் கொடுப்பானானு எனக்கு தெரியல அவன்கிட்ட இருந்து பணத்தை வாங்கி கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு’’ என்று விஜயாவிடம் பொறுப்பை கொடுக்க அவள் அதிர்ச்சி அடைகிறாள்.
மனோஜ் கொடுத்த அதிர்ச்சி!
பிறகு ரோகிணி ரூமுக்குள் வர பின்னாடியே மனோஜ் ஓடி வந்து ‘’மாசா மாசம் எப்படி பணம் கொடுக்கிறது? எதுக்கு ஓகே சொன்ன’’ என்று கேட்க ‘’கொடுத்து தான் ஆகணும்… பாத்துக்கலாம்’’ என்று சொல்கிறாள். விஜயா ரூமுக்குள் வர மனோஜ் ‘’என்னம்மா பணம் கொடுக்க சொல்லிட்டீங்க எப்படி கொடுக்கிறது’’ என்று கேட்க விஜயா ‘’நீதானே எடுத்த? நீ தான் கொடுக்கணும்’’ என்கிறாள். அதன் பிறகு ரோகிணியிடம் ‘’உங்க அப்பா கிட்ட பணத்தை ஏற்பாடு பண்ண சொல்லுமா அப்பதான் நாம இந்த வீட்ல நிம்மதியா இருக்க முடியும்’’ என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.
மனோஜ் ‘’அவர்தான் ஜெயில்ல இருக்காரே’’ என்று சொல்ல ‘’கடை திறக்கிறதுக்காக பணம் அனுப்ப முடிஞ்சதுல அந்த மாதிரி அனுப்புவாரு’’ என்று விஜயா திட்டுகிறாள். பிறகு மனோஜிடம் ‘’உன்னை பெத்ததுக்காக நான் கஷ்டப்படுறேன், உன்னை கட்டிக்கிட்டதுக்காக அவளும் கஷ்டப்படுறா’’ என்று கோபப்பட ‘’எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்’’ என்று மனோஜ் அதிர்ச்சி கொடுக்கிறான்.
‘’நீங்க என்னை பெத்ததோட நிறுத்தி இருக்கலாம்… எதுக்கு அந்த முத்துவை பெத்துகிட்டீங்க’’ என்று கேள்வி கேட்க ‘’அவனை பெத்துக்கிட்டது தப்பு இல்ல... உன்னை பெறாமலேயே இருந்திருக்கணும்’’ என்று ஆவேசப்படுகிறாள்.
கடுப்பான ரோகிணி!
விஜயா வெளியே போனதும் மனோஜ் ‘’ஜீவா கொடுத்த பணத்துல 9 லட்சம் பேலன்ஸ் இருக்கு.. அதை எடுத்து கொடுத்துடலாமா’’ என்று சொல்ல ரோகிணி ‘’பிசினஸ் பண்ண கையில பணம் வேணும்… அத எடுக்குறது பத்தி யோசிக்கக்கூட யோசிக்காத’’ என்று கடுப்பாகிறாள். ‘’உங்க அப்பாவோட பணத்தை மூணு ஷேரா போட்டா நீ 18 லட்சம்தான் கொடுக்கணும்’’ என்று சொல்கிறாள். ‘’பணத்தை கொடுக்கும்போது அதை பேசிக்கலாம்’’ என்றும் ஐடியா கொடுக்கிறாள்.
பாட்டி கொடுத்த டாஸ்க்!
முத்து ‘’கார் விஷயமா வெளியே போகணும்’’ என்று சொல்ல மீனா ‘’உங்களுக்கு தோசை ஊத்தி வைக்கிறேன் வாங்க’’ என்று சொல்ல விஜயா சீக்கிரம் சமையல் பண்ணு… எல்லாரும் வேலைக்கு போகணும்’’ என்று சொல்ல பாட்டி ‘’நீ வீட்ல தானே இருக்க’’ என்று கேள்வி கேட்கிறார். ‘’அவ புருஷனுக்கு அவ சமைக்கட்டும் உன் புருஷனுக்கு நீ சமைச்சு கொடு’’ என்று சொல்கிறார். ‘’நானா’’ என்று விஜயா அதிர்ச்சியடைய ‘’உன் புருஷனுக்கு நீ தான் செய்யணும் பக்கத்து வீட்டு பொம்பளையா வந்து செஞ்சி கொடுப்பா’’ என்று கேள்வி கேட்கிறார்.
மனோஜ் ‘’அப்போ எங்களுக்கு’’ என்று கேட்க ‘’ஏன் உனக்கு பொண்டாட்டி இல்லையா’’ என்று பாட்டி ரோகினியை செய்து கொடுக்க சொல்கிறார். ரோகிணி ‘’நானா’’ என்று ஷாக்காக ‘’பொண்டாட்டிங்க புருஷனுக்கு செஞ்சு கொடுங்க’’ என்று டாஸ்க் கொடுக்கிறார். உடனே முத்து ‘’அப்போ அவங்களுக்கு யார் செஞ்சு கொடுப்பா’’ என்று கேள்வி கேட்க ‘’புருஷனுங்க செஞ்சு கொடுங்க’’ என்று சொல்கிறார்.
பதறிய மனோஜ், நோஸ்கட் கொடுத்த முத்து!
மனோஜ் ‘’பாட்டி எனக்கு தோசை எல்லாம் சுட வராது’’ என்று சொல்ல முத்து ‘’ஆமா அவனுக்கு நகை, பணம்தான் சுட வரும்’’ என்று கிண்டல் அடிக்க சுருதி சிரித்து விடுகிறாள்.
முதலாவதாக விஜயா மற்றும் அண்ணாமலை கிச்சனுக்கு சென்று தோசை போட அதை வீட்டில் உள்ள மற்ற எல்லோரும் வேடிக்கை பார்க்க பாட்டி ‘’அங்க என்ன திருவிழாவா நடக்குது வாங்கடா’’ என்று திட்டுகிறார். இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் தோசை போடுகின்றனர். மனோஜ் தோசை போட தெரியாமல் தடுமாற ரோகிணி திட்டுகிறாள்.
அதன் பிறகு ரவி மற்றும் ஸ்ருதி தோசை போட ரவி ஸ்ருதிக்கு தோசை ஊற்ற சொல்லிக் கொடுத்து பிறகு தோசையை திருப்பி போட சொன்னதும் அவள் தவாவை திருப்பி போட ரவி ‘’நீ கிச்சன் பக்கமே வராத அதுதான் எனக்கு நல்லது’’ என துரத்தி விடுகிறான். இறுதியாக முத்து மற்றும் மீனா என இருவரும் ஜோடியாக சென்று தோசை சுடுகின்றனர்.
ரொமான்டிக்காக மாறிய வீடு!
எல்லோரும் சாப்பிட உட்கார பாட்டி ‘’அவங்க சுட்டதை அவங்களே சாப்பிடக் கூடாது… புருஷன் பொண்டாட்டிக்கு ஊட்டனும்… பொண்டாட்டி புருஷனுக்கு ஊட்டணும்’’ என்று அடுத்த டாஸ்க்கை சொல்கிறார்.
அதன் பிறகு எல்லோரும் மாறி மாறி ஊட்டிக் கொள்ள விஜயா அண்ணாமலையை பார்க்க அண்ணாமலை ‘’அவங்க தான் இளஞ்சோடிங்க, நாம இல்ல சாப்பிடு’’ என்று பல்பு கொடுக்கிறார். ஸ்ருதி ‘’வீட்டையே ரொமான்டிக் ஆகிட்டீங்க, உங்களுக்கு லவ் மேரேஜா’’ என்று கேட்க நாச்சியார் பாட்டி வெட்கப்படுகிறார்.
பாட்டி வந்தாலே டாஸ்க்குதான்!